• Sunday 9 March, 2025 08:36 PM
  • Advertize
  • Aarudhal FM

மாணவர்களிடம் மத பிரசாரம் 27 பேர் போலீசில் ஒப்படைப்பு

தஞ்சாவூர்,

பேராவூரணி அரசு பள்ளி மாணவர்கள் மற் றும் பொதுமக்கள் மத்தி யில், மத பிரசாரம் செய் தவர்களை பா.ஜ.,வினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கன்னியாகுமரி மாவட் டம், தஞ்சாவூர் நாகர்கோவில், மாவட்டம், துறவிக்காடு, மதுக்கூர், கரூர் பகுதியில் இருந்து கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த 40 பேர், தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம், மடத்திக்காடு, களத்துார் சுற் றுவட்டார பகுதிகளில், மத பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று முன்தினம் மடத் திக்காடு பகுதியில் துண்டு பிரசுரங்களை வழங்க சென்ற போது, கிராம மக் கள் அவர்களிடம் பிரச்னை செய்ததால், மத பிரசார கும்பல் திரும்பினர்.தொடர்ந்து மாலையில் களத்துார் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி முன் நின்று, பள்ளியை விட்டு வெளியே வந்த மாணவ மாணவியரிடம் துண்டு பிரசுரம் வழங்கினர். ஹிந்து மத கடவுள்களை பற்றி தரக்குறைவாக பேசி, மூளைச்சலவை செய்ய முயன்றனர். இது குறித்து அறிந்த களத்துார் பகுதிகிராம மக்கள், மாணவர்க ளின் பெற்றோர், பா.ஜ.,வி னர் மத பிரசாரம் செய்தவர் களை தடுத்து நிறுத்தினர். போலீசாருக்கு தகவல் அளிப்பதாக கூறியதால், 13 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதை யடுத்து, 27 பேரை பிடித்து, திருச்சிற்றம்பலம் போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த இயேசு ரொம்ப நல்லவர்

“இந்தாம்மா , பொம்பளையாச்சேன்னு அடிக்காம விடுறேன் . இன்னொரு தடவ
“ஏசு குணமாக்குறாரு , ஏசு ரணமாக்குறாருன்னு” சொல்லிக்கிட்டு இந்த ஏரியா பக்கம் வந்தீன்னா அப்பறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ” . பேசியபடியே அந்தப் பெண்ணின் கையிலிருந்த கைப்பிரதிகளை ஆவேசமாய்ப் பிடுங்கிக் கிழித்துப் போட்டான் மூர்த்தி .

அந்தப் பெண் கதறவுமில்லை, துடிக்கவுமில்லை . கண்களில் கண்ணீர் வழிய , உதடுகள் ஏதோ முணுமுணுத்தபடி நின்று கொண்டிருந்தாள் .

” ஒரு வேளை ஏசுவை வேண்டுறாளோ ? ” ஏசுவே ! உடனே இறங்கி வந்து இந்த ஆளைக் கண்டதுண்டமா வெட்டி போடுங்க . வானத்திலிருந்து அக்கினியை இறக்கி இந்த மனுஷனை பஸ்பமாக்கிடுங்கன்னு ? ” . வேண்டிக்கட்டும் வேண்டிக்கட்டும் . ஏசு வந்து காப்பாத்துறதை நானும் பாத்துடுறேன் ” மூர்த்தியின் மனது கொக்கரித்தது .

“எவனுக்குமே இந்த ஏரியால அக்கறையே கிடையாது . காலையிலிருந்து இந்த பொம்பள நோட்டீஸ் கொடுத்துருக்கா . இதுவரைக்கும் ஒரு பயலும் கண்டுக்கல . நான் மட்டும் பாக்காம இருந்திருந்தா இந்நேரம் நாலஞ்சு பேர கிறிஸ்டியனா மாத்தி கூட்டிக்கிட்டே போய்ருப்பா . ஏதோ நான் ஆபீஸ்ல பெர்மிசன் போட்டு டாக்டர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வந்திருந்ததனால என் கண்ணுல பட்டுட்டா . இல்லன்னா
அவ்வளவுதான் “.

மிகப்பெரிய சாதனையை செய்து விட்டது போலவும், சமுதாயத்திற்கு மிகப் பெரிய தொண்டாற்றி விட்டதைப் போலவும் உணர்ந்தான் மூர்த்தி .

” சே ! ஒரு வீடியோ எடுத்திருக்கலாம் வாட்ஸ்அப்ல ஷேர் பண்ணா நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். நம்மள பத்தியும் நாலு பேர் தெரிஞ்சுக்குவாங்க” . மனது புலம்ப ஆபீசுக்குத் திரும்பினான் .

தான் செய்த சாதனையை அலுவலகத்தில் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டான். ஆனாலும் அங்கேயும் ஓரிரு மாற்றுமதத்தவர்கள் இருந்ததால் அடக்கிக் கொண்டான் . இருந்தாலும் செய்த சாதனையின் பெருமிதம் பணி முடியும் வரை மனதுக்குள் ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது . தான் தைரியமாக செய்த காரியங்களையும் பேசிய வார்த்தைகளையும் மனதுக்குள் அடிக்கடி ரீவைண்ட் செய்து திரையிட்டுத் திரையிட்டு மகிழ்ந்தான் .

