
விசுவாசிகளிடையே அதிக சர்ச்சையை உண்டாக்கிவரும் “தசமபாகம்”

தசமபாகம் என்பது தேவை இருக்கும் இடத்தை பார்த்து கொடுப்பதல்ல தேவன் இருக்கும் இடத்தை பார்த்துக் கொடுப்பது
தசமபாகம் என்பது உனக்கு பிடித்த சபைக்கு கொடுப்பது அல்ல நீ அங்கம் வகிக்கும் சபைக்கு கொடுப்பது.
தசமபாகம் என்பது உன்னுடையதிலிருந்து ஒரு பங்கை கொடுப்பதல்ல. அவருடையதிலிருந்து ஒரு பங்கை அவருக்கு கொடுப்பதாகும்
தசமபாகம் என்பது ஆசீர்வாதங்களை எதிர்ப்பார்த்து கொடுப்பது அல்ல. பெற்ற ஆசீர்வாதங்களுக்காய் நன்றி கூறி கொடுப்பது.
தசமபாகம் என்பது கொடுக்கப்பட வேண்டியது அல்ல. ஆலயத்திற்கு வந்து செலுத்தப்பட வேண்டியது.
தசமபாகம் என்பது பத்தில் ஒன்று அல்ல அது நியாயப்பிரமாணம். பத்திற்கு மேற்பட்டதே அன்பின் பிரமாணம்.