கிறிஸ்துவர்களும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்; மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Share this page with friends

10 Mar 2021

மலேசியாவில் கிறிஸ்துவர்கள் தங்கள் இறை வழிபாட்டின்போதும் சமய நூல்களிலும் அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று அந்நாட்டின் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சமயம் தொடர்பாக அல்லாஹ் என்ற சொல்லை கிறிஸ்தவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று மலேசிய அரசாங்கம் தடை விதித்தது. இந்நிலையில், இந்தத் தடையை நீக்கக் கோரி கடந்த பத்து ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றது. கிறிஸ்துவ சமயப் பதிப்புகளில் கல்வி நிமித்தம் மூன்று சொற்களைப் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

காபா (மெக்காவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலம்), பைத்துல்லா (வழிபாட்டுத் தலம்), சோலாட் (வழிபாடு) ஆகிய சொற்களை கிறிஸ்துவர்கள் தங்கள் சமயப் பதிப்புகளில் பயன்படுத்தலாம். பல நூற்றாண்டுகளாக இறைவனைக் குறிக்க அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்தி வருவதாக மலேசிய கிறிஸ்துவர்கள் தெரிவித்துள்ளனர், இருப்பினும், அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்த கிறிஸ்துவர்களுக்கு அனுமதி தந்தால் பொதுமக்களிடையே குழப்பமும் கலகமும் ஏற்படும் என்று சில முஸ்லிம் தலைவர்கள் வாதிட்டனர்.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து மலேசிய அரசாங்கம் தகவல் வெளியிடவில்லை.

Thanks: https://www.tamilmurasu.com.sg/malaysia/story20210310-62645.html

மக்கள் அதிகம் வாசித்தவை:

கிறிஸ்தவ அவதார புரிதலுக்கும் பிறமத அவதார புரிதலுக்கும் உள்ள ஒப்பற்ற உண்மைகள்
தொலைக்காட்சிப் பெட்டி என்பது! வித்யா'வின் விண் பார்வை
எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் கிறிஸ்துமஸ் வாழ்த்து...!
பிரசங்க குறிப்பு இயேசுவின் ஜெபங்கள்
அடடே.. இந்த கிறிஸ்துமஸ் குடிலை பாருங்களேன்.. செம விழிப்புணர்வு.. அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்!
Online Dating Safety and How to Recognize Red Flags
இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாகும் 7 உண்மைகள் பற்றிய தொகுப்பு
கர்த்தர் எதை எல்லாம் ஆசிர்வதிக்கிறார்
நெல்லை கத்தோலிக்க கல்லறைதோட்டம் உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய கிறிஸ்தவர்கள் சாலை மறி...

Share this page with friends