” வீட்ல போயி சித்ரா கிட்ட சொல்லணும் ” . டிஃபன் பாக்ஸ் , தண்ணீர் பாட்டில் எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு ஆயத்தமானான் . சட்டைப்பையில் இருந்த அப்பாய்ன்ட்மென்ட் டோக்கனை மீண்டும் ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான் .

வீடு அமைதியாக இருந்தது. பதினைந்து நாட்களாகவே அப்படித்தான் . சித்ராவுக்குப் பதினைந்து நாட்களாக இடைவிடாத உதிரப்போக்கு . இதுவரைக்கும் மூவாயிரம் , நாலாயிரம் வரை செலவழித்தும் ஓயவில்லை . ஆளே வெளுத்து , மெலிந்து போய் இருக்கிறாள் . என்னென்னவோ மாத்திரைகள், நரம்பு ஊசி , கைவைத்தியம் என்று எவ்வளவோ முயற்சி எடுத்தாயிற்று . எதற்குமே அடங்காது சூறாவளியாய்ச் சுழன்று அடிக்கிறது வியாதி .

ஒரு நிமிஷம் உட்காராமல் பம்பரமாய்ச் சுழல்பவள் இன்று எப்போது பார்த்தாலும் சோர்ந்து போய் உட்கார்ந்து விடுகிறாள் . மூன்று வேளை சாப்பாடும் மெஸ்ஸில் இருந்துதான் . அதற்காகத்தான் இன்று ஸ்பெஷலிஸ்ட்டிடம் அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி இருக்கிறான் .

உள்ளே நுழைந்ததும் ஒரு மாற்றத்தை உணர்ந்தான் . பதினைந்து நாட்களாகப் புகையாத அடுக்களையிலிருந்து அருமையான பக்கோடா வாசனை . ஓடிப்போய் எட்டிப்பார்த்தான் . அதிர்ந்தே போனான். துவைத்துப் போட்ட துணியைப் போல் துவண்டுகிடக்கும் சித்ரா , தெளிவாக நின்று பகோடாவைப் பொறித்து எடுத்துக் கொண்டிருக்கிறாள் . பக்கத்தில் இருந்த பாத்திரத்தில் நெய் மினுங்கும் கேசரி .

அவனைப் பார்த்ததும் ஓடி வந்து அவனது தோளில் சாய்ந்து கொண்டு அழ ஆரம்பித்தாள் . மதகு உடைப்பெடுத்துப் பெருகி வருகிற வெள்ளத்தைப் போல அப்படி ஒரு அழுகை . மூர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை . அவளாகவே அழுது அடங்கட்டுமென்று விட்டு விட்டான் .

இருபது நிமிடம் அழுது முடித்தபின்பு அறைக்கு ஓடிப்போய் ஒரு மாத்திரை அட்டையை எடுத்து வந்தாள்.

அதைப் பார்த்ததும் மூர்த்திக்குத் தூக்கி வாரிப் போட்டது . அது மூர்த்தியின் , மனநிலை சரியில்லாத அம்மாவுக்குக் கொடுக்கப்பட்டு வந்த தூக்க மாத்திரை. டாக்டர் சொன்ன அளவுக்கு மேல் ஒன்றிரண்டு மாத்திரைகள் சாப்பிட்டாலே உயிருக்கு ஆபத்து . அம்மா இறந்து போய் எட்டு மாதங்களாகிவிட்டன . மூர்த்திதான் அவர்கள் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகளை எல்லாம் தன் கையாலேயே தூக்கி எறிந்தான் . ஆனால் இது இப்போது எப்படி வந்தது ?

மூர்த்தி கேட்பதற்கு முன்பே சித்ரா சொன்னாள் ,

” அத்தையோட prescription எடுத்துட்டுப் போய் நாந்தாங்க வாங்கிட்டு வந்தேன் “. மீண்டும் குமுறி அழ ஆரம்பித்துவிட்டாள் .

” இன்னைக்கு காலைல ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுங்க. கை காலெல்லாம் ரொம்ப வெலவெலன்னு ஆயிடுச்சு. மனசெல்லாம் ஒரே திகில் . மரணம் என்னைத் துரத்துற மாதிரி தோணுச்சு .

எங்க கிருஷ்ணவேணி அக்காவுக்கு இப்படித்தான் ஆச்சு . கடைசில டாக்டர் அது கேன்ஸர்னுட்டாங்க . கர்ப்பப்பையையும் எடுத்து ரெண்டு மூனு மாசந்தான் உயிரோட இருந்தாங்க . இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும் கர்ப்பப்பையை எடுத்துடணும்னு வேற சொல்றாங்க. என் ஃபிரண்ட் மாலதிக்கும் இதே பிரச்சனைன்னு கர்ப்பப்பையை எடுத்துட்டாங்க . எடுத்தநாள்லேர்ந்து முதுகு வலி , இடுப்பு வலின்னு ஒன்னு விட்டு ஒன்னு மாத்திமாத்தி வந்துக்கிட்டே இருக்குதாம் . இதையெல்லாம் நினைச்சு நினைச்சு ரொம்ப பீதியாவே இருந்துச்சு . ஏதோ ஒரு அருவருப்பான நாத்தம் அடிச்சுக்கிட்டே இருக்குற மாதிரி ஒரு உணர்வு . தாழ்வு மனப்பான்மை .

