• Sunday 20 April, 2025 08:26 AM
  • Advertize
  • Aarudhal FM

கார் தருவாங்க.. பெரிய அதிகாரம்.. பல ஆயிரம் சம்பளம்! டிஎன்பிஎஸ்சி தரும் சான்ஸ்.. நெருங்கும் டெட் லைன்

Thursday, July 25, 2024, 16:00

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கான விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் முடிந்துவிட்டது. இந்த தேர்வு விரைவில் நடக்க உள்ளது. இன்னும் சில நாட்களே உள்ளன தேர்வு நடக்க. குருப் 2, 2ஏ பணிகளில் அடங்கிய 2,327 காலிப் பணியிடங்களுக்கான இந்த விண்ணப்பங்களை செய்து உள்ளது. இந்த போட்டித் தேர்விற்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் அனுப்பி உள்ளனர். . குருப் 2 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இதனால் மிக கடுமையானதாக இருக்க போகிறது. போட்டி உச்சத்தில் இருக்கும். இதனால் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பணியிடத்திற்கு 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மத்திய அரசில் செம ஜாப்.. 2006 பணியிடங்கள்.. பிளஸ் டூ முடிச்சிருந்தால் போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க இலவச பயிற்சி: அதோடு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி விட்டன. மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் இதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 வாரங்களில் இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. Advertisement பதவிகள் என்னென்ன?: இந்த தேர்வு மூலம் கிடைக்கும் பதவிகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம். ஸ்டாலின் டேபிளுக்கு போன லெட்டர்.. எத்தனை வருடமாக அரசு ஊழியர்கள் ஏங்குறாங்க.. வருது குட்நியூஸ் ஜூனியர் வேலைவாய்ப்பு அதிகாரி (மாற்றுத் திறனாளிகள் அல்லாதவர்கள்) சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் திணைக்களத்தில் நன்னடத்தை அதிகாரி தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் துணைப் பதிவாளர், பதிவுத் துறையில் தரம்-II வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியில் (வேலைவாய்ப்பு பிரிவு) இளைய வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்) விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளர் காவல் ஆணையர் அலுவலகத்தின் புலனாய்வுப் பிரிவில் சிறப்புப் பிரிவு உதவியாளர் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவில் சிறப்புக் கிளை உதவியாளர் (மாநில உளவுப் பிரிவு) கோவை புது பேருந்து நிலையம்.. பேருக்குதான் ஹைடெக்! பஸ் நிக்காது, லைட் எரியாது, கழிவறை பக்கம் “ம்ஹூம்” இதில் விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளர், துணைப் பதிவாளர், பதிவுத் துறையில் தரம்-II, குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவில் சிறப்புக் கிளை உதவியாளர் (மாநில உளவுப் பிரிவு), காவல் ஆணையர் அலுவலகத்தின் புலனாய்வுப் பிரிவில் சிறப்புப் பிரிவு உதவியாளர் ஆகிய பதவிகள் நல்ல பவர் நிறைந்த பதவிகள் ஆகும். இவற்றில் சிலவற்றிற்கு அரசின் கார் கிடைக்கும். அதேபோல் சில பதவிகளுக்கு 40 – 60 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப்-2 பதவிகளில் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் முதல்நிலைத் தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றி பெற்ற 57 ஆயிரத்து 641 பேர் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அழைக்கப்பட்டார்கள். அவர்களில் 51 ஆயிரத்து 987 பேர் முதன்மைத் தேர்வை கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 25-ந் தேதி எழுதி இருந்தார்கள். கோவையையே மிரள வைத்த.. ஐஏஎஸ், ஐபிஎஸ்.. விசாரித்த போலீசுக்கு ஷாக்.. அத்தனையும் போலி! இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் கடந்தாண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது. முதன்மைத் தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு நீண்ட தாமதத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. அரசு வெளியிட்ட தகவலின்படி, குரூப்-2 பதவிகளில் 161 இடங்களும், குரூப்- 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 990 இடங்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 15:12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து குரூப்-2 தேர்வு முடிவுகள் 2024 ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. விதிகள் மாற்றம்: இப்படிப்பட்ட நிலையில்தான் மீண்டும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நிலையில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. இந்த தேர்வுக்கு ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19ம் தேதி கட்டணம் செலுத்த கடைசி நாள் ஆகும். 2327 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.

