• Monday 16 September, 2024 08:21 PM
  • Advertize
  • Aarudhal FM
நாம் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருப்பது எப்படி?

நாம் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருப்பது எப்படி?

மனிதர்கள் வாழுகின்ற இந்த சமுதாயத்தில் போட்டியும், பொறாமையும், சண்டைகளும், வன்கண்களும் நிறைந்து இருக்கிறது. இதன் நடுவில் ஒரு தேவ பிள்ளை எங்கே இருந்தாலும் (பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம்) பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பது எப்படி? (1 பேதுரு 3:8,9)

செய்ய வேண்டியவைகள்:

1. ஒரு மனமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
2. இரக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
3. சகோதர சிநேகமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
4. மன உருக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
5. இணக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)

செய்யக்கூடாதவைகள்:

1. தீமைக்கு தீமை செய்யாதீர்கள். (1 பேதுரு 3:9)
2. உதாசீனத்திற்கு பதிலாக உதாசீனப்படுத்தாதீர்கள். (1 பேதுரு 3:9)

இவ்விதம் வாழ்வோம் என்றால், “எந்த சூழ்நிலையிலும் நாம் பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்போம்.”

கே. விவேகானந்த்