இவ்வளவையும் தாங்கிக்கிட்டு நான் உயிரோட இருக்க விரும்பலைங்க . இன்னிக்கு பாக்கப் போற டாக்டரும் என்ன சொல்லப் போறாங்கன்னு தெரியலை . அதான் என் வாழ்க்கையையே முடிச்சுக்கலாம்னு முடிவெடுத்தேன் . மூர்த்தி அந்த வார்த்தையில் ஆடிப்போய்விட்டான் .

” அடிப்பாவி , எங்களை விட்டுப்போக ஒனக்கு எப்படி மனசு வரும் ? “. கண்கள் கலங்கிவிட்டன . பேச வார்த்தைகள் வரவில்லை .

சித்ரா தொடர்ந்தாள் .

” தற்கொலை பண்ணிக்கணும்னு நினைக்கும்போதே யாரோ என்னை அதுக்காக உற்சாகப்படுத்துற மாதிரியே இருந்தது .

” உனக்கு வந்திருக்குறது கொடுமையான வியாதி . குணமாக வாய்ப்பே இல்லை . மத்தவங்களும் உன்ன வெறுத்து ஒதுக்க ஆரம்பிச்சுடுவாங்க. தற்கொலைதான் ஒரே வழி “ன்னு திரும்பத் திரும்ப மனசுக்குள்ள ஒரு குரல் கேட்டுக்கிட்டே இருந்துச்சு . ரத்தப் போக்கும் அதிகமாக ஆரம்பிச்சிடுச்சு .

சொல்லி வச்ச மாதிரி அத்தையோட மாத்திரை சீட்டு , பீரோவைத் தெறக்கும் போது கீழ விழுந்துச்சு .

” இந்த மாத்திரை , டாக்டர் சொன்ன அளவை விட ஒன்னு கூடப் போனாலும் உயிருக்கே ஆபத்துன்னு ” நீங்க சொன்னது ஞாபகம் வந்துச்சு . மனசுக்குள் ஒலிக்கிற குரல் விரட்ட ஆரம்பிச்சிடிச்சு . வேகமா ஓடிப்போய் சீட்டைக் காட்டி மாத்திரையும் வாங்கிட்டேன். வீட்டுக்கு வந்து பத்து மாத்திரையையும் ஒன்னா முழுங்கணும்ங்குற வேகத்தோட திரும்பினேன் .

இன்னியோட வாழ்க்கை முடியுது . இதுதான் என்னோட கடைசி நிமிஷங்கள்னு முடிவே பண்ணி வந்துக்கிட்டு இருக்கும்போது ஒரு லேடி என்கிட்ட வந்து சொன்னாங்க ,

” சிஸ்டர் , ஏசு உங்களை சுகமாக்குறார்னு “.
சொல்லிட்டு ஒரு நோட்டீஸ் மாதிரி ஏதோ ஒன்னை என் கைல கொடுத்தாங்க . அவங்க சொன்ன வார்த்தை காதுல விழுந்ததும் அங்கயே அழுதுட்டேன் . மனசுலயும் , ஒடம்புலயும் ஒரு புது தெம்பு வந்துச்சு . ‘ சாவு சாவுன்னு ‘ சொல்லிக்கிட்டு இருந்த அந்தக் குரல் எங்க போச்சுன்னே தெரியல .

வேகமா வீட்டுக்கு வந்து அவங்க குடுத்த நோட்டீஸை படிக்க ஆரம்பிச்சேன் . அதுல , ஏசுநாதர் , பன்னெண்டு வருசமா உதிரப்போக்கால கஷ்டப்பட்ட ஒரு பெண்ணை ஒரு நொடியில சுகமாக்குனதைப் பத்தி எழுதி இருந்திச்சு . அதோட ‘ இந்த ஏசு உங்களையும் சுகமாக்க வல்லவராயிருக்கிறார்னும் ‘ போட்டிருந்துச்சு.

அந்த நோட்டீஸ் எனக்காவே எழுதப்பட்டு என் கைக்கு வந்து சேந்ததுன்னு எனக்குப் புரிஞ்சது. எனக்கு எப்புடி அவர்கிட்ட கேக்குறதுன்னு தெரியல . கண்ணை மட்டும் மூடிக்கிட்டு ,

” ஏசு , என்னை குணமாக்குங்க . அந்த அம்மா உங்க ஆடையைத் தொட்டதும் குணமானாங்கன்னு போட்டுருக்கே .நானும் உங்க அங்கியத் தொடணுமேன்னு ” சொல்லிக்கிட்டே இருந்தேன் ” .

தீடீரென்று சித்ராவின் குரலில் ஒரு உணர்ச்சிப் பிரவாகம் தெரிவதை மூர்த்தி உணர்ந்தான் .

” என் கைல சால்வை மாதிரி ஏதோ பிடிபட்டுச்சுங்க . உடனே கண்ணைத் திறந்து பாத்தேன் . அங்க யாருமே இல்ல . உடம்புல , மனசுல இருந்த எல்லா சோர்வும் நீங்கிடுச்சு . எவ்ளோ பெரிய பைத்தியக்காரத்தனம் பண்ணப் பாத்தேன்னு அப்பதான் புரியுது ” . மீண்டும் கதறி அழுதாள் . மூர்த்தி இன்னும் அதிர்சியில் உறைந்து நின்றிருந்தான் .

