கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது மட்டுமல்ல, கிறித்துவ சமயத்தின் தியாகிகள் மற்றும் புனிதர்களுக்கு மரியாதை அளிக்க, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, என்று பலரின் பங்களிப்புகளையும் நினைவு படுத்தும் பண்டிகையாக இருக்கிறது.

கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும், இயேசுவின் பிறப்பு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கொண்டாடப்படுவது அனைவருக்குமே தெரியும். ஆனால், கிறிஸ்துமஸ் 12 நாட்கள் கொண்டாப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது மட்டுமல்ல, கிறித்துவ சமயத்தின் தியாகிகள் மற்றும் புனிதர்களுக்கு மரியாதை அளிக்க, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, என்று பலரின் பங்களிப்புகளையும் நினைவு படுத்தும் பண்டிகையாக இருக்கிறது.

இந்த கொண்டாட்டம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி, அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கிறது. 12 நாள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் ஒவ்வொரு நாளின் முக்கியத்துவம் பற்றி இங்கே பார்க்கலாம்.

நாள் 1: மேற்கத்திய திருச்சபை மரபின்படி, 12 நாள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், டிசம்பர் 25 (பெத்லகேமில் ஜோசப் மற்றும் மேரிக்கு டிசம்பர் 25 அன்று இயேசு பிறந்த அன்று) கொண்டாடப்படும் கிறிஸ்மஸ், முதல் நாளாகக் கருதப்படுகிறது.

நாள் 2: இரண்டாவது நாள் செயின்ட் ஸ்டீபன் தினமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவ சமயத்தில் உயிர் துறந்த முதல் தியாகியான ஸ்டீபனின் நினைவாக டிசம்பர் 26 அன்று கிறிஸ்துமஸ் 2வது நாள் கொண்டாடப்படுகிறது.

நாள் 3: டிசம்பர் 27 அன்று, கிறிஸ்துமசின் மூன்றாவது நாள் இயேசு பிரானின் 12 சீடர்களில் இளையவரான புனித ஜான் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நாள் 4: நான்காவது நாள் டிசம்பர் 28 அன்று அப்பாவிகள் தினம் அல்லது சைல்டர்மாஸ் என்று கூறப்படுகிறது. ஃபீஸ்ட் ஆஃப் தி இன்னொசன்ஸ் என்ற இந்த நாள், கிங் ஹராடால் பெத்லகேமில் படுகொலைசெய்யப்பட்ட குழந்தைகளின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.

நாள் 5: கத்தோலிக் சர்ச் மற்றும் அங்கிலிக்கன் கம்யூனிசம் ஆகிய இருவராலும் ஒரு புனிதராக தியாகியாகவும் கருதப்பட்ட செயின்ட் தாமஸ் பெக்கட்திற்கு மரியாதை செலுத்தும் வரையில், டிசம்பர் 29 அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஐந்தாவது நாள் கொண்டாடப்படுகிறது.

நாள் 6: பெனெடிக்டின் துறவியான செயின்ட் எக்வின் நினைவு நாளே டிசம்பர் 30 ஆம் தேதி, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் 6வது நாள் ஆகும்.

நாள் 7: நியூ இயர் ஈவ் என்று புத்தாண்டு கொண்டாட்டத்தின் முந்தைய நாளாக டிசம்பர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 31 ஐ உலகம் முழுவதிலும் புத்தாண்டின் முந்தைய நாளாகக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தாலும, இது 12 நாள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாள் 8: ஜனவரி 1, உலகமே புத்தாண்டு கொண்டாடும் நிகழ்வு, இயேசுவின் அன்னையான மதர் மேரியின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.

நாள் 9: ஒன்பதாம் நாள், ஜனவரி 2 ஆம் தேதியன்று செயின்ட் பேசில் மற்றும் செயின்ட் கிரகோரி நாசியான்சென் ஆகியோரின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.

நாள் 10: புனித இயேசுவின் பெயரால் விருந்து படைக்கப்பட்டு கிறிஸ்மஸ் பண்டிகையின் பத்தாவது நாள் ஜனவரி 3 அன்று கொண்டாடப்படுகிறது.

நாள் 11: கிறிஸ்தவ சகோதரர்களின் முதல் அமெரிக்க சபையான சிஸ்டர்ஸ் ஆஃப் சாரிட்டி நிறுவிய செயின்ட் எலிசபெத் ஆன் செடோனின் நினைவாக ஜனவரி 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

நாள் 12: கிறிஸ்துமஸ் விழாவின் இறுதி நாள் ஜனவரி 5ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முதல் அமெரிக்க பிஷப் செயின்ட் ஜான் நியூமான் அவர்களின் நினைவாக கொண்டாடப்படுகிறது.

டிசம்பர் 25 முதல் நாளாக பல இடங்களில் கொண்டாட்டங்கள் தொடங்கி, பன்னிரண்டாவது நாள் கொண்டாட்டம் ஜனவரி 5 அன்று நிறைவடைவதை பின்பற்றி வந்தாலும், ஒரு சில இடங்களில் டிசம்பர் 26 முதல் நாளாக கொண்டாடப்பட்டு ஜனவரி 6, 12ஆம் நாளாக கிறிஸ்மஸ் கொண்டாட்டம் நிறைவடைகிறது.