• Thursday 19 September, 2024 10:06 PM
  • Advertize
  • Aarudhal FM
மரியா, மார்த்தா & இயேசு

மரியா, மார்த்தா & இயேசு

மார்த்தா , மரியா & இயேசு

மார்த்தா : ஏ.. மரியா… அதோ பாரு.. இயேசு வந்திட்டிருக்காரு

மரியா : ஓ.. அப்போ நம்ம வீட்டுக்கு தான் வராருன்னு நினைக்கிறேன்.

மார்த்தா : அப்படியெல்லாம் நினைக்க கூடாது.. நான் போய் கூட்டிட்டு வரேன்… ( ஓடிப் போய்… இயேசுவை அழைத்து வருகிறார் ) .. இயேசுவே வாங்க.. வாங்க எங்க வீட்டுக்கு வாங்க சாப்டு போலாம்

இயேசு : சரி… போலாம்.

மரியா : இயேசுவே வாங்க, உட்காருங்க…

மார்த்தா : இயேசுவே… எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. கண்டிப்பா ஏதாச்சும் ஸ்பெஷலா உங்களுக்கு செஞ்சு தரணும்… நான் பாக்கறேன் என்ன இருக்குன்னு.

(இயேசுவும் மரியாவும் பேசுகின்றனர் )

இயேசு – மரியாவிடம். : நானே திராட்சைச் செடி, நீங்கள் அதன் கிளைகள்.. நீங்கள் என்னில் நிலைத்திருந்தால் மிகுந்த கனி தருவீர்கள்..

மார்த்தா : ( ஓடி வருகிறார்… ) கனி..கனி.. இயேசுவே கொஞ்சம் பழங்கள் நான் வெட்டி வைக்கிறேன் முதல்ல…. செமயா இருக்கும்…. சொல்லிக் கொண்டே ஓடுகிறாள்

இயேசு – மரியாவிடம் : நானே ஜீவ தண்ணீர், என்னைப் பருகுபவனுக்கு தாகமே எடுக்காது.

மார்த்தா : ( மார்த்தா ஓடி வருகிறார்.. ) ஐயோ.. தண்ணி… தண்ணியே இல்லை.. வீட்ல… நான் இதோ ஓடிப் போய் கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வரேன்

இயேசு – மரியாவிடம் : நானே வாழ்வளிக்கும் உணவு.. என்னை உண்ண வேண்டும்.

மார்த்தா…: (பரபரப்பாய் வருகிறார் ) ஆமா..உணவு உணவு…. அப்பம் சுட்டு வைக்கிறேன்… இதோ இன்னும் கொஞ்சம் நேரம் தான்….

இயேசு – மரியாவிடம் : எதை உடுப்போம் எதை உண்போம் என கவலைப்படாதீர்கள்…. கடவுள் வானத்துப் பறவைக்கே உணவளிப்பவர், உங்களுக்கு அளிக்க மாட்டாரா

மார்த்தா : ( இயேசுவிடம் ) இயேசுவே.. இது நல்லாவே இல்லை.

இயேசு : ஏன் என்னாச்சு…

மார்த்தா : பாத்திரம் கழுவி, தண்ணி எடுத்து, பழம் கட் பண்ணி, எல்லாம் செஞ்சிட்டு இருக்கேன். மாவு பிசைஞ்சாச்சும் தரலாம்ல இந்த மரியா… கொஞ்சம் அனுப்பி வையுங்க.

இயேசு : என்னுடைய கடைசிப் பயணமா எருசலேம் போயிட்டிருக்கேன். இப்போ உணவா முக்கியம் ? அழியா உணவாகிய வார்த்தை அல்லவா முக்கியம்

மார்த்தா : என்ன சொன்னீங்க இயேசுவே ? புரியல.

இயேசு : ஒண்ணுமில்லை.. நீ பல விஷயங்களைக் குறித்து கவலைப்பட்டுட்டே இருக்கிறாய்

மார்த்தா : என்ன இயேசுவே… வீட்டுக்கு வந்திருக்கீங்க, நல்ல சாப்பாடாச்சும் தர வேண்டாமா ? நான் தான் உங்களை கூப்பிட்டேன்.. எனக்கு அந்த பொறுப்பு இருக்குல்ல.

இயேசு : அதெல்லாம் தேவையில்லாத கவலை.

மார்த்தா : கொஞ்சம் மரியா ஹெல்ப் பண்ணலாம்ல..

இயேசு : மரியா நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள். அது அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படாது.

மார்த்தா : புரியலையே….

இயேசு : சில வேளைகளில் என் அருகில் அமர்ந்து, அமைதியாய் என் குரலைக் கேட்பது.. எனக்காக ஓடி ஆடி பணி செய்வதை விடச் சிறந்தது.

மார்த்தா : ஓ… அப்போ சாப்பாடு.

இயேசு : ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததை நீ அறிவாய்… இப்போ நானே உணவாகப் போகிறேன்… எனக்கான உணவுக்கா நான் கவலைப்படுவேன்…

மார்த்தா : சாரி இயேசுவே.. எனக்கு இது தெரியாம போச்சு.. நானும் உங்க காலடியில அமர்ந்து உங்க வார்த்தைகளைக் கேட்கப் போகிறேன்.

இயேசு : மகிழ்ச்சி ! மகிழ்ச்சி ! நானே வாசல்.. என் வழியாய் அன்றி எவனும் தந்தையிடம் வர முடியாது