” காலைல பதினோரு மணிக்கு இது நடந்துச்சு . இந்த நிமிஷம் வரைக்கும் அந்தப் பிரச்சனையே இல்ல. பதினஞ்சு நாளா பாடாப்படுத்துன அந்த வியாதி எங்க போச்சுன்னே தெரியலை. பதினஞ்சு நாள் பாவம் உங்களுக்கு வாய்க்கு ருசியா நல்ல சாப்பாடு கூட போட முடியல . நாலு மணி வரைக்கும் பாத்தேன் , எந்தப் பிரச்சனையும் இல்ல . நானே கடைக்குப் போய் சாமான்லாம் வாங்கிட்டு வந்து பகோடாவும் , கேசரியும் செஞ்சு வச்சேன் . ஏசு என் உயிரைக் காப்பாத்திட்டாருங்க . அந்த அம்மா இன்னிக்கி எங்கெங்க போனாங்களோ
எத்தன வீட்டுக்கு நிம்மதி கிடைச்சுதோ ? ” .

அவள் சொன்ன சாட்சியில் மூர்த்தி ஏற்கனவே நிலைகுலைந்து போயிருந்தான் . அதிலும் கடைசியாய் அவள் சொன்ன வார்த்தைகளின் வீரியம் தாளாமல் குற்றவுணர்வில் அழ ஆரம்பித்தான் . சித்ரா , தன்னை நினைத்துதான் மூர்த்தி அழுவதாக நினைத்து அவன் கண்களைத் துடைத்து விட்டான் .

சற்று நேரத்துக்குப் பின்னர் மூர்த்தி கேட்டான் ,

” அந்த நோட்டீஸ்ல contact number எதாச்சும் குடுத்துருக்காங்களா… ?

=> அங்கொன்றும் இங்கொன்றுமாய் பலமாய் ஒலிக்கிற சத்துருவின் கொக்கரிப்புகள் அச்சுறுத்துகிறதா ? இனி ஊழியத்துக்கு பலன் கிடைப்பது கடினம் என்று ஒரு நம்பிக்கையின்மை எழுந்து சோர்வை உண்டாக்குகிறதா ? கவலைப்படாதே, கர்த்தர் செல்லும்படி ஏவுகிற ஒவ்வொரு இடத்திலும் ஏதோ ஒரு அழியப் போகிற ஆத்துமா உனக்காகக் காத்திருக்கிறது..

-> ” மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,

அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும் “.
ஏசா 55 : 10, 11

-> “ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ?

அது வழியருயேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது “.
நீதி 8 : 1, 2

கல்வி அலுவலகத்தில் தீ விபத்து ஆவணங்கள் எரிந்ததால் பரபரப்பு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் வட்டார கல்வி அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இயங்கி வருகிறது. இங்கு தா.பேட்டை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதிவேடுகள், பள்ளி மாணவ, மாணவிகள் குறித்தான அனைத்து பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த வட்டார கல்வி அலுவலகத்தின் அருகே காலியாக இருந்த இடத்தில் சருகுகள், காய்ந்த கட்டைகள் கிடந்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக பற்றிய நெருப்பு வட்டார கல்வி அலுவலகத்தின் உள்ளே தீப்பொறி பரவி உள்ளது. இதில் வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து புகை வருவதை அப்பகுதியினர் பார்த்து முசிறி தீயணைப்பு நிலையத்திற்கும், ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து முசிறி தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கர்ணன் தலைமையில் மீட்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து பீரோ கணினிகள் உள்ளிட்டவைகளை உடனடியாக வெளியே கொண்டு வந்தனர். இதில் பழைய பதிவேடுகள் அனைத்தும் தீயில் எரிந்து போனது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அன்னாளின் ஜெபம்

அன்னாள் தனது ஒரே மேன்மையான ஜெபத்தில் தனது குறையை நிறைவு ஆக்கினாள். சில ஜெபம் உடனே கேட்கபடும். சில ஜெபத்துக்கு பதில் கிடைக்க தாமதம் ஆகும், ஆகையால் சோர்ந்து போகாமல் (லூக் 18:1) பதில் கிடைக்கும் வரை ஜெபிக்க வேண்டும். அன்னாளின் ஜெபத்தில் காணபட்ட 15 காரியங்களைக் கைகொண்டு ஜெபித்தால், உங்களுடைய ஜெபத்திற்கு பதில் கிடைப்பது நிச்சயம்