Thanks to one india news

டிகிரி + இன்ஜினியரிங் முடித்திருந்தாலே போதும்.. பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை! சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

July 25, 2024, 10:39

 சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. இனி ரேஷனில் நிம்மதி.. திண்டுக்கல் ரேசன் கடையில் அதிரடியை பாருங்க நம் நாட்டில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் குவாட்ரண்ட் டெக்னாலஜிஸ் (Quardrant Technologies). இந்த நிறுவனம் என்பது தகவல் தொழில்நுட்பத்துறையில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. கல்லீரல் காக்கும் கற்பகவிருட்சம் அமிர்தவல்லி இலை.. இதய நோயாளிகளின் அருமருந்தாகும் சீந்தில் இலைகள் குறிப்பாக கூற வேண்டும் என்றால் Cloud, Data & Analytics, Accessibility, Business Intelligence, Quality Testing, DevOps, AI & ML, CRM, ERP, Big Data மற்றும் Application Development உள்ளிட்ட முக்கிய பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ZOHOவின் அடுத்த ஆஃபர்.. விண்ணப்பிக்க ஜுலை 31 கடைசி நாள்.. ஆகஸ்ட் 3ல் இண்டர்வியூ.. தென்காசியில் பணி இந்நிலையில் தான் தற்போது குவாட்ரண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஜாவா டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளங்கலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டல் இன்ஜினியரிங் அல்லது அது சார்ந்த துறையில் படிப்பை முடித்திருக்க வேண்டும். Advertisement HCL வேலைவாய்ப்பு.. அனுபவம் எதுவும் வேண்டாம்.. BBA முடித்தவர்களுக்கு ‛ஜாக்பாட்’ விண்ணப்பம் செய்வோருக்கு Primary Skills ஆக Jaa, Spring, Boot, MVC, Hibernate மற்றும் SQL தெரிந்திருக்க வேண்டும். அதில் பணியாற்றி இருந்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். கன்டரி ஸ்கீல்ஸாக எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் பணியாற்ற தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்டாக இருக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ZOHO -வின் புதிய வேலைவாய்ப்பு.. அனுபவம் வேண்டாம்.. டிகிரி மட்டுமே போதும்.. சென்னையிலேயே பணி நியமனம் இதுதவிர ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். Debugging திறமை மற்றும் பிரச்சனைகளை சமாளிக்கும் திறமை கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி இந்த பணிக்கான சம்பளம் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். மேலும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Quadranttechnologies.com என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் இப்போதே விண்ணப்பம் செய்வது நல்லதாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கோவையில் ஐடி வேலை.. Accenture நிறுவனம் தரும் அசத்தலான வாய்ப்பு.. சீக்கிரம் தேதி முடியப்போகிறது

July 28, 2024, 10:59

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனமான Accenture ஐடி நிறுவனத்தில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

ஆக்சென்ச்சர் (Accenture).. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் ஐடி துறையில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங், அனலிட்டிக்ஸ், மெபிலிட்டி, சாப்ட்வேர் டெக்னாலஜி, க்ளைவ்ட் சர்வீசஸ் உள்பட பிற சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த ஆக்சென்ச்சர் நிறுவனம் இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை மற்றும் கோவையில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது கோவையில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:

ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் தற்போதைய அறிவிப்பின் படி Application Lead பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 15 ஆண்டு கல்வி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதாவது பிளஸ் 2 படித்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிளஸ் 2விற்கு பிறகு சாப்ட்வேர் இன்ஜினியரிங் அல்லது அது சார்ந்த பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி Regulatory Compliance and Software Development பிரிவில் ஏழரை ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

டெக்னிக்கல் ஸ்கில்ஸை பொறுத்தவரை regulatory compliance requirements பற்றி புரிந்து கொண்டிருக்க வேண்டும். மேலும் compliance strategies for software applications என்பதில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர சாப்ட்வேர் டெவலப்மென்ட் மெத்தடலாஜிஸ்களான Agile அல்லது Waterfall அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், பிழையின்றி எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் திறமை, சாப்ட்வேர் டெவலப்மென்ட்டில் ஏற்படும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்க்கும் தன்மையை பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் என்ன? என்பது தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை.

இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் பணி குறித்த விண்ணப்பம் செய்யும் நாள் எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்கள் பணி தொடர்பான விபரங்களை பெங்களூரில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனத்துக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டியிருக்கும்.

Thanks to One India News

நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு.. இதைவிட பெரிய சான்ஸ் கிடைக்காது.. லட்டு மாதிரி.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

July 28, 2024, 9:45

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் நெருங்கி உள்ளன. ஏற்கனவே இலவச பயிற்சி வகுப்புகளில் பெறாதவர்கள் இந்த வாரம் முதல் இந்த வகுப்புகளில் சேர்ந்து கொள்ள முடியும். இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பம் செய்யும் கால் அவகாசம் நேற்றோடு முடிந்துவிட்டது. அதோடு  இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி விட்டன. மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.

இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் இதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 வாரங்களில் இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப்-2 பதவிகளில் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் முதல்நிலைத் தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றி பெற்ற 57 ஆயிரத்து 641 பேர் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அழைக்கப்பட்டார்கள். அவர்களில் 51 ஆயிரத்து 987 பேர் முதன்மைத் தேர்வை கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 25-ந் தேதி எழுதி இருந்தார்கள்.

இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் கடந்தாண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது.

முதன்மைத் தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு நீண்ட தாமதத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. அரசு வெளியிட்ட தகவலின்படி, குரூப்-2 பதவிகளில் 161 இடங்களும், குரூப்- 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 990 இடங்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

15.12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து குரூப்-2 தேர்வு முடிவுகள் 2024 ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது.

விதிகள் மாற்றம்: இப்படிப்பட்ட நிலையில்தான் மீண்டும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நிலையில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

இந்த தேர்வுக்கு ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19ம் தேதி கட்டணம் செலுத்த கடைசி நாள் ஆகும். 2327 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.

நாளை வகுப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்க உள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.

ஆட்சியர் அலுவலகம் வாயிலாக இதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

குரூப் 2 தேர்வு: இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட உள்ளது. குரூப் 4 தேர்வில் இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் குருப் 2 தேர்வில் இதே முறை பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த முறைப்படி ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து பின்னர் ஷெட்டில் அதை அடித்து விட்டு பிறகு வேறு பதிலை தேர்வு செய்ய கூடாது.

அப்படி குறித்தால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும். அதாவது மாற்றி சரியான விடையை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓஎம்ஆர் ஷீட்டில் எது சரியான விடையோ அதை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

Thanks to Oneindia news

பாதுகாக்கும் தேவன்

பாதுகாக்கும் தேவன் (1 சாமுவேல் 19ம் அதிகாரம்)

சவுல் தாவீதின் மேல் பொறாமை கொண்டு தந்திரத்தினாலும் வஞ்சனையினாலும் அழித்துப்போட முயற்சித்தான் (1 சாமு 18 அதி). ஆனால், கர்த்தர் தாவீதோடிருந்தபடியால் (1 சாமு 18:12, 14, 28) அவரை காப்பாற்றி கனப்படுத்தினானர் (1 சாமு 18:30).

வஞ்சனையும் சூழ்ச்சியும் கைகொடாதபடியினால், தற்போது சவுலே களத்தில் இறங்கி தாவீதை கொன்றுபோட முயற்சிக்கின்றான் (1 சாமு 19:1). அந்த தீமையான யோசனைகளில் தேவன் தாவீதை எவ்விதமாக பாதுகாத்தார் என்பதை இந்த அதிகாரம் நமக்கு கற்றுத் தருகிறது.

“இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை” (சங் 121:4) என்கிற வேத வசனத்தின்படி, நம்மையும் நம்முடைய சூழ்நிலைகளின் நடுவே, “பாதுகாக்கும் தேவன்” உண்டு என்பதை நாம் அறிந்து, அவரை மகிமைப்படுத்துவோம்.

தாவீதை நான்கு வித சூழ்நிலைகளில் இந்த பகுதியில் கர்த்தர் பாதுகாத்தார்.

1. தீமையான யோசனையை “தடுத்து நிறுத்தினார்.” (1 சாமு 19:1-7)

சவுல் யோனத்தானோடும், தன் ஊழியக்காரர்களோடும் பேசி தாவீதை கொலை செய்ய முயன்ற போது, யோனத்தானின் ஆலோசனையின் மூலம் (1 சாமு 19:4,5) தாவீதுக்கு ஏற்பட இருந்த “தீமையை தடுத்து நிறுத்தினார்.”

நம்முடைய வாழ்விலும் நமக்கு நேரிட இருந்த தீமைகளை தடுக்கும் படிக்கு, நல்ஆலோசனை கொடுக்க தேவனால் அனுப்பப்பட்ட யோனத்தான்களுக்காக கர்த்தரை துதிப்போம்.

2. சதித் திட்டத்திலிருந்து “தப்புவித்தார்.” (1 சாமு 19:8-10)

தாவீதை கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தருடைய நாமத்தில் ஆணையிட்ட சவுல், தாவீதின் உயர்வைக் கண்டு, மறுபடியும் அவனை கொன்று போட வேண்டும் என்று மனம் மாறினார். ஆகையால், தன் வீட்டில் இருந்த போது, தன் ஈட்டியை கையில் பிடித்து (வீட்டில் இருக்கும் போது சவுலின் கையில் ஆயுதம் எதற்கு), தாவீதை குத்தி போடுவதற்கு திட்டமிட்டு அதை முயற்சித்தான்.

தேவனோ, சவுலின் சதி திட்டத்திலிருந்து, “தன்னை தப்புவித்துக் கொள்ள தாவீதிற்கு ஞானத்தை கொடுத்தார்.” 

  • சவுல் இரண்டாம் முறை ஈட்டியை எறிகிறதற்கு தாவீது இடம் கொடுக்கவில்லை. (ஒப்பிடுக: 1 சாமு 18:11= 1 சாமு 19:10)

நமக்கு எதிரான சதி திட்டங்களில் இருந்து “தப்புவித்துக்கொள்ள” ஞானத்தை அருளுகின்ற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

3. பூரணமற்ற மனிதர்கள் மூலமும் “தயவு செய்கிறார்.” (1 சாமு 19:11-18)

தாவீதை அவன் வீட்டிலேயே கொன்று போடும்படி சவுல் சேவகர்களை அனுப்புகின்றான். ஒருவேளை தன் மகள் மீகாள் தனக்கு ஒத்தாசையாக இருப்பாள் என்று சவுல் எண்ணி இருக்கலாம் (1 சாமு 19:17). ஆனால் மீகாளோ, தாவீதை எச்சரித்து, தப்பி ஓட பண்ணினாள்.

தாவீதிற்கு மீகாளின் மூலமாக தயவு கிடைத்தாலும், தாவீதை தப்புவிக்க அவள் நாடகமாடுகிறாள், பொய் சொல்லவும் தயங்கவில்லை (1 சாமு 19:13, 17). தன் வீட்டிலே சுரூபத்தை வைத்திருந்த மீகாள் தேவபக்தியுள்ள ஒரு பெண்ணாக தோன்றவில்லை.

இதனால், நாம் நம்மை பாதுகாக்க பொய் சொல்லி நாடகமாடலாம் என்று அர்த்தமல்ல. நன்மையை பயக்கும் என்றாலும் பொய் பொய்யே, பாவம் பாவமே. 

