• Friday 18 October, 2024 09:06 AM
  • Advertize
  • Aarudhal FM

செங்குத்துப் பாறை மேல் குகைக் தேவாலய கட்டிடம்

அபுனா யெமடா குஹ் என்பது வடக்கு எத்தியோப்பியாவின் டைக்ரே பகுதியில் அமைந்துள்ளது. ஒரு பெரிய மலைப் பாறையைக் குடைந்து செதுக்கிக் கட்டப்பட்ட ஒரு தனித்துவமான வரலாற்றுச் சிறப்புமிக்க கிருஸ்துவ மத தேவாலயமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,580 மீட்டர் (8,460 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டடம் கெரால்டா மலைகளில் உள்ள அமைதியும் தூய்மையும் கொண்ட ஒரு குன்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளது, இது உலகின் எளிதில் அணுக முடியாத தேவாலயங்களில் ஒன்றாகும்.

தேவாலயம் ஒரு குன்றின் விளிம்பில் உள்ள திடமான பாறையால் செதுக்கப்பட்டது. அதை அடைய, பார்வையாளர்கள் செங்குத்துப் பாறை முகத்தில் ஏற வேண்டும். பல நூற்றாண்டுகளாகப் பாறையில் அமைந்திருக்கும் கைப்பிடிகள் மற்றும் கால்தடங்களைத் தான் பயன்படுத்தித் தான் ஏறுக்கிறார்கள். இதற்கு நல்ல உடல் தகுதி தேவை.

6ஆம் நூற்றாண்டில் பைசண்டைன் பேரரசில் இருந்து எத்தியோப் பியாவிற்கு கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த ஒன்பது பேரில் ஒருவரான அபுனா யெமாதா குஹ் என்பவரால் இது உருவாக்கப்பட்டுள்ளது. தேவாலயம் இன்னும் செயலில் உள்ள வழிபாட்டுத் தலமாக உள்ளது. பாதிரியார்களும் சுற்றுலாப் பயணிகளும் இதைக் காண்பதற்கான பயணத்தைத் தவறாமல் மேற்கொள்கின்றனர்.

நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் நடந்து சென்று பார்க்கும் வகையில் உள்ளது.

Nandi Statue, Christian Church - A historical wonder buried in Mettur Dam நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்.

நந்தி சிலை

மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகள் ஆன நிலையில், அணை கட்டப்பட்ட போது 60 சதுர மைல் பரப்பளவு, நீர்த்தேக்கப் பகுதியாக அளவீடு செய்யப்பட்டது. அப்பகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசித்து வந்த மக்கள் வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அவர்கள் கிராமங்களை விட்டு வெளியேறும்போது, வழிபாட்டு தலங்களை அப்படியே விட்டுச் சென்றனர். இவ்வாறு நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில், பெரிய நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேசுவரர் கோயில் மற்றும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயத்தை மக்கள் இடிக்காமல் விட்டுச் சென்றனர். சுண்ணாம்பு கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு கட்டப்பட்ட இந்த வழிபாட்டு தலங்கள், ஆண்டுக்கணக்கில் தண்ணீரில் மூழ்கி கிடந்தாலும் சிதிலமடையாமல் காணப்படுகிறது.

நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்.

புகழ்பெற்ற நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரியும் சமயங்களில், வெளியே தெரியும் ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில் கோபுரம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை சிலர் பரிசலில் அருகில் சென்று பார்த்து வருவது வழக்கம். அப்போது, சமூக விரோதிகள் சிலர் நாச வேலையில் ஈடுபட்டதால், கிறிஸ்தவ இரட்டை கோபுரத்தில் ஒன்று இடிந்து விழுந்தது. நந்தி சிலையும் சேதப்படுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து, கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

ஆனால், அணைக்கான நீர்வரத்து திருப்திகரமாக இல்லாததால், நீர் மட்டம் படிப்படியாக சரிந்தது. அது மட்டுமின்றி இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுவதால் மேட்டூர் அணையில் உள்ள நீர் அதிரடியாக சரிந்து வருகிறது. எனவே, தற்போது மேட்டூர் செல்லும் சுற்றுலா பயணிகள் பண்ணவாடி பரிசல் இல்லத்தில் இருந்து பரிசல் மூலம் மேட்டூர் அணை அடியில் இருந்த ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயத்தின் கோபுரம் உள்ளிட்டவைகளை சுற்றுலா பயணிகள் தற்போது காண முடிகிறது.