  1. தேவனுடைய ஆலயத்திற்கு சென்று ஜெபித்தாள் (1சாமு 1:9)- எல்கானா அன்னாளை அதிகமாக நேசித்தாலும், ஆறுதல் வார்த்தை கூறினாலும் அன்னாள் மனிதனை நோக்காமல் கர்த்தரை நோக்கினாள் (சங் 34:5).
  2. தேவனுடைய ஆலயத்தில் தேவன் இருக்கிறார் (சங் 11:4) கர்த்தருடைய கண் இரவும் பகலும் ஆலயத்தின் மேல் திறந்திருக்கும் (1 ராஜா 8:29).
  3. மனங்கசந்து அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினாள் (1சாமு 1:10).
  4. சேனைகளின் கர்த்தாவே என்று சொல்லி கர்த்தரை மகிமைப்படுத்தினாள் (1சாமு 1:11).
  5. தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பாரும் என்று தாழ்மையோடு ஜெபித்தாள். (1சாமு 1:11) (சங் 138:6).
  6. தன்னை மறவாமல் நினைந்தருளும் படியாக ஜெபித்தாள். (1சாமு 1:11).
  7. ஆண் மகனைத் தாரும் என்று குறிப்பிட்டு ஜெபித்தாள். (1சாமு 1:11).
  8. நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று சுய நலமில்லாமல் ஜெபித்தாள். (1சாமு 1:11) (யாக் 4:3)
  9. அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணி ஜெபித்தாள். (1சாமு 1:11) (சங் 50:13,15).
  10. கர்த்தருடைய சந்நிதியில் வெகு நேரம் ஜெபம் பண்ணினாள் (1சாமு 1:12). தனிமையில் நீண்ட நேரம் ஜெபிக்க வேண்டும்.(லூக் 20:47).
  11. அன்னாள் தன் இருதயத்திலே பேசி, அமைதியாக தனது வேதனையை கர்த்தருக்கு தெரியப்படுத்தி ஜெபம் பண்ணினாள் (1சாமு 1:13) (சங் 4:4). சத்தமாக ஜெபிக்க தெரிய வேண்டும், அமைதியாகவும் ஜெபிக்க தெரிய வேண்டும்.
  12. தன்னை மிகவும் துக்கப்படுத்திய பெனினாளின் வாயை அடையும் என்று ஜெபிக்காமல், தனக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக மாத்திரம் ஜெபித்தாள். (1சாமு 1:6).
  13. நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய் என்று ஏலி கேட்டதற்கு, “அப்படியல்ல ஆண்டவனே” என்று மிகத் தாழ்மையுடன் கூறி ஊழியக்காரரை கனம் பண்ணினாள். (1சாமு 1:15).
  14. இருதயத்தின் வேதனைகளை கர்த்தரிடம் ஊற்றி ஜெபித்தாள். (1சாமு 1:15) (சங் 62:8) (சங் 51:17).
  15. தனது ஜெபம் கேட்கபடும் என்ற விசுவாசத்தோடு ஜெபித்தாள். ஜெபத்திற்கு பின்பு அவள் துக்கமாக இருக்கவில்லை. (1சாமு 1:18)( மாற் 11:24)

நான் ஒரு கிறிஸ்தவன் என்று அரசாங்கத்தில் ஏன் பதிவு செய்ய வேண்டும்?

இன்று இந்திய மக்கள் தொகை 136.64 கோடிகள் 2019 வருட நிலவரப்படி, இதில் இந்திய கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை வெறும் 2.3 சதவிகிதம் கிறிஸ்தவர்கள் தான் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று அரசாங்க கணக்கு சொல்கிறது, 2.3 சதவிகிதம் என்பது 136.64 கோடி இந்தியர்களில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை வெறும் 2.78 கோடிகள் தான்.

இவ்வளவு குறைவாக தான் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்களா? இதற்கு என்ன காரணம்?

இதில் நம்முடைய கடமை என்ன என்பதை ஆராய்வோம்.இந்தியாவில் மூன்றாவது பெரிய மதமாக கிறிஸ்தவ மதம் உள்ளது, இதில் முதலாவதாக இந்து மதமும் இரண்டாவதாக இஸ்லாமிய மதம் உள்ளது.இதில் கிறிஸ்தவம் இந்தியாவில் வந்த பிறகு சுமார் 650 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இஸ்லாம் இன்று 19 சதவிகிதமாக இருக்கிறார்கள் இதற்கு என்ன காரணம்?அதற்கான காரணம் என்னவென்றால், வேற்று மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கும் ஒருவர் வருகிறார் என்றால், அவரை உடனே அம்மதத்தின் தலைவர்கள் அரசாங்கத்தில் தான் ஒரு இஸ்லாமியர் என்று பதிவு செய்ய சொல்கிறார்கள், அதற்கான ஆலோசனைகளையும் தருகிறார்கள்.

ஆனால் கிறிஸ்தவத்தில் அப்படி இல்லை, வேற்று மதத்திலிருந்து ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு வந்தாலே போதும் என்று நினைக்கிறார்கள்.இது ஒரு விஷயமா அதனாலென்ன என்று நீங்கள் சாதாரணமாக நினைக்கலாம், இதனால் நமக்கு லாபம் என்ன என்று நாம் நினைக்கிறோம், ஆனால் அவர்களோ சட்டப்படி வேற்று மதத்திலிருந்து வருகிறவர்களை அரசாங்கத்தில் தான் ஒரு இஸ்லாமியர் என்று பதிவு செய்கிறார்கள், இங்கு நான் ஒரு மதத்தினரை ஏற்றியோ இறக்கியோ பேச வரவில்லை, நம்முடைய கடமை என்னவென்று சொல்லவே ஆசைப்படுகிறேன்.

