
அவன் அடிமை என்பதை
முதலில் உணர்த்து,
பிறகு, அவன் தானாகவே
கிளர்ந்து எழுவான்“
என்று
அண்ணல் அம்பேத்கர்
சொன்னார்
இன்று அவருக்கு
132 -வது பிறந்த நாள்.
ஒரு விசுவாசிக்கு
அவன் விசுவாசி என்பதை
முதலில் உணர்த்திவிடு
விசுவாசத்தைத்
துவக்கியவர் இயேசு
என்பதை பிறகு
சொல்லிவிடு
அவரே
அதை முடிப்பவர்
என்பதையும் கூறிவிடு
(எபிரெயர் 12:1)
பின்னர் அவன்
தானாகவே
விசுவாசத்தில்
ஊன்றி எழுந்து
நிற்பான்,
நின்று பெருகுவான்
(கொலோசெயர் 2:6.7)
நீ அடிமை இல்லை.
ஆபிரகாமின் சந்ததி
என்பதைக் காட்டிவிடு
அப்பொழுது
அவன் தனக்கு
நியமிக்கப்பட்டிருக்கிற
ஓட்டத்தில் பொறுமையோடு ஓடி
விசுவாசத்தைக் காத்துக்கொள்வான்.
“மனுஷ குமாரன் வரும்போது
பூமியிலே
விசுவாசத்தைக் காண்பாரோ?”
(லூக்கா 18:8)

நல்லாசான்
பாஸ்டர்
இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.,
எழுத்தாளர் / போதகர்
14.04.2023