ஊழியர்களின் கவனத்திற்கு !

முதன் முறையாக போப் பிரான்சிசுடன் அலி அல் சிஸ்தானி சந்திப்பு

Share this page with friends

மார் 07, 2021

உர்:ஈராக்கில் முதன் முறையாக கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிசும் ‘ஷியா’ முஸ்லிம் மதகுரு அயதுல்லா அலி அல் சிஸ்தானியும் சந்தித்து பேசினர்.

மேற்காசியாவைச் சேர்ந்த ஈராக் நாட்டிற்கு சென்றுள்ள போப் பிரான்சிஸ் புனித நஜாப் நகரில் உள்ள அயதுல்லா அலி அல் சிஸ்தானி வீட்டிற்குச் சென்றார். அப்போது சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன.அலி அல் சிஸ்தானி வீட்டு வாயிலுக்கு வந்து போப் பிரான்சிஸை வரவேற்று அழைத்துச் சென்றார். அவருக்கு தேநீர் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன.

குடிநீர் மட்டும் பருகிய போப் பிரான்சிஸ் அலி அல் சிஸ்தானியுடன் 40 நிமிடங்கள் பேசினார்.இது தொடர்பாக வாடிகன் தேவாலயம் வெளியிட்டுள்ள அறிக்கை:போப் பிரான்சிஸ் – அலி அல் சிஸ்தானி பேச்சில் உலக அமைதி ஒருமைப்பாடு சகோதரத்துவம் ஆகிய முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. ஈராக் வரலாற்றில் வன்முறை ஓங்கியிருந்தபோது சிறுபான்மை கிறிஸ்தவர்களை பாதுகாக்க குரல் கொடுத்தவர் அலி அல் சிஸ்தானி.

ஈராக்கில் அமைதி திரும்பவும் பிற மதத்தினரைப் போல சகல உரிமைகளுடன் கிறிஸ்தவர்கள் சுதந்திரமாக வாழவும் பாடுபட்டவர். அதை நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தார் போப் பிரான்சிஸ். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thanks: https://www.dinamalar.com/news_detail.asp?id=2724721

மக்கள் அதிகம் வாசித்தவை:

தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் என்ற பிரபல கிறிஸ்தவ யூடியூப் சேனல் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது; 72...
நான் பாவம் செய்தேன்! வித்யா'வின் பதிவு
இயேசுவை சிலுவையில் அறைய காரணமாக இருந்தவர்கள் - புனித வெள்ளி சிந்தனைக்கு
என் வாயின் வார்த்தைகள் உமது சமுகத்தில் பிரிதியாயிருப்பதாக
விமானப் பணிப்பெண்ணின் சமயோசிதம்..
பிரபல கிறிஸ்வத பாடல்களை இயற்றி பாடிய சுவி. K. S. வில்சன் தேவ ராஜ்யத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்
தேவ ஊழியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
நீங்கள் சாவதில்லை - நீங்கள் தேவர்கள் என போதிக்கும் சபைகளைவிட்டு வெளியேறுங்கள்
பிறரது விழுகையில் சந்தோசம் வேண்டாம்
அமர் அமைதியாய் - பாடல் பிறந்த கதை

Share this page with friends