ஒரு சிறிய உண்மை சம்பவத்தின் மூலமாக இதை விவரிக்க விரும்புகிறேன், மேற்கு இந்தியாவில் ஒரு மலையின் மேல் அழகான ஒரு சபை இருந்தது, அந்த சபையில் சுற்றிலும் வேற்று மதத்தினர் இருந்தார்கள், அவர்கள் இந்த சபையை எப்படியாகிலும் இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று அதற்கான வழிவகைகளை தேடிக் கொண்டிருந்தார்கள்.அதற்கு அவர்கள் அந்த சபையை இல்லாமல் செய்வதற்கான எடுத்த முயற்சி என்னவென்றால், அவர்கள் அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சென்று இந்த சபை முறையான இடத்தில் கட்டப்படவில்லை, அதுமட்டுமில்லாமல் இந்த சபையில் இருக்கிறவர்கள் யாருமே கிறிஸ்தவர்கள் இல்லை என்று புகார் செய்தார்கள்.

உடனே அரசாங்க அதிகாரிகள் அனைவரும் அந்த சபைக்கு வந்து அவர்களை விசாரிக்க தொடங்கினார்கள், இந்த சபையில் உள்ள போதகர் மற்றும் விசுவாசிகள் ஐயா நாங்கள் கிறிஸ்தவர்கள் தான் அதனால் தான் இந்த சபையை கட்டி ஆண்டவரை இங்கு ஆராதனை செய்கிறோம் என்றார்கள்.

ஆனால் அந்த அரசாங்க அதிகாரிகளோ அதை நம்பவில்லை, அந்த அரசாங்க அதிகாரிகள் அந்த சபையிலுள்ள விசுவாசிகளை அழைத்து, நீங்கள் அனைவரும் உங்கள் வீடுகளுக்கு சென்று உங்கள் வீட்டில் உள்ள உங்கள் கல்வி சான்றிதழ்களை எடுத்து வாருங்கள் என்று சொன்னார்கள்.அவர்களும் வீட்டிற்கு சென்று தங்களுடைய கல்வி சான்றிதழ்களை எடுத்து வந்தார்கள். அதை அந்த அரசாங்க அதிகாரிகள் பரிசோதனை செய்து பார்த்தார்கள் ,

அதில் ஒவ்வொருவருடைய கல்வி சான்றிதழிலும் அவர்கள் முன்பு தொழுது வந்த அந்த மதத்தின் பெயரும் அந்த சாதியின் பெயரும் அந்த சான்றிதழில் இருந்தது.அரசாங்க அதிகாரிகள் அந்த சபையின் போதகரை பார்த்து, என்னங்க நீங்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்று சொன்னீர்கள், ஆனால் உங்கள் அனைவரின் சான்றிதழ்களிலும் வேற்று மதத்தின் பெயர் போட்டிருக்கிறதே என்று கேட்டார்கள், உடனே போதகர் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.அரசாங்க அதிகாரிகள் அந்த சபையின் போதகரை பார்த்து சரி அதெல்லாம் விடுங்க, நீங்க போய் உங்கள் சான்றிதழை எடுத்து வாருங்கள் என்று சொன்னார்கள், இதில் என்ன வேடிக்கை என்றால் போதகரின் சான்றிதழிலும் வேற்று மதத்தின் பெயர் இருந்தது, அவரும் அரசாங்கத்தில் தான் ஒரு கிறிஸ்தவன் என்று பதியவில்லை என்பது தான் வேடிக்கை.உடனே அரசாங்க அதிகாரிகள் இவர்கள் யாரும் கிறிஸ்தவர்கள் இல்லை என்று சொல்லி, அந்த சபையை இழுத்து மூடி சீல் வைத்து விட்டு சென்று விட்டார்கள். இன்றும் அந்த சபையை திறக்கவேண்டும் என்று வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலை பிற்காலங்களில் நமக்கும் வராது என்று சொல்ல முடியுமா? அரசாங்கம் பின்வரும் காலங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் சென்று அந்த ஆலயத்தில் உள்ள ஒவ்வொருவருடைய சான்றிதழும் வாங்கி விசாரித்துப் பாருங்கள் என்று சொல்லும் காலம் வந்தால் எத்தனை கிறிஸ்தவர்கள் மிஞ்சுவார்கள் என்பது சந்தேகமே.இன்று நாம் ஏன் இந்திய அரசாங்கத்தில் கிறிஸ்தவர் என்று பதிவு செய்ய தயங்குகிறோம்? நம்முடைய சுயலாபத்திற்காக மற்றும் எப்படி அரசாங்கத்தில் கிறிஸ்தவர் என்று பதிவு செய்வது என்ற அறியாமையும் கூட.

இன்று கிறிஸ்தவத்தில் அநேக வேற்று மதத்தினர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாருமே நான் ஒரு கிறிஸ்தவன் என்று அரசாங்கத்தில் பதிவு செய்யவில்லை, மற்றும் அதற்கான ஆலோசனைகளை போதகர்களும் மற்ற யாருமே தருவதில்லை மற்றும் அதை குறித்து அறிந்து கொள்ளவும் விரும்பவில்லை, ஒரு சிலரை தவிர.அநேகர் பழைய மதத்தின் பெயர் மற்றும் சாதி பெயரை சொல்லி அரசாங்க வேலை மற்றும் நல்ல பதவியில் இருக்கிறார்கள்,

இப்படிப்பட்டவர்கள், நான் ஒரு கிறிஸ்தவன் என்று அரசாங்கத்தில் பதிவு செய்தால் இப்பொழுது இருக்கும் வேலைக்கு ஆபத்து வந்துவிடும் என்ற ஒரு சுயநலத்தில் இருப்பவர்கள் எப்படி அரசாங்கத்தில் நான் ஒரு கிறிஸ்தவன் என்று பதிவு செய்வார்கள்?மத்தேயு 10 : 32 – 33 – ம் வசனம் சொல்கிறது, மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். என்று.ஒவ்வோரு கிறிஸ்தவரும் தான் ஒரு கிறிஸ்தவன் என்று அரசாங்கத்தில் பதிவு செய்யும்போது, உலகத்திற்க்கு முன்பாக நாம் ஆண்டவரை அறிக்கையிடுகிறோம்.ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்,

சகோ நான் தற்சமயம் பழைய மதத்தின் பெயர் மற்றும் சாதியின் பெயரைச் சொல்லி வேலையில் இருக்கிறேன், இன்னும் சிறிது காலம் எனக்கு பணிகள் உண்டு, நான் இப்பொழுது போய் அரசாங்கத்தில் ஒரு கிறிஸ்தவன் என்று பதிவு செய்தால் என்னுடைய வேலைக்கு ஆபத்தாக முடியுமே என்ன செய்வது சகோ ஆலோசனை சொல்லுங்கள் என்றார்.

அதற்கு நான் அவருக்கு சொன்ன ஆலோசனை என்னவென்றால், சகோ அது உங்களுக்கும் ஆண்டவருக்கும் உள்ள அன்பை பொறுத்திருக்கிறது, நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்று அரசாங்கத்தில் பதிவு செய்வது என்றேன்.நான் இம்மட்டும் நடத்தின என் ஆண்டவர் இனிமேலும் நடத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றேன்.மேற்குறிப்பிட்ட காரணங்களே இன்று அரசாங்கத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.3 சதவீதமாக இருப்பதற்கு காரணம்.

அதற்கு நாம் ஒரு சில உலகப்பிரகாரமான நன்மைகளை இழக்க நேரிடும் என்பதே நிதர்சனமான உண்மை. இது உங்களுக்கும் ஆண்டவருக்கும் உள்ள அன்பை பொருத்தே இருக்கிறது.

அரசாங்கத்தில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை 2.3 ஆக இருக்கிறது என்பதற்காக இந்த பதிவு இல்லை, ஒவ்வொரு கிறிஸ்தவரும் அரசாங்கத்தில் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று பதிவு செய்யும்போது, நாம் உலகிற்கு முன்பாக ஆண்டவரை மறுதலியாமல் அவரை அறிக்கை செய்கிறோம் என்பதற்காக மட்டுமே இந்த பதிவு. *இதன் மூலம் ஆண்டவரின் நாமம் நம் மூலமாக இந்த உலகிற்கு முன்பாக புகழ்ச்சி அடையும் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை.

நன்றி

பாஸ்டர்எஸ். எஸ் .இன்பராஜ்

கிறிஸ்துவ சாதி மறுப்பாளர்

வீரணாமூர் செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டம்

பல்லி கற்றுத் தரும் பாடம்

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவனித்தார்.வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 5 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 5 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்காணித்து கொண்டு இருந்தார்.சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் அடித்திருந்த மரத்தின் இடையே சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 5 ஆண்டுகளாக இந்த பல்லி சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது. இது ஒரு அதிசயமான செயல் மட்டும் அல்ல எவ்வாறு மற்ற இனங்கள் தங்களின் இனத்தை அன்புடன் நடத்தி காப்பாற்றி வருகின்றன என்ற ஒருஉயர்த்த படிப்பினை.ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 5 ஆண்டுகள் உணவளித்துவந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா.உனக்கு உயிர் அளித்து உன்னை 10 மாதம் சுமந்து உனக்கு தனது தொப்பிள் கொடிமூலம்உணவளித்து நீ பிறந்தவுடன் தன் உதிரத்தை பாலாக்கி உனக்கு அளித்து நீ வளர்ந்தவுடன் தான் பசியோடிருந்தாலும் உன் பசியை போக்கி உன் நம்மைக்காகவே பாடுபட்ட உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா,உன் தந்தை கால் கை தளர்ந்து தன்னிலை இல்லாத பொழுது அவருக்கு ஆறுதலாக இருந்து உணவளிக்க முடியாதா உனது தாரம் (கணவன்) (இருபாலருக்கும் பொருந்தும்) ஊனமாயின் அவளுக்கு/அவருக்கு உன்னால் உணவளிக்க முடியாதா.மனிதராக பிறந்த நாம் மற்ற ஜீவராசிகளை விட உயர்ந்தவர்களாக கருதப்படுகிறோம். சிந்திப்போம் செயலில் இறங்குவோம் நம் முதியோர்களை அன்புடன் நடத்தி காப்போம்..மூதாதையர்கள் நன்றாக கவனிக்கப்பட்டால் அவர்களது ஆசீர்வாதம் அவர்கள்மறைந்த பின்னும் பல தலைமுறைகளுக்கு நன்மைகளை செய்யும்.அவர்கள் கவனிக்கப்படாமல் துன்பத்தோடு இருந்து மனம் வருந்தி மறைந்தால் அவர்களது தாபம் நம் தலைமுறையில் பல விதமான துன்பங்களைக் கொடுக்கும் . நாம் நம் தலைமுறைக்கு நன்மையையே விரும்புவதால் நல்ல முடிவை எடுத்து முதியோரைக் காப்போம்.