இதற்காக அங்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் மேட்டூர் பண்ணவாடிக்கு சென்று ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில் மற்றும் நந்தி சிலையை வழிபட்டு வருகின்றனர்.

நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்.

செல்லும் வழி: 

சேலத்தில் இருந்து மேட்டூர் சென்று அங்கிருந்து மூலக்கடை, சின்ன மேட்டூர், கொளத்தூர் வழியாக 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்ணவாடி பரிசல் இல்லம் சென்றடைந்தால் கரையில் இருந்து பார்க்கும் தொலைவில் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயத்தின் கோபுரம் தெரியும்.

மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் பண்ணவாடி பரிசல் துறைக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு சென்ற பின் கட்டணம் செலுத்தி பரிசல் மூலமாக ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயத்தின் கோபுரத்தை அருகில் சென்று காண முடியும். ஆனால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் நடந்துசென்று பார்க்கும் வகையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை:

மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து பண்ணவாடி பரிசல் துறைக்கு இயக்கப்படும் பேருந்துகள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீண்டநேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அரசு போக்குவரத்துக் கழகம் இதற்கு தீர்வு காணும் விதமாக விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் அதிக அளவு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

மோடி 3.0 அமைச்சரவையின் ‘கேரள சர்ப்ரைஸ்’ – பாஜகவின் கிறிஸ்தவ முகம் ஜார்ஜ் குரியனின் பின்புலம்

கோட்டயம்: மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் கேரள பாஜகவின் கிறிஸ்தவ முகமாக அறியப்படும் ஜார்ஜ் குரியனுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு நேற்று பதவியேற்றுக் கொண்டது. புதிய அமைச்சரவையில், பிரதமர் மோடி உட்பட 24 மாநிலங்களைச் சேர்ந்த 72 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 11 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் கேரளாவில் இருந்து 2 பேர் இணையமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அனைவரும் எதிர்பார்த்தது போல் நடிகர் சுரேஷ் கோபி அமைச்சராக இடம்பெற்ற நிலையில், சர்ப்ரைஸாக கேரள பாஜகவின் துணைத் தலைவர் ஜார்ஜ் குரியனுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.

யார் இந்த ஜார்ஜ் குரியன்? – கேரளாவில் பாஜகவின் கிறிஸ்தவ முகமாக அறியப்படுபவர் இந்த ஜார்ஜ் குரியன். கோட்டயத்தை சேர்ந்த இவர், தற்போது கேரள பாஜகவின் துணைத் தலைவராக உள்ளார். வழக்கறிஞரான இவர், தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக சார்பில் பங்கேற்பதால் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான நபரும் கூட.

மேலும், கேரளாவில் பிரதமர் மோடி, அமித் ஷா போன்ற தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் அவர்களின் பேச்சுக்களை மொழிபெயர்ப்பதும் இவரே. 1980-ல் இருந்தே பாஜகவில் இருக்கும் இவர், பாரதிய யுவ மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளர், பாஜக மாநிலச் செய்தி தொடர்பாளர், தேசிய செயற்குழு உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார்.

தேசிய சிறுபான்மை ஆணையத்தின் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். இந்த சமயத்தில் கேரளத்தில் கிறிஸ்தவ பெண்கள் காதல் திருமண விவகாரத்தில் லவ் ஜிஹாத் செய்யப்படுகிறது எனக் கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தினார். இவர், 2006-ல் புதுப்பள்ளி தொகுதியில் அப்போதைய கேரள முதல்வர் உம்மன் சாண்டியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், தொடர்ந்து தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் குரியன் இடம் பெற்றிருப்பது, கிறிஸ்தவ சமூகத்துடன் பழகுவதற்கான பாஜகவின் மற்றொரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், குரியன் கேரளாவின் மிக முக்கியமான கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான சீரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்.

சமீப காலமாக கேரள கிறிஸ்தவ குழுக்களின் ஆதரவை பெற பாஜக தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. அதற்கு பலன்களும் கிடைத்து வருகின்றன. திருச்சூரில் சுரேஷ் கோபியின் வெற்றிக்கு ஓரளவு கிறிஸ்தவர்களின், குறிப்பாக கத்தோலிக்கர்களின் ஆதரவே காரணம் என பாஜக தரப்பு சொல்கிறது. இந்த பின்னணியில் தான் தற்போது ஜார்ஜ் குரியனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பாஜக கூட்டணியில் ஒரு கிறிஸ்தவ எம்.பி கூட இல்லை

பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

இதனால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு ஆன மோடியை ஆட்சி அமைக்க வருமாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று கேட்டுக்கொண்டார். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால், இந்த அரசு 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதி என தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்” என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களில் ஒருவர் கூட பாராளுமன்ற தேர்தலில் வென்று எம்.பி.யாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்., ராணுவத்தில் கிறிஸ்தவ பெண்ணுக்கு முக்கிய பதவி

இஸ்லாமாபாத்: கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் பாக்.,ராணுவத்தின் பிரிகேடியர் பதவியில் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தில் மருத்துவ பிரிவில் 26 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் கிறிஸ்தவமதத்தை சேர்ந்த பெண் ஹெலன் மேரி ராபர்ட்ஸ். ராணுவத்தில் பரிகேடியர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் தேர்வு வாரியத்தால் நியமனம் செய்யப்படுகின்றனர். இந்நிலையில் பிரிகேடியர் பதவிக்கு தற்போது கிறிஸ்தவ பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்,

இவரது நியமனத்திற்கு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கடின உழைப்பாளி பெண்கள் நாட்டிற்கு தனித்துவமாக சேவையாற்றும் பெண்கள் குறித்து முழு தேசமும் பெருமிதம் கொள்கிறது என வாழ்த்தி உள்ளார்.

கடந்த ஆண்டு ராவல்பிண்டியில் உள்ள கிறிஸ்தவ சர்ச்சில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, ​​நாட்டின் வளர்ச்சியில் சிறுபான்மை சமூகத்தினர் ஆற்றிய பங்கை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் பாராட்டினார்.

2021 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டில் 96.47 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர், அதைத் தொடர்ந்து 2.14 சதவீதம் இந்துக்கள், 1.27 சதவீதம் கிறிஸ்தவர்கள், 0.09 சதவீதம் அஹ்மதி முஸ்லிம்கள் மற்றும் 0.02 சதவீதம் பேர் உள்ளனர்

மரம் வீழ்ந்து தேவாலயத்திற்கு சேதம்

இலங்கை: மாரவில – தல்வில பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது பாரிய மரமொன்று வீழ்ந்ததில், அந்த தேவாலயத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

நேற்று (03 June 2024) ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தப் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, இவ்வாறு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் இருந்த பெரிய மரம் சரிந்து தேவாலயம் மீது வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அந்த தேவாலயத்தின் ஒரு பகுதி மற்றும் கூரை என்பவற்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் சம்பவம் இடம்பெற்ற போது, அந்த தேவாலயத்திற்குள் எவரும் இருக்கவில்லை என புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தேவாலயத்தின் மீது வீழ்ந்த மரத்தின் கிளைகளையும், சேதமடைந்த கட்டிடங்களையும் அப்பகுதி மக்கள் அகற்றி வருகின்றனர்.

பாகிஸ்தான் கிறிஸ்தவ மக்களுக்காக நிதி திரட்டும் மறைமாவட்டம்

பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற முன்னாள் எதிர்கட்சித் தலைவரான ராஜா ரியாஸின் தந்தை 1960 ஆம் ஆண்டில் ஏழை கிறிஸ்தவர்களை அக்பராபாத்தில் இலவசமாகத் குடியேற அனுமதித்தார்

பாகிஸ்தானின் அக்பராபாத் பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேற நீதிமன்றம் அறிக்கைவிடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட அக்கிறிஸ்தவர்களின் வாழ்விற்காக நிதி திரட்டத் தொடங்கியுள்ளது மத்திய பாகிஸ்தானின் மறைமாவட்டம்.

