• Sunday 8 September, 2024 03:54 AM
  • Advertize
  • Aarudhal FM
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: கிறிஸ்துவ மதம் தொடர்பான கேள்வியால் சர்ச்சை

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: கிறிஸ்துவ மதம் தொடர்பான கேள்வியால் சர்ச்சை

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் கிறிஸ்துவ மதம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டதால், இந்து அமைப்பினர் புகார்களை முன்வைத்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் கிறிஸ்துவ மதம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டதால், இந்து அமைப்பினர் புகார்களை முன்வைத்துள்ளனர்.

கடந்த வாரம் தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி  தேர்வு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த தேர்வில் 15.8 லட்சம் பேர் எழுதி உள்ளனர். இந்நிலையில் இந்த தேர்வில் கிறிஸ்தவ மதம் தொடர்பான கேள்விகள் கேட்டகப்பட்டது.

கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார் என்ற கேள்விக்கு, 1) அருளப்பன், 2) யோவான், 3) சந்தாசாகிப், 4) சந்தியாசி, 5) விடை தெரியவில்லை என்று கேட்கப்பட்டது.மேலும் அடுத்த கேள்வியில் தேம்பாவணியின் பாட்டுடை தலைவன் யார் என்ற கேள்விக்கு, இயேசு, மரியாள் மற்றும் யுதாஸ் என்ற பெயர்க்ள் ஆப்ஷனாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்துவ மதம் தொடர்பான கேள்விக்கு இந்து முன்னணி கண்டனம்.