இந்த தேர்தலில் ஓட்டு போடும் போது, சங்கீதம் 74 ஐ படித்து விட்டு, ஜெபித்த பின்னர் தேவ சித்தம் செய்ய உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்

A. கர்த்தாவே எங்கள் சபையை நினைத்தருளும்

நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும்.
சங்கீதம் 74:2

B. சத்துருக்கள் எங்கள் சபையில் வலுக்கட்டாயமாக நுழைந்து அதை பாழாக்கி, கெடுத்து போட்டதை நினைத்தருளும்

நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணும், பரிசுத்த ஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான்.
சங்கீதம் 74:3

C. கர்த்தாவே எங்கள் சபையில் அனுமதியின்றி நுழைந்த சத்துருக்கள் கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை நாட்டினதை நினைத்தருளும்

உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்.
சங்கீதம் 74:4

D. கர்த்தாவே எங்களை மிரட்டி, வார்த்தைகளை கோடாரி போன்று வெட்டினவன் கட்சியில் பெரிய ஆளாக மாறி mla ஷீட்டும் வாங்கி இருக்கிறதை கண்ணோக்கி பாரும்

கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பேர்பெற்றவனானான்.
சங்கீதம் 74:5

E. எங்கள் சபையின் சித்திர வேலையாகிய ஊழியத்தையும் உமது இரட்ச்சிப்பின் சுவிசேஷத்தையும் மட்டமாக பேசி அவைகளை தகர்த்து போட நினைத்தை நினைத்தருளும்

இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் வாச்சிகளாலும் சம்மட்டிகளாலும் தகர்த்துப் போடுகிறார்கள்.
சங்கீதம் 74:6

F. எத்தனை இடங்களில் உமது சபையை தீயிட்டு கொழுத்தி உமது பரிசுத்த ஸ்தலத்தை அசுத்தபடுத்தினார்களே

உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, உமது நாமத்தின் வாசஸ்தலத்தைத் தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள்.
சங்கீதம் 74:7

அவர்களை ஏகமாய் நிர்த்தூளியாக்குவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள்.
சங்கீதம் 74:8

G. ஆண்டவரே போன தேர்தலில் தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள் யாரையும் இந்த தேர்தலில் காண முடியவில்லை, யாரும் சரியான வெளிப்பாடை சொல்ல முடியவில்லையே

எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம், தீர்க்கதரிசியும் இல்லை, இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.
சங்கீதம் 74:9

?? எதுவரைக்கும் கர்த்தாவே?

தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?
சங்கீதம் 74:10

உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்?
சங்கீதம் 74:11(a)

H. கர்த்தாவே உமது நாமத்தை சத்ரு நிந்தித்தை நினைத்தருளும்

கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.
சங்கீதம் 74:18

I. கர்த்தாவே உமது சரீரமாகிய சபை ஆத்துமாக்களை துஷ்ட கூட்டத்திற்கு ஒப்பு கொடாதேயும்

உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாதேயும், உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும்.
சங்கீதம் 74:19

தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும், மதியீனனாலே நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும். சங்கீதம் 74:22உம்முடைய சத்துருக்களின் ஆரவாரத்தை மறவாதேயும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் அமளி எப்பொழுதும் அதிகரிக்கிறது.
சங்கீதம் 74:23

நன்றாக இந்த வசனத்தை நமது இன்றைய சபையின் சூழலோடு ஒப்பிட்டு பார்த்து ஜெபித்து கர்த்தருடைய நாமத்தை மகிமைப் படுத்துங்கள்.

செலின்