அண்மையில் பைசலாபாத் மறைமாவட்டத்தில் உள்ள அக்பராபாத் பகுதியில் வாழ்ந்து வரும் 75 கிறிஸ்தவ குடும்பங்கள் தாங்கள் தங்கியிருந்த 57 ஏக்கர் நிலப்பகுதிகளிருந்து வெளியேற நீதித்துறையால் பணிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யும் வகையில் 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டு வருகின்றது.

இப்பகுதியில் வாழும் 50க்கும் மேற்பட்ட கிறிஸ்தவக் குடும்பங்களில் வாழ்பவர்கள் பெரும்பாலும் துப்புரவுப் பணியாளர்களாக உள்ளனர். இப்பகுதியில் வாழும் ஷாஜாத் மசிஹ் என்பவர் தனது ஐந்து சகோதரகள் மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகின்றார். தனது நிலைபற்றி ஆசிய கத்தோலிக்க செய்திகளுக்குக் கூறுகையில், தங்களை மீட்க ஒரு மீட்பர் வருவார் என்றும் அவருக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறினார்.

தரிசாக இருந்த நிலத்தை மக்கள் வாழக்கூடிய இடமாக மாற்ற உழைத்தவர்களில் எனது தாத்தாவும் ஒருவர் என்று கூறிய மசிஹ் அவர்கள்,  1960 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற முன்னாள் எதிர்கட்சித் தலைவரான ராஜா ரியாஸின் தந்தை ஏழைக் கிறிஸ்தவர்களை அக்பராபாத்தில் இலவசமாகக் குடியேற அனுமதித்தார் என்றும் கூறினார்.

கிறிஸ்துவ மதத்தை திணிக்க வேண்டாம்: பள்ளிகளுக்கு கத்தோலிக்க பேரவையின் புதிய வழிகாட்டுதல்கள்

கிறிஸ்துவ மதத்தை திணிக்க வேண்டாம்: பள்ளிகளுக்கு கத்தோலிக்க பேரவையின் புதிய வழிகாட்டுதல்கள் நாட்டின் “தற்போதைய சமூக-கலாச்சார, சமய மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக உருவாகி வரும் சவால்களை” எதிர்கொள்ள இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CBCI) அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கிய சில முக்கிய பரிந்துரைகள் இவை.

அனைத்து நம்பிக்கைகளையும் மரபுகளையும் மதிக்கவும், பிற மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீது கிறிஸ்தவ மரபுகளை திணிக்க வேண்டாம். தினசரி காலை பொழுதில் மாணவர்களின் அணிவகுப்பின்போது போது அரசியலமைப்பின் முன்னுரையை மாணவர்களை வாசிக்கச் செய்யுங்கள், பள்ளி வளாகத்தில் “அனைத்து வமத பிரார்த்தனை அறை” அமைக்கவும்.

 நாட்டின் “தற்போதைய சமூக-கலாச்சார, சமய மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக உருவாகி வரும் சவால்களை” எதிர்கொள்ள இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CBCI) அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கிய சில முக்கிய பரிந்துரைகள் இவை.

 சி.பி.சி.ஐ என்பது இந்தியாவில் உள்ள கத்தோலிக்க சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பாகும். அதன் கீழ், தோராயமாக 14,000 பள்ளிகள், 650 கல்லூரிகள், ஏழு பல்கலைக்கழகங்கள், ஐந்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 450 தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் உள்ளன.

இந்த பரிந்துரைகள் சி.பி.சி.ஐ.யின் கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட 13 பக்க வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல்.  ஆவணத்தின் ஒரு பகுதியாகும், ஜனவரி மாதம் பெங்களூரில் சி.பி.சி.ஐ-யின் 36 வது பொதுக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து, விவாதிக்கப்பட்ட மையக் கருப்பொருள்களில் நாட்டின் தற்போதைய சமூக-அரசியல் நிலைமை ஆகும்.

