• Thursday 19 September, 2024 09:50 PM
  • Advertize
  • Aarudhal FM
சிங்கள் டீ

சிங்கள் டீ

ஒருகுவளைதேநீர்

தெருவில் ஒருவர் இருக்கிறார்.

இளைஞன் ஒருவர் அவருக்கு தேனீர் கொண்டு கொடுக்கிறான்.

நபர் : என்னப்பா விசேஷம்

இளை : விசேஷம் ஒண்ணும் இல்லை.. எங்க வீடு அது தான். வீட்ல டீ குடிச்சிட்டு இருந்தேன். நீங்க இங்க நிக்கறதை பாத்தேன். அதான் ஒரு டீ குடுக்கலாமேன்னு நினைச்சேன்

நபர் : ஏன்பா.. யாருக்குமே தோணாதது உனக்கெப்படி தோணிச்சு ?

இளை : எங்கப்பாவும் இப்படி ஒரு வேலை பாத்தவரு தான்… இந்த கஷ்டம் என்னன்னு எனக்கு தெரியும்..

நபர் : அப்படியா… ஆனா….பெரிய வீட்ல இருக்கீங்க ?

இளை : அப்பா என்னை நல்லா படிக்க வெச்சாரு… . பை காட்ஸ் கிரேஸ்…நான் நல்லா இருக்கேன்…

நபர் : உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லா அமையும்பா.. பெரிய இடத்துல இருந்தாலும், உன் கண்ணுக்கு சிறியவங்க தெரியறாங்க….

இளை : எங்க அப்பா சொல்லுவாரு… குப்பை பொறுக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கும்பா.. அந்த டைம்ல…. யாராச்சும் ஒரு வாய் டீ தந்தா நல்லா இருக்கும்ன்னு .. ஆனா யாரும் நெருங்கினது கூட இல்லை.. மூக்கை பொத்திட்டு போயிடுவாங்க…

நபர் : உண்மை தான்பா..

இளை : ஒரு தடவையாச்சும் அடுத்தவங்க பக்கத்துல நின்னு பாத்தா தான்.. இந்த கஷ்டம் புரியும். அதான் நான் இப்படி யாரையாச்சும் பாத்தா.. ஓடிப் போய் ஒரு டீயோ, தண்ணியோ ஏதாச்சும் குடுப்பேன்.

நபர் : ரொம்ப சந்தோசப்பா.. யாருன்னே தெரியாத எனக்கு நீ டீ குடுத்தது ரொம்ப சந்தோசம்பா…

இளை : இப்போ தான் தெரிஞ்சிடுச்சே.. இனிமே நாம தெரியாதவங்க இல்லை.. தெரிஞ்சவங்க.

நபர் : ம்ம்.. அப்பா பிள்ளையை ரொம்ப நல்லா வளர்த்திருக்காரு

இளை : பரம பிதா, அவரோட பிள்ளையை நமக்காக சாவடிச்சாரு.. அதோட ஒப்பிடும்போ நாம பண்றதெல்லாம் ஒண்ணூமே இல்லையே சார்

நபர் : அதென்னப்பா கதை

இளை : உக்காருங்க சார்.. நான் சொல்றேன். ஸ்டோரி ஆஃப் கிறிஸ்மஸ்.. அது ஒரு பெரிய பெயின்ஃபுல் ஸ்டோரி…