ஆனால், நாம் கற்றுக் கொள்ளும் பாடம். தேவன் தம்முடைய பிள்ளைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு நன்மை செய்யவும் பூரணமற்ற மனிதர்களையும் பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்து கொள்வோம்.

எ.கா:-

  • வேசியாகிய ராகாப் (யோசு 2:1-13)
  • பெர்சிய ராஜாவாகிய கோரேஸ் (எஸ் 1:1,2)

சிந்தனைக்கு: தேவபக்தியுள்ள யோனத்தானின் மூலமும் தாவீதை தப்புவித்தார். தேவபக்தி இல்லாத மீகாளின் மூலமாகவும் தாவீதை தப்புவித்தார். இதற்காக, “அவர்கள் இருவரும் கையாண்ட முறைகள்” அவர்கள் யார் என்பதை நமக்கு காண்பிக்கிறது.

நம்முடைய வாழ்வின் சூழ்நிலைகளில் எவரைக் கொண்டும் நமக்கு “தயவு செய்கின்ற” தேவனுக்கு ஸ்தோத்திரம்.

4. எதிராய் வந்தவர்களை “தாண்டிப்போக செய்கிறார்.” (1 சாமு 19:18-24)

இறுதியாக தாவீது தன்னை தப்புவித்துக் கொள்ள சாமுவேலிடத்தில் அடைக்கலம் புகுந்தான். இதனை அறிந்த சவுல் தாவீதை பிடித்து வரும்படி தனது சேவகர்களை மூன்று கூட்டமாய் அனுப்புகின்றான். ஆனால் அவர்களோ தேவ ஆவியானவரால் கட்டுப்படுத்தப்பட்டு தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அதாவது தாங்கள் செய்ய வந்த வேலையை விட்டுவிட்டு, வேறொரு காரியத்தை செய்யும் படியாய் தேவன் அவர்களைத் தாண்டிப்போக பண்ணினார். சவுலுக்கும் அதே கதி தான் நேர்ந்தது.

எதிராய் வந்தவன் தான் எதற்காக வந்தேன் என்பதை மறந்து, வஸ்திரம் இல்லாது ஒரு நாள் முழுவதும் விழுந்து கிடக்கிறான். இது தாவீது தப்பி போக ஏதுவாக இருந்தது.

நமக்கு எதிராய் வருகிறவர்களையும் கட்டுப்படுத்தி, அவர்களை திசை திருப்பி! நம்மை அவர்கள் தாண்டி போகச் செய்து, நம்மை பாதுகாக்கின்ற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

பாதுகாக்கும் தேவன்

1. தீமையான யோசனையை “தடுத்து நிறுத்துகின்றார்.”

2. சதித் திட்டத்திலிருந்து “தப்புவிக்கின்றார்.” 

3. பூரணமற்ற மனிதர்கள் மூலமும் “தயவு செய்கிறார்.”

4. எதிராய் வருகின்றவர்களை “தாண்டிப்போக செய்கிறார்.”

கே. விவேகானந்த்

மாபெரும் விலை

தேவனுடைய பிரமாணத்தை மீறி சாத்தானுடைய தூண்டுதலினாலே, தாவீது ஜனங்களை தொகையிட்டார் (1 நாளாகமம் 21). தாவீது செய்த இந்த புத்தியீனமான காரியம், கர்த்தரின் பார்வைக்கு ஆகாதபடியினாலே அவர் இஸ்ரவேலை வாதித்தார். தேசத்தின் மேலே நியாயத்தீர்ப்பு வந்தது.