கிறிஸ்தவ சமூகத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிரான சமீபத்திய தாக்குதல்கள் மற்றும் போராட்டங்களின் பின்னணியில் முதன்முறையாக இந்த வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

திரிபுராவில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்தவ மிஷனரி நடத்தும் பள்ளியின் ஆசிரியர் ஒரு மாணவனை இந்து சின்னம் பொருந்திய பேண்டை கையில் கட்டியிருந்தபோது அதைப் பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து பஜ்ரங் தள் ஆர்வலர்கள் குழு ஒன்று பிப்ரவரி மாதம் போராட்டம் நடத்தியது.

அதே மாதத்தில், அசாமில் உள்ள இந்து  அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல், மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிகளுக்கு 15 நாட்கள்  இறுதி எச்சரிக்கையை அளித்தது. அனைத்து கிறிஸ்தவ சின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும்  பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பள்ளி வளாகத்தில் அவர்கள் மதத்தை வெளிப்படுத்தும் உடையை அணிய கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய சி.பி.சி.ஐயின் தேசிய செயலாளரான ஃபாதர் மரியா சார்லஸ் எஸ்டிபி, இந்த தனித்தனி சம்பவங்களுக்கு இடையில் எந்த தொடர்பையும் உருவாக்க விரும்பவில்லை என்றாலும், இதுபோன்ற சூழ்நிலைகளில் தேவாலயம் கவனமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பார்த்துகொண்டுதான் இருக்கிறது என்று கூறினார்.

சி.பி.சி.ஐ வழிகாட்டுதல்கள் கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தவும் வலியுறுத்துகின்றன.”பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் மைதானங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்த, பூட்டிய கதவுகள், நுழைவாயில் பாதுகாப்பு அமைப்புகள், பார்வையாளர்கள் சோதனை செய்யும் நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும்” என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

“இந்த நாட்களில் உருவாகி வரும் அரசியல் மற்றும் சமூக சூழ்நிலையின் அடிப்படையில், கத்தோலிக்க பள்ளிகளைப் போல நாம் அதிக உணர்வுடன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எங்களின் பெரும்பான்மையான மாணவர்களும் ஆசிரியர்களும் எப்போதும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதிபர்களுக்கு இது ஒரு நினைவூட்டலாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, நாமும் அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இப்போது மட்டுமல்ல, பல வருடங்களாக மாணவர்களுக்கு முன்னுரையை கற்பித்து வருகிறோம். பல ஆண்டுகளாக, எங்கள் மாணவர்கள் அனைவரும் முன்னுரையை அறிந்து, அரசியலமைப்பு விழுமியங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று தந்தை சார்லஸ் கூறினார்.

 பிரதான பள்ளி கட்டிடத்தின் நுழைவாயிலில் அரசியலமைப்பின் முகவுரையை காட்சிப்படுத்துவது மற்றும் காலை  மாணவர்களின் அணிவகுப்பின் போது மாணவர்களை வாசிக்க வைப்பது மட்டுமின்றி, பள்ளி மாணவர்களிடையே மத மற்றும் கலாச்சார உணர்திறன் மற்றும் பன்முகத்தன்மைக்கான மரியாதையை ஊக்குவிக்கவும் வழிகாட்டுதல்களை பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. . கல்வி நிறுவனங்களில் வரவேற்பு மற்றும் இணக்கமான பணிச்சூழலை உருவாக்க, உள்ளடக்கிய நடைமுறைகள் குறித்த பயிற்சியை மேலும் பரிந்துரைக்கிறது.

 இந்தப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் சிறுபான்மைச் சான்றிதழைத் தவிர, வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்குப் பரிந்துரைக்கின்றன, “சில முக்கிய  இந்திய சுதந்திரப்  போராட்ட  வீரர்கள்,  விஞ்ஞானிகள், கவிஞர்கள், தேசியத் தலைவர்கள் போன்றவர்களின் புகைப்படங்களை பள்ளி வளாகம்,  நூலகம்,  தாழ்வாரங்கள்  போன்றவற்றில் காட்சிப்படுத்த வேண்டும்.

