- 195
- 20250402
கர்த்தரை துதிப்பது

1) இன்பமானது – சங் 147:1
2) நல்லது – சங் 147:1
3) ஏற்றது – சங் 147:1
4) நலமானது – சங் 92:1,3
5) தகும் – சங் 33:1
6) கர்த்தருக்கு பிரியமானது – சங் 69:30,31
7) கர்த்தர் மகிமைபடுகிறார் – சங் 50:23
பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் குணமாக மருத்துவர் சிவராமன் கூறுவது என்ன?
நீங்கள் பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் ஆகியவற்றால் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், அவற்றில் இருந்து குணமாக மருத்துவர் சிவராமன் கூறியதை நாங்கள் இங்கே தருகிறோம்
காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்க் காய்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
நமது பாரம்பரிய இயற்கை உணவுகளில் உள்ள மருத்துவக் குணங்களையும் சித்த மருத்துவத்தில் உள்ள சிறப்புகளையும் அறிவியல் மொழியில் பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பரப்பியவர் மருத்துவர் சிவராமன்.
நீங்கள் பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டிஸால் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், அவற்றில் இருந்து குணமாக மருத்துவர் சிவராமன் யூடியூப் சேனலில் கூறியதை நாங்கள் இங்கே தருகிறோம். சிலருக்கு பனிக் காலம் என்றாலே சளி, மூக்கடைப்பு, தும்மல் ஏற்படும். இது உடல்நிலை, சூடு காரணமாக ஏற்படுகிறது.
இப்படி பனிக் காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்க் காய்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். அப்படி, சாப்பிட வேண்டிய சூழல் இருந்தால், மிளகு தூவி சாப்பிட அறிவுறுத்துகிறார்.
அதே போல, பனிக் காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள் இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், பால் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.
சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்க் காய்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
நமது பாரம்பரிய இயற்கை உணவுகளில் உள்ள மருத்துவக் குணங்களையும் சித்த மருத்துவத்தில் உள்ள சிறப்புகளையும் அறிவியல் மொழியில் பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பரப்பியவர் மருத்துவர் சிவராமன்.
நீங்கள் பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டிஸால் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், அவற்றில் இருந்து குணமாக மருத்துவர் சிவராமன் யூடியூப் சேனலில் கூறியதை நாங்கள் இங்கே தருகிறோம். சிலருக்கு பனிக் காலம் என்றாலே சளி, மூக்கடைப்பு, தும்மல் ஏற்படும். இது உடல்நிலை, சூடு காரணமாக ஏற்படுகிறது.
இப்படி பனிக் காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்க் காய்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். அப்படி, சாப்பிட வேண்டிய சூழல் இருந்தால், மிளகு தூவி சாப்பிட அறிவுறுத்துகிறார்.
அதே போல, பனிக் காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள் இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், பால் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.
மேலும், சைனசிட்டீஸ் இருந்தாலும், ஜுரம், உடல்நலப் பிரச்னை இல்லை என்றால் தலைக்கு குளிக்கலாம் என்கிறார். மேலும், சுக்கு தைலம், நொச்சி தைலம் ஆகியவற்றை தேய்த்துக்கொள்ளலாம் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
சைனசிட்டீஸ் இருப்பவர்கள் தூதுவலை, கற்பூரவல்லி, வெற்றிலை, மிளகு ஆகியவற்றைப் போட்டு, 2 டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கால் டம்ப்ளராக்கி கசாயம் குடிக்க வேண்டும் என்று மருத்துவர் சிவமரான அறிவுறுத்துகிறார். மேலும், மிளகு பாவனம் செய்து சாப்பிடலாம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
1) தாய், தகப்பனை – யாத் 20:12
2) புருஷனை – எஸ்தர் 1:20
3) மனைவியை – 1 பேதுரு 3:7
4) முதிர் வயது உள்ளவர்களை – லேவி 19:32
5) முடி நரைத்தவர்களை – லேவி 19:32
6) கர்த்தரை – நிதி 3:9
7) ராஜாவை – 1 பேது 2:17
8) கர்த்தருக்கு பயந்தவர்களை – சங் 15:4
9) உத்தம விதவைகளை – 1 திமோ 5:3
10) எல்லாரையும் – 1 பேது 2:17
திருப்பதி: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். சேலம், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். திருப்பதி தேவஸ்தானம் இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.
இந்த கொடூர விபத்தில் 34 பேர் காயம் அடைந்த நிலையில் அங்கே பக்தர்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் பெற பக்தர்கள் குவிந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் பலியாகி உள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட மேலும் பலர் சிகிச்சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
டோக்கன் பெறுவதற்கு கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து உள்ளது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து அங்கே நிலைமை மோசமாகி.. கீழே விழுந்தவர்கள் மீது கால் வைத்தவர்கள் மேலும் பலர் தடுக்கி கீழே விழுந்தனர்.
கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் ஏறி நடந்து சென்றதால் பலருக்கு உடலில் காயம் ஏற்பட்டு உள்ளது. அதேபோல் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. சிலருக்கு கழுத்து பகுதியில் மக்கள் மிதித்ததில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.இதனால் சம்பவ இடத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். சேலம், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். இந்த கொடூர விபத்தில் 34 பேர் காயம் அடைந்த நிலையில் 10 பேர் மோசமான உடல்நிலையில் உள்ளனர். . சொர்க்கவாசல் இலவச டோக்கன் பெற ஒரே நேரத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவே விபத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
திருப்பதி கோவில் வளாகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த நபர்களை சந்திக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திருமலைக்கு வருகை தருகிறார். இந்த விபத்திற்கு காரணமான அதிகாரிகளை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருப்பதி தேவஸ்தானம் இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.முறையாக ஏற்பாடு செய்யாத காரணத்திற்காக திருப்பதி தேவஸ்தானம் இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, தேவஸ்தான நிர்வாகம் மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிருப்தி அடைந்துள்ளதாகவும் .. தொலைபேசியில் அதிகாரிகளை கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது
திருமலை ஸ்ரீவாரி வைகுண்ட வாசலை தரிசிப்பதற்காக டோக்கன் வாங்க விஷ்ணு நிவாசம் அருகே மக்கள் வரிசையில் நிற்கையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் பலியானது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டோக்கன் பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், உயர் அதிகாரிகளை சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணிகளை செய்து வருமாறு உத்தரவிட்டுள்ளேன். நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவர்களின் உயிரைக் காப்பாற்றவும் உத்தரவிட்டுள்ளேன். நேரடியாக TTD அதிகாரிகளிடம் பேசி, நிலைமையை ஆய்வு செய்து வருகிறேன், என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
IT-யில் வேலை பார்ப்பவர்களுக்கு இணையாக கொள்ளை கும்பலிலும் சலுகைகள் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? உ.பி.யில் செல்போன் திருடும் கும்பல் மாதம் ₹15,000, இலவச உணவு, பயணச் செலவு என சலுகைகள் வழங்குகிறது. கொள்ளை சம்பவத்தில் ஒன்றில் கைதான பிறகு, ஜார்கண்டை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது இந்த கும்பல் பற்றி தகவல் வெளிவந்துள்ளது.
மடிக்கக்கூடிய லேப்டாப்கள், 360 டிகிரி லேப்டாப்களைத் தொடர்ந்து லெனோவா நிறுவனமானது நீட்டிக்கக்கூடிய டிஸ்ப்ளேவைக் கொண்ட ரோலபிள் லேப்டாப்பை அறிமுகப்படுத்த தயாராக இருக்கிறது. லெனோவா இந்த ஆண்டு ரோலபிள் டிஸ்ப்ளே கொண்ட அதன் முதல் லேப்டாப்பை சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.
மடிக்கக்கூடிய லேப்டாப்கள், 360 டிகிரி லேப்டாப்களைத் தொடர்ந்து லெனோவா நிறுவனமானது நீட்டிக்கக்கூடிய டிஸ்ப்ளேவைக் கொண்ட ரோலபிள் லேப்டாப்பை அறிமுகப்படுத்த தயாராக இருக்கிறது. லெனோவா இந்த ஆண்டு ரோலபிள் டிஸ்ப்ளே கொண்ட அதன் முதல் லேப்டாப்பை சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.
2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள், பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்ட திருத்த மசோதாவை அவர் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் விவரம் வருமாறு:-
2023-ம் ஆண்டு பி.என்.எஸ். சட்டம் தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் 2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் (தமிழ்நாடு திருத்த சட்டம்) என்று அழைக்கப்படும். இதன்படி குற்றம் சாட்டப்பட்ட நபர் பிணையில் வெளியே வர முடியாது.12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் 18 வயதுக்கு உள்பட்ட இளம்பெண்கள் மற்றும் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் அல்லது காயத்தை ஏற்படுத்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் ஆயுள் கால சிறை தண்டனை மற்றும் மரண தண்டனை கிடைக்கும்.கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் காலத்துக்கும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
18 வயதுக்கு உள்பட்ட பெண்களிடம் கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட நபரின் இயற்கையான ஆயுள் காலம் வரையில் நீட்டிக்கப்படும். மேலும் அபராதம், மரண தண்டனை ஆகியவையும் விதிக்கப்படும்.மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள்கால சிறை தண்டனை விதிக்கப்படும்.
வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஆயுள் கால சிறை ஆகியவையும் விதிக்கப்படும். காவல்துறை அலுவலர், அரசு பணியாளர், ஆயுதப்படை உறுப்பினர், சிறைச் சாலைகள், தடுப்பு காவல் இல்லம் ஆகியவற்றில் பெண்கள் அல்லது குழந்தைகள் குறிப்பிட்ட நிறுவனத்தின் பணியாளர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ, அதிகாரம் மிக்க நபர் அல்லது நெருங்கிய உறவினர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ 20 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் சிறை தண்டனை, ஆயுள் காலத்துக்கும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலும், பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் தாக்குதல் அல்லது பலத்தை பயன்படுத்தினாலும் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்.பெண்களின் ஆடைகளை அகற்றி தாக்குதலில் ஈடுபடுபவர்கள், மறைந்திருந்து பார்த்து பாலியல் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கும்.பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும்.
ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு கொடுங்காயத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை, கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட்டை வீசுபவர்களுக்கும், வீச முயற்சிப்பவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் ஆயுள் காலம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
மேற்கண்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஜாமினில் வெளிவர முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்புணர்ச்சி மற்றும் பாலியல் குற்றங்கள் ஆகியவற்றில் சட்டம் முழு வேகத்துடன் கையாளப்படுவதற்கும், அது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் விதமாகவும் இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்படுவது அவசியமாகிறது.
இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களை உறுதியாக தடுக்க இந்த சட்டத் திருத்தம் முன் மாதிரியாக இருக்கும் என்று மாநில அரசு நம்புகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு தமிழக அரசு முழு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. பெண்களை பாதுகாக்கும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனையும் வாங்கி கொடுத்துள்ளோம். ரெயில் முன்பு தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனையை வாங்கி கொடுத்திருக்கிறோம்.
தமிழக அரசின் இது போன்ற பெண்களுக்கு எதிரான 80 சதவீத வழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக 2 லட்சத்து 39 ஆயிரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் யாராலும் மன்னிக்க முடியாத குற்றங்கள் என்பதை கருத்தில் கொண்டு புதிய சட்டத்திருத்தத்தை இன்று நான் தாக்கல் செய்துள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்