கர்த்தர் மூன்று காரியங்களை தாவீதுக்கு முன்பாக வைத்தார். மூன்று வருஷ பஞ்சமோ? பகைஞரின் பட்டயம் பின்தொடர சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடும் மூன்று மாத சங்காரமோ? அல்லது கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலெங்கும் சங்காரமுண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றை தெரிந்துகொள்ளும்படி தாவீதிடமே விடப்பட்டது. மூன்றும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. கொடிய இடுக்கண்ணில் அகப்பட்ட தாவீது கர்த்தருடைய கரத்தில் விழுந்தார். கர்த்தர் தேசத்தின் மீது கொள்ளை நோயை வரப்பண்ணினதினால் இஸ்ரவேலிலே 70,000 பேர் மடிந்து போனார்கள் (1 நாளாகமம் 21:1,7-14). பாவத்திற்கு எதிரான தேவனுடைய நியாயத்தீர்ப்பு நிறைவேறியது.

தேவனுடைய பிரமாணம் எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பட்டயம் நீட்டப்படுகிறது. முதல் மனிதனும் தேவனுடைய கட்டளைய மீறி பாவம் செய்தபோது, ஏதேனிலே சுடரொளிப்பட்டயம் வைக்கப்பட்டு, மனுகுலமும் தேவ கோபாக்கினைக்கு என்று நியமிக்கப்பட்டது (ஆதியாக. 3:24), அவ்விதம் ஒரு மனிதனுடைய மீறுதலினாலே, பாவமும், பாவத்தின் சம்பளமாகிய மரணமும் நம் எல்லோரையும் ஆண்டுகொண்டது (ரோமர் 5:17).

எருசலேமுக்கு வந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்ட கர்த்தர், கர்த்தருடைய தூதன் நின்ற ஓர்னானின் களத்திலே பலிசெலுத்தும்படி தாவீதுக்கு கட்டளையிட்டார் (1 நாளா. 21:15,18). தேவனுடைய நியாயத்தீர்ப்பு நிறுத்தப்பட பலி செலுத்த வேண்டும், இதுவே பிரமாணம். தாவீது போய், ஓர்னானிடத்திலே அந்த களத்தை கேட்டார், இலவசமாக அல்ல, அதுபெறும் விலையை (அதற்குரிய சரியான விலையை) தருவேன் என்றார். 600 சேக்கல் பொன்னை நிலத்திற்குரிய பெறும் விலையாக கொடுத்து, நிலத்தை வாங்கி அங்கே கர்த்தருக்கு பலியிட்டார், வாதை நிறுத்தப்பட்டது (1நாளா 21:24-28). வாதை நிறுத்தப்பட விலை கொடுக்கப்பட வேண்டியதாக இருந்தது (1நாளா. 21:22).

பாவத்தினிமித்தம் நாமும் கோபாக்கினைக் கென்று நியமிக்கப்பட்டிருந்தோம், தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பட்டயம் நமக்கு விரோதமாக நீட்டப்பட்டதாக இருந்தது. ஆனால் எருசலேமுக்கு வந்த தீங்கை கண்டு மனஸ்தாபப்பட்ட கர்த்தர் (1 நாளாகமம் 21:15) நமக்காகவும் மனமிறங்கினார்.

அன்றைக்கு கோபாக்கினை மாற்றப்பட பலிசெலுத்தும்படி எருசலேமிலே ஓர்னானின் களம் தெரிந்துகொள்ளப்பட்டது. நமக்கோ கொல்கொதாவின் கொலைக்களம் தெரிந்து கொள்ளப்பட்டது. அன்றைக்கு நிலத்திற்கு பெறும்விலை கொடுக்கப்பட்டது. நமக்கோ “மாபெரும் விலை” கொடுக்கப்பட்டது. அது 600 சேக்கல் பொன்னல்ல, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமே!

“அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேதுரு 1:18,19).

மாபெரும் விலையாக, நம்மை மீட்கும் பொருளாக தம்முடைய ஜீவனையே இயேசு கிறிஸ்து நமக்காக கொடுத்தார் (மாற். 10:45). இஸ்ரவேலிலே வாதை நிறுத்தப்பட விலைகொடுக்க வேண்டியதாயிருந்தது. நம்மேலிருந்த கோபாக்கினை மாற்றப்பட தேவகுமாரன் தன்னையே பதில் விலையாக கொடுத்தார்.

