• Monday 10 March, 2025 06:46 AM
  • Advertize
  • Aarudhal FM

USஇல் இருந்து இந்தியாவுக்கு திரும்பும் 18,000 பேர்

Trump

டிரம்ப் பொறுப்பேற்றதும், சட்டவிரோத குடியேற்றத்தை தடை செய்யும் சட்டத்தில் கையெழுத்திட்டார். அதன்படி, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை அடையாளம் காணவும், நாட்டுக்கு திரும்பி அழைத்து வரவும், இந்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவுள்ளது. இதுவரை 18,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களை அழைத்துக் கொள்வதன் மூலம், அமெரிக்காவுடன் இணக்கமான உறவை தொடரவுள்ளது இந்தியா.

நாம் செய்யும் பிரசங்கம் எப்படி இருக்கிறது

இளம் தலைமுறை ஊழியர்களின் பிரசங்கங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன… தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்த்தால் அது துக்கத்தையே ஏற்படுத்துகிறது…..

ஆ…….. ஐ……….. ஊ…… ன்னு கத்துராய்ங்க…. மைக்கை உதட்டில் வைத்து கொண்டு ரிசீவ் பவர்…. ன்னு ஓயாமல் சொல்லி…. சொல்லி கழுதை போல கனைக்கிறார்கள்…. அதிலும் ஒரு பக்கம் ஒன் டு ரிதம் போட்டு காட்டு கத்தம் கத்தி…. ஹார்ட் அட்டாக் வராதவனுக்கெல்லாம் வந்திரும் போல…… டேய் என்னடா பண்றீங்க ன்னு உலகத்தாரின் பரியாசத்திற்கும் கேலி கிண்டலுக்கும் உரியதாக மாறுகிறது.

பிரசங்கம் செய்யும் போது மேடையில் அங்கும் இங்கும் வெறி பிடித்த நாயை போல அலைகிறார்கள்…. ஏன் என்று தெரியவில்லை. ஒரு இடத்தில் நின்று கொண்டு நிதானமாக பேசினால் என்ன…. இதை எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.நிதானமாக அழகாக தெளிவாக பேசலாமே… ரொம்பவே வேகம் வேகமாக பேசுகிறார்கள்…. அது மக்கள் மனதில் எப்படி நிற்கும். நிதானமாக பேசினால் தான் எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்கள் மனதில் இருக்கும். அது கிரியை செய்யும்.

எடுக்கிற வசனத்திற்கும் பிரசங்கத்திற்கும் சம்பந்தம் இல்லை… ஏதோ ஒரு வசனத்தை வைத்து பேசுகிறார்கள்…தேவ சமூகத்தில் கிடைக்கும் மன்னா இன்று மண்ணாகி போனது.

மற்ற ஊழியர்களுக்கு கீழ் உட்கார்ந்து கற்றுக் கொள்ள ஆசை இல்லை… மற்றவர்களின் பிரசங்கத்தை கேட்பதும் இல்லை மதிப்பதும் இல்லை…

மொத்தத்தில் வசனத்தை தெளிவாக பேசும் ஊழியர்கள் தேசத்தில் குறைந்து விட்டார்கள்.காரணம் வேதம் வாசிக்கும் தியானிக்கும் பழக்கம் ஊழியர்களிடம் இப்போது குறைந்து விட்டது.

அவரவர்களுக்கு ஏற்றப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். அதை குறித்து அவர்கள் எவருக்கும் பயப்படுவதில்லை.

நாம் செய்யும் பிரசங்கத்தில்…

இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்பட வேண்டும்.
இரட்சிப்பு
மனந்திரும்புதல்
உயிர்மீட்சி
புதுப்பிப்பு
சுத்திகரிப்பு
இயேசு கிறிஸ்துவின் வருகை
ஆத்தும ஆதாயம்
ஞானஸ்நானம்
பரிசுத்தத்தின் அவசியம்.
சபையின் நோக்கங்கள்
பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம்.. அதன் முக்கியத்துவம்.
பரலோகம்
தூதர்களின் பணிகள்
சாத்தானின் பொய்களும் அவனது தந்திரங்கள் என்னென்ன…
அவனின் முடிவு எப்படி இருக்கும்.
நரகம் பாதாளம்… யாருக்கு
கடைசி காலம் எப்படி இருக்கும்.

இப்படி அனைத்து சாரம்சமும் ஒரு பிரசங்கத்தில் இருக்க வேண்டும். ஒரு பிரசங்கி என்பவன் ஒரு துப்பாக்கி வைத்து இருப்பவனை போல அல்ல.. யாரையாவது குறிவைத்து சுட…. மாறாக அவன் ஒரு பெரிய அணுகுண்டை கையில் வைத்திருக்கிறவனுக்கு சமானம். ஒரு அணுகுண்டுக்கு இருக்கும் வல்லமையை விட பிரசங்கத்திற்கு அதிகம் வல்லமை உண்டு. காரணம் எந்த அணுகுண்டும் சரீரத்தை உடைக்க முடியும் ஆனால் இருதயத்தை உடைக்க முடியாது. பிரசங்கம் மட்டுமே மனிதர்களின் இருதயத்தை உடைக்கும் வல்லமை படைத்தது. பிரசங்கிகள் தேவனின் வாயாக இருக்கிறார்கள். தேவனுடைய ஆவியானவரே அந்த பாத்திரத்தில் இருந்து பேசுகிறார். ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் பிரசங்கிகள்.

அது மட்டுமல்ல இப்போது உள்ள கால சூழ்நிலையில் எல்லாருடைய கையிலும் மொபைல் கேமாராவோடு உள்ளது. எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டும் என்றாலும் பதிவு செய்யலாம் ஆகவே மிகவும் கவனத்துடன் பிரசங்கம் செய்ய வேண்டும். இந்த கவனம் இல்லை என்று சொன்னால் கேலிக்கூத்தாக மாறி விடும்.

மொத்தத்தில் பிரசங்க மேடையில் தேவ பிரசன்னம் இல்லை…. தேவனுக்கு பயப்படும் பயம் இல்லை. ஏதோ ஒரு பட்டிமன்ற பேச்சாளர்களை போல பேசும் இவர்களை கொண்டு பரலோக ராஜ்ஜியத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை….

சிறுமிக்கு பாலியல் தொல்லை வளர்ப்புத் தந்தை கைது

மேட்டுப்பாளையம்,; சிறுமுகையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்புத் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சிறுமுகையை சேர்ந்த 15 வயது சிறுமி சற்று மனநலம் குன்றியவர். இவரது வளர்ப்புத் தந்தை கடந்த தீபாவளி பண்டிகையின் போது, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, பக்கத்து வீட்டு பாட்டி ஒருவரிடம், சிறுமி சொல்லியுள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த அந்த பாட்டி, சைல்ட் ஹெல்ப் லைன் மூலமாக தொடர்பு கொண்டு குழந்தைகள் நல அலுவலரிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து ஆய்வு செய்ததில், வளர்ப்பு தந்தை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வளர்ப்புத் தந்தையை பிடித்து, மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோவில் கைது செய்தனர்.—-

15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை தந்தை கைது

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் இவரது மனைவி இன்பத்தாய் இருவருக்கும் திருமணம் முடிந்து ஆண், ஒன்றும் பெண் ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில், தனது மகளான 15 வயது சிறுமிக்கு மது போதையில் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக தந்தை சார்லஸ் மீது கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார்..

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் கோகிலா பாலியல் தொல்லை அளித்த சார்லஸ் என்பவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக தந்தை தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது ஓட்டப்பிடாரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா டிரம்ப் உறுதிமொழி ஏற்கும் பைபிள்

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், வருகிற ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். 2வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், தான் பதவியேற்ற பின்னர் என்னென்ன மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் செய்யப்படும் என்று தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருகிறார்.

டொனால்ட் டிரம்ப்போடு, ஜே.டி.வானஸ் என்பவர் துணை அதிபராக வரும் 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். உலகின் தலைசிறந்த நாடாக பார்க்கப்படும் அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் விழாவில் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

அந்த வகையில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு வெளிநாட்டு தலைவர்காளுடன் ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அதிபர் பதவியேற்பு விழாவின்போது டொனால்ட் டிரம்ப் உறுதிமொழியேற்கும் பைபிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், அவரது மறைந்த தாய் கொடுத்த பைபிள் மற்றும் மறைந்த அமெரிக்கா முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிள் ஆகியவற்றின் மீது உறுதிமொழி எடுக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் பதவியேற்ற போது, ஆப்ரகாம் லிங்கனின் பைபிளை கொண்டு பதவியேற்றார். அமெரிக்கா அதிபர்களின் பதவியேற்பு விழாக்களின் போது நீண்ட காலமாக பைபிள் மீது உறுதிமொழி எடுக்கம் வழக்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 62 பேர்

இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர்.

அடையாளம் காணப்படாத 4 பேரை அடையாளம் காணவும், மீதமுள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருவனந்தபுரம் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 5 ஆண்டுகளாக பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.இந்த அதிர்ச்சி தகவலை அந்த மாணவி, தான் படித்த பள்ளியில் வழங்கப்பட்ட கவுன்சிலிங்கில் தெரிவித்தார். அவர் 13 வயதில் இருந்து, பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு பலாத்காரமும் செய்யப்பட்டிருக்கிறார்.

பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவியிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். யார் யாரெல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்? என்று வீராங்கனையிடம் விசாரணை நடத்தப்பட்டது.அப்போது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 5 ஆண்டுகளில் தன்னை 62 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினார். மேலும் தன்னை சீரழித்தவர்களில் பலரது பெயர் விவரங்களையும் அவர் தெரிவித்தார். அதனடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 62 பேர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.வீராங்கனையை சீரழித்தவர்களில் அவரது காதலன், காதலனின் நண்பர்கள், உடற்பயிற்சி ஆசிரியர், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், உடன் படிக்கும் மாணவர்கள் என பலரும் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களில் வீராங்கனையின் காதலன் உள்பட 20 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, மாணவியை பலாத்காரம் செய்தபோது எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோவை காண்பித்து தொடர்ந்து சீரழித்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.பள்ளி படிக்கும் வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவினர் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனையிடம் மாஜிஸ்திரேட்டு ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தார்.இந்நிலையில் அடூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் விளையாட்டு வீராங்கனை நேற்று ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் மற்றும் தன்னை சீரழித்தவர்கள் பற்றிய விவரங்களை விளையாட்டு வீராங்கனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாணவி அளித்த வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார்.பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பத்தினம் திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 62 பேரில் 58 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர். அடையாளம் காணப்படாத 4 பேரை அடையாளம் காணவும், மீதமுள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களில் 15 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்த வழக்கின் பொறுப்பு அதிகாரியான போலீஸ் டி.ஐ.ஜி. அஜீதா பேகம் தெரிவித்துள்ளார்.

அம்மாவின் போனில் ஆபாச வீடியோ பார்த்து கொடுமை

உலகம் எதை நோக்கிப் போகிறது என்றே தெரியவில்லை. 13 வயது சிறுவன் ஒருவன், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் அடிகொப்பகா என்ற இடத்தில் நடந்துள்ளது. வீட்டுக்கு அருகில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, இந்த கொடுமையை செய்திருக்கிறான். அம்மாவின் போனில் ஆபாச வீடியோ பார்த்துவிட்டு, இந்த குற்றத்தை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெற்றோரே கவனிங்க.

உஷார் மக்களே.. இப்படித்தான் ஏமாத்துவாங்க!

சைபர் க்ரைம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், எப்படியெல்லாம் மோசடியாளர்கள் ஏமாற்றுவார்கள் என ஒரு லிஸ்ட்டை போலீசார் வெளியிட்டுள்ளனர். • உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துவிட்டதாக கூறி வீடியோ காலில் பணம் கேட்பார்கள் • 1% வட்டியுடன் லோன் தருகிறோம் என்பார்கள் • வாட்ஸ் அப்பில் SBI REWARDS என வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் திடீரென கால் செய்து OTP கேட்டால் சொல்ல வேண்டாம்.

கர்த்தரை துதிப்பது

1) இன்பமானது – சங் 147:1
2) நல்லது – சங் 147:1
3) ஏற்றது – சங் 147:1
4) நலமானது – சங் 92:1,3
5) தகும் – சங் 33:1
6) கர்த்தருக்கு பிரியமானது – சங் 69:30,31
7) கர்த்தர் மகிமைபடுகிறார் – சங் 50:23

பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் குணமாக மருத்துவர் கூறுவது

பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் குணமாக மருத்துவர் சிவராமன் கூறுவது என்ன?
நீங்கள் பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் ஆகியவற்றால் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், அவற்றில் இருந்து குணமாக மருத்துவர் சிவராமன் கூறியதை நாங்கள் இங்கே தருகிறோம்

காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்க் காய்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

நமது பாரம்பரிய இயற்கை உணவுகளில் உள்ள மருத்துவக் குணங்களையும் சித்த மருத்துவத்தில் உள்ள சிறப்புகளையும் அறிவியல் மொழியில் பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பரப்பியவர் மருத்துவர் சிவராமன்.

நீங்கள் பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டிஸால் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், அவற்றில் இருந்து குணமாக மருத்துவர் சிவராமன் யூடியூப் சேனலில் கூறியதை நாங்கள் இங்கே தருகிறோம். சிலருக்கு பனிக் காலம் என்றாலே சளி, மூக்கடைப்பு, தும்மல் ஏற்படும். இது உடல்நிலை, சூடு காரணமாக ஏற்படுகிறது.

இப்படி பனிக் காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்க் காய்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். அப்படி, சாப்பிட வேண்டிய சூழல் இருந்தால், மிளகு தூவி சாப்பிட அறிவுறுத்துகிறார்.

அதே போல, பனிக் காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள் இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், பால் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்க் காய்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

நமது பாரம்பரிய இயற்கை உணவுகளில் உள்ள மருத்துவக் குணங்களையும் சித்த மருத்துவத்தில் உள்ள சிறப்புகளையும் அறிவியல் மொழியில் பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பரப்பியவர் மருத்துவர் சிவராமன்.

நீங்கள் பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டிஸால் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், அவற்றில் இருந்து குணமாக மருத்துவர் சிவராமன் யூடியூப் சேனலில் கூறியதை நாங்கள் இங்கே தருகிறோம். சிலருக்கு பனிக் காலம் என்றாலே சளி, மூக்கடைப்பு, தும்மல் ஏற்படும். இது உடல்நிலை, சூடு காரணமாக ஏற்படுகிறது.

இப்படி பனிக் காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்க் காய்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். அப்படி, சாப்பிட வேண்டிய சூழல் இருந்தால், மிளகு தூவி சாப்பிட அறிவுறுத்துகிறார்.

அதே போல, பனிக் காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள் இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், பால் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

மேலும், சைனசிட்டீஸ் இருந்தாலும், ஜுரம், உடல்நலப் பிரச்னை இல்லை என்றால் தலைக்கு குளிக்கலாம் என்கிறார். மேலும், சுக்கு தைலம், நொச்சி தைலம் ஆகியவற்றை தேய்த்துக்கொள்ளலாம் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.

சைனசிட்டீஸ் இருப்பவர்கள் தூதுவலை, கற்பூரவல்லி, வெற்றிலை, மிளகு ஆகியவற்றைப் போட்டு, 2 டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கால் டம்ப்ளராக்கி கசாயம் குடிக்க வேண்டும் என்று மருத்துவர் சிவமரான அறிவுறுத்துகிறார். மேலும், மிளகு பாவனம் செய்து சாப்பிடலாம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.