TCN Media

சென்னை YMCA மைதானத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியில் இருந்த இளைஞர் மரணம்

சென்னை YMCA மைதானத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியில் இருந்த இளைஞர் மரணம்

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில், இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர், சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கார்த்திக் எனத் தெரியவந்துள்ளது. கிரிக்கெட் போட்டியில் தனது நண்பர்கள் வெற்றி பெற்றதை, ஆரவாரத்துடன் கொண்டாடிய போது, திடீரென இந்த இளைஞர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

விழித்திடு சபையே விழித்தெழு!

விழித்திடு சபையே விழித்தெழு!

தேவாலயத்தில் ஆராதனையில் பாலரைத் தேடுகிறேன் காணவில்லை!

அந்தநாள் குழந்தைகள் இல்லாத தொழுகை கண்டதில்லை இன்றோ முதியோருக்காய் ஆராதனைகள்!

இறையருளால் பெற்ற மகவு இன்நாளில் ஆண்டவனைவிட்டு
தூரமாய்!

ஆராதனை ஒழுங்றியாமல் பிள்ளையை வளர்த்தால் நாளை ஆலய கூடுகை அழிந்துபோகும்!

திரும்பிப் பாருங்கள் பெற்றவரே ஏதும் புரியாவிட்டால் தாத்தா பாட்டியை கேழுங்கள்!

வீட்டின் செல்வங்கள் ஆலயம் செல்வது கட்டாயம் பாலருக்கென தனியிடம்!

பாலர் பாடலுண்டு ஜெபம் கதையென்று தனியாய் ஓர் ஒழுங்கு கண்ணிக்க மூப்பர்!

முழங்காலிட வேண்டும் வாய்திறந்து பாடவேண்டும் வசனத்தை சத்தமாய் வாசித்தல் முக்கியம்!

ஆராதனைக்கே முதலிடம் அதில் கற்கும் ஞானப்பாட்டு கீர்த்தனையே வாழ்வில் நிரந்தரம்!

ஆலய ஆராதனை நடைமுறைகளைக் கல்லாது எதைக் கற்றும் பயனில்லை அவை கானல் நீரே!

ஓய்வுநாள் பாடசாலை தேவை ஆராதனையில் கலந்து கொள்ளாமல் வெறும் ஓய்வுநாள் பள்ளிப்படிப்பு உதவிடுமா?

ஆராதனை வேளையிலே மறு பக்கம் ஓய்வுநாள் வகுப்பு பிள்ளைகளை கூட்டிச் செல்ல படியெங்கும் கூடி திண்ணைப் பேச்சு!

குழந்தைகளை ஆலயம் அழைத்து வருதல் பெற்றோரின் கடமை பரிசுத்த ஓய்வுநாளை பரிசுத்த குலைச்சலாககின் மடமை!

பலகாலமாய் சொல்ல நினைத்து சொல்லாமல் இருந்ததை சொல் என்றது ஓர் அழகு குழந்தை!

கஸ்பாசபையின் இருநூற்றி ஆறாவது ஆண்டு நிறைவு நாள்
ஆராதனையில் பாடல்குழுவோடு அங்கத்தினர் பாட!

ஏடறியா எழுத்தறியா பாட்டறியா பொருளறியா சின்னஞ்சிறிய பிஞ்சிக் குழந்தையொன்று!

ஞானப்பாட்டு கீர்த்தனை புத்தகத்தை தலைகீழாய் திறந்து வைத்து ஏதோ பாடியது கண்டிப்பாய் இறைவன் கேட்டிருப்பார்!

அத்தனை சபை அங்கத்தினரும் குழந்தைகளை ஆராதனைக்கு அழைத்து வந்தால் தவளலாய் தத்தி நடத்தலாய் கற்கும் யாவும்!

பிள்ளைகளை ஆலய ஆராதனைக்கு அழைத்துவரத் தவறினால் சிறுவர் சிறுமியரின் ஆன்மீக அறிவை பறிக்கும் அநீதியை செய்கிறோம்!

போதகர்கள் மூப்பர்கள் பெற்றோர் இதை உணரின் எதிர்காலம் அன்பால் கட்டப்படும்!

வாழ்த்துக்களுடன்

டி.ஜி.வி.பி.சேகர்
முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர்
கன்னியாகுமரி சி.எஸ்.ஐ.பேராயம்

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று முதல்

12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடக்கம்12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு (Lab Test) இன்று தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று முதல் 14ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், வரும் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு நடக்கவுள்ளது. இதில் அனைத்து மாணவர்களுக்குக் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. All the Best Students

மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம்) சிறப்பினமாகக் கருதி முழுவதும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.