” மேலும், பள்ளி வளாகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு தனியான ‘சர்வமத பிரார்த்தனை அறை’ அல்லது சர்வதர்ம பிரார்த்தனாலையாவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 இந்த வழிகாட்டுதல்கள் எங்கள் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு மென்மையான நினைவூட்டல் அல்லது விழிப்புணர்வு அழைப்பு. இவை பாதுகாப்பு பொறிமுறையின் ஒரு முறையாக பரிந்துரைக்கப்படவில்லை, மாறாக அனைத்து பள்ளிகளையும் நினைவூட்டுகிறது, அவை எப்படி இருக்க வேண்டும், எப்படி எல்லாவற்றையும் ஒழுங்காக வைத்திருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார், ”  நடந்த சில நிகழ்வுகள், அவை அவ்வளவு சுவையாக இல்லை. மேலும், நாங்கள் எப்போதும் எங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பற்றி எப்போதும் நாங்கள் கவலை படுகிறோம்.

 வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் கத்தோலிக்கப் பள்ளிகளைக் குறிக்கும் அதே வேளையில், திருச்சபையின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு இவை பொருந்தும் என்று தந்தை சார்லஸ் கூறினார்.

கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி விழா

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.

கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி விழா! title=

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது

குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் உள்ள பழமையான புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் நான்கு கிலோமீட்டர் தூரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை கையில் ஏந்தி பவனியாக ஊர்வலம் வந்து தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர் .

வண்ணாரப்பேட்டை ஆரோக்கியநதர் ஆலயம் பங்குத்தந்தை வர்கீஸ் ரோசாரியோ தலைமையில் 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு ஆராதனையில் ஈடுபட்டனர். குருத்தோலை முக்கிய பிரார்த்தனையின் போது வருகின்ற 19 ஆம் தேதி நடக்கக்கூடிய தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்கவும் என பங்குத் தந்தை கிறிஸ்தவ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். 

கோவையிலும், பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். கோவை காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் ஆலயம் முன்பாக துவங்கியது. இதில், ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயச்சந்திரன் பொருளாளர் ரவி இன்பசிங்,உதவி ஆயர் சாம் ஜெபசுந்தர்,சபை ஊழியர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காந்திபுரம் சி‌ எஸ் ஐ‌ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில், ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் குருத்தோலைகளை கையில் ஏந்திக்கொண்டு ஓசன்னா ஓசன்னா எனும் இயேசுவின் திரு நாமத்தை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.

விஜய் ஆண்டனிக்கு கெடு விதித்த தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு

Vijay Antony about Jesus: இயேசு குறித்து இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அண்டனி பேசியதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

Chennai

சென்னை

சென்னை: தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் 2 படத்தின்‌ மூலம் இயக்குநராகவும் மாறியவர். தற்போது இவரது நடிப்பில் ரோமியோ என்ற படம் ரிலீஸ் ஆக உள்ளது. வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ள இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில், விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஜய் ஆண்டனி, மது பழக்கம் பற்றிய செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தார். அதில், “ஆண், பெண் என்ற வேறுபாடு வேண்டாம், மது என்றால் எல்லோருக்கும் ஒன்றுதான்.

நமக்கு என்ன என்னலாம் இருக்கோ, அது பெண்களுக்கும் உரித்தானது தான். நான் மதுவை ஆதரிக்கவில்லை. மது நம்ம ஊரில் ரொம்ப நாட்களாகவே இருந்து வருகிறது. சாராயம் என்று இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன் ஜீசஸ் கூட திராட்சை ரசம் குடித்திருக்கிறார்” என்று பேசியிருந்தார். விஜய் ஆண்டனியின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனிக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் கடும் கண்டனம். உலகமெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களாலும், சாதி மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் போற்றப்படக்கூடியவர் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து.

கிறிஸ்தவர்களையும், இயேசு கிறிஸ்துவையும் இழிவுபடுத்தும் விதமாக எவ்வித ஆதாரம் இல்லாமல், திராட்சை ரசத்தை போதை வஸ்துக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து மது குடித்தார் என்று பொதுவெளியில் பேசி, மாபெரும் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் ஊடக செயலாளர் சமரனிடம் பேசியபோது, “விஜய் ஆண்டனி பேசியது தவறு. அதற்கு அவர் மன்னிப்பு கேட்க 24 மணிநேரம் கால அவகாசம் கொடுத்துள்ளோம். அதன்பிறகும் அவர் மன்னிப்பு கேட்காத பட்சத்தில், அவர் வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.