நாம் பெற்ற இரட்சிப்பு இலவசமானாலும் அதை நமக்கு சம்பாதித்து கொடுக்கும்படி மாபெரும் விலை சிலுவையில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

நம்மை மீட்க தன்னையே பலியாக கொடுத்த கிறிஸ்து இயேசுவை நினைவுகூர்ந்து பிதாவாகிய தேவனை தொழுதுகொள்வோம்! ஆமென்.

Thanks to Bro.Vivekananth

கர்த்தருடைய கண்கள்

கர்த்தருடைய கண்கள் உறங்குவதில்லை, அவருடைய கண்கள் எங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது. மனுபுத்திரர்களை கண்ணோக்கிக் கொண்டிருக்கிறது என்று வேதாகமம் சொல்கிறது.

கர்த்தருடைய கண்களை குறித்து தேவனுடைய மனிதர்களது சாட்சியையும், கர்த்தருடைய கண்கள் எவைகள் மேல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்க்கப் போகிறோம்.

கர்த்தரது கண்களைக் குறித்த தேவனுடைய மனிதர்களின் சாட்சி:

1. ஆகார் : நீர் என்னைக் காண்கிற தேவன். ஆதி : 16 : 13

2. யோபு : உம்முடைய கண்கள் என் மேல் நோக்கமாயிருக்கிறது. யோபு : 7 : 8

3. தாவீது : என் கருவை உமது கண்கள் கண்டது. சங் : 139 : 16

4. பேதுரு : நீதிமான்கள் மேல் நோக்கமாக இருக்கிறது. 1 பேதுரு : 3 : 1

5. எரேமியா : உம்முடைய கண்கள் சத்தியத்தை நோக்குகின்றது. எரே : 5 : 3

கர்த்தருடைய கண்கள் எவைகள் மேல் நோக்கமாயிருக்கிறது.

1. தேசத்தின் மீது கர்த்தருடைய கண்கள். (Eyes on the Nation) உபா : 11 : 12

2. ஆலயத்தின் மீது கர்த்தருடைய கண்கள். (Eyes on the Temple) 2 நாளாக: 6 : 20, 7:15, சங்கீதம் : 11 : 4, நெகேமியா : 1 : 6

3.  பூமியின் மீது கர்த்தருடைய கண்கள் (Eyes on Earth) 2 நாளாக : 16 : 9, சங்கீதம் : 14 : 2; சங்கீதம் 33 : 13,14, சங்கீதம் 102 : 20

நம்முடைய கண்கள் – Our Eyes.

  • ஒத்தாசைக்கு நேராக  சங் : 121 : 1
  • வேலைக்காரரின் கண்களைப் போல. சங் : 123 : 1 , 2

கர்த்தரின் கண்கள்:

  • தேசத்தின் மீது வைக்கப்பட்டிருக்கிறது
  • ஆலயத்தின் மீது வைக்கப்பட்டிருக்கிறது
  • பூமியின் மீது வைக்கப்பட்டிருக்கிறது.
  • நல்லோர் மீதும் தீயோர் மீதும் அவர் கண்ணோக்கமாயிருக்கிறார்.
  • உங்கள் ஜெபத்திற்கு அவரது கண்கள் திறந்த வண்ணமாய் இருக்கிறது.
  • அவர் கண்கள் உங்கள் மேல் நோக்கமாய் இருக்கிறது.

“கர்த்தருடைய கண்கள் எப்போதும் என்மேல் நோக்கமாக இருக்கிறது” என்று சொல்லுங்கள்.

தேவகிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமேன்.

போதகர். ஜாண்ராஜ், மும்பை

இப்போதும் யாக்கோபே பயப்படாதே

இஸ்ரவேல் ஜனங்களின் மேல்  இரக்கமாயிருக்கின்ற தேவனைத் தான்  ஏசாயா 43ம் அதிகாரத்தில்  பார்க்கின்றோம். 

தமது ஜனங்களை பார்த்து “பயப்படாதே” என்றார் (ஏசா 43 :1, 5). அவர்களின் பாவமே பயத்தின் காரணம் (ஏசா 42 :24). ஆனாலும் மன்னித்து மறக்கிற கர்த்தர் நான் என்று தன்னை வெளிப்படுத்துகின்றார் (ஏசா 43 :25). 

நமது பாவத்தினிமித்தம் அதன் விளைவுகளை நாம் அனுபவிக்கும்போது, மனந்திரும்பி அவரண்டை வந்தால், அதை மன்னித்து மறக்கிற கர்த்தர் மட்டுமல்ல, அவர் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகிறார். தம்முடைய ஜனங்களின் மேல் தேவன் எவ்வளவாய் அன்புள்ளவராய் இருக்கிறார் என்பதை தான் இந்த அதிகாரத்தின் முதல் பகுதி விளக்குகிறது (ஏசா 43 :1-7).

 இப்போதும் யாக்கோபே பயப்படாதே ஏசாயா 43:1 

  1. நீ என்னுடையவன். (ஏசா 43 :1)

உன்னை  சிருஷ்டித்தேன், உருவாக்கினேன், மீட்டுக்கொண்டேன், பேர்சொல்லி அழைத்தேன்.

  1. நான் உன்னுடன் இருக்கிறேன். (ஏசா 43 :2)

தண்ணீரை கடக்கும்போதும், ஆறுகளை கடக்கும்போது, அக்கினியில் நடக்கும்போதும் உடனிருந்து பாதுக்காப்போன்.

சோதனை வேளைகளில் கலவரப்படாமல் அதை பொறுமையாய் நடந்து செல்லுங்கள் (ஓட வேண்டாம்). நான் உங்களுடன் இருக்கிறேன் என்கிறார்.

  1. உன்னை விலை கொடுத்து மீட்டிருக்கிறேன். (ஏசா 43 :3)

நம்மை மீட்கும் பொருளாய் தமது சொந்த குமாரனையே தந்திருக்கிறார்.

  1. நீ எனக்கு முக்கியமானவன்(ள்). (ஏசா 43 :4).

நம்மை விலைமதிபுள்ள பொக்கிஷமாய் எண்ணுகிறார்.

  1. நான் உன்னை சிநேகித்தேன். (ஏசா 43 :4).

நம்மேல் அவர் கொண்ட அன்புக்காக எதையும் தர அவர் ஆயத்தமாயிருக்கிறார். தமது சொந்த குமாரனையே தந்துள்ளாரே!

  1. நான் உன் சந்ததியை கூட்டிச்சேர்ப்பேன். (ஏசா 43 :5-7).

உன்னை பழைய நிலைக்கு திரும்பப்பண்ணுவேன்

நமக்கு எதிர்கால நம்பிக்கையை தருகிறார். 

  1. உன்னை என் நாம மகிமைக்கென்று சிருஷ்டித்தேன். (ஏசா 43 :7).

நம்மூலமாய் அவர் மகிமைபடுவார். அதற்காகவே நம்மை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள். (ஏசா 43: 21).

ஆகையால் யாக்கோபே, பயப்படாதே!

கே. விவேகானந்த்

கர்த்தத்துவத்தின் தோள்

கிறிஸ்துவின் பிறப்பை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்த ஏசாயா தீர்க்கன், “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்” (ஏசாயா 9:6) என்றான். கர்த்தத்துவம் என்பது “ஆளுகை” அல்லது “அரசாட்சியை” குறிக்கும். நம்முடைய ஆண்டவர் இராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

“இஸ்ரவேலை ஆளப்போகிறவராக” (மீகா 5:2) மீகாவும், “இஸ்ரவேலிலிருந்து எழும்பும் செங்கோலாக” (எண் 24:17) பிலேயாமும், இயேசுகிறிஸ்துவை முன்னுரைத்தது அவர் தோளின் மீதிருந்த கர்த்தத்துவத்தை (இராஜரீகத்தை) தூரத்திலேயே கண்டதினாலே.

அவருடைய மானிட வாழ்விலும் அவரின் தோளின் மேