• Saturday 26 April, 2025 04:25 AM
  • Advertize
  • Aarudhal FM
அவசர ஜெப விண்ணப்பம்

அவசர ஜெப விண்ணப்பம்

  • U.P
  • 20250122
  • 0
  • 612

உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த போதகர்.ஜோஸ் பாப்பச்சன் மற்றும் அவரது மனைவி ஷீஜா ஜோஸ் ஆகியோருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், ஒவ்வொரு மதமாற்ற முயற்சிக்கும் தலா ரூ.25,000/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்பதையும் மிகுந்த பாரத்துடன் தெரிவிக்க விரும்புகிறோம்.முன்னதாக, 24/01/2023 அன்று கைது செய்யப்பட்டிருந்த அவர்கள், 8 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஏறக்குறைய 30 வழக்கு விசாரணைகளுக்குப்பிறகு, மாண்புமிகு நீதிமன்றத்தால் தற்போது தண்டிக்கப்பட்ட நிலையில், 18/01/25 அன்று, போதகர்.ஜோஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், சகோதரி ஷீஜா மட்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தயவு செய்து சபையாய் தொடர்ந்து அவர்களுக்காக உபவாசம் இருந்து, தேவன் ஒரு அதிசயத்தைச் செய்யவும், முன்பு போல ஒரு வரலாற்றுத் தீர்ப்பு அவர்களுக்கு ஆதரவாக வழங்கப்படவும் ஜெபிப்போம். போதகர் ஜோஸுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் உள்ள நிலையில், கர்த்தர் தாமே அவர்களை சரீர அளவிலும் உள்ளத்திலும் பலப்படுத்தவும், அவர்கள் மூலம் தேவனுடைய நாமம் மகிமைப்படவும் ஜெபிப்போம்.

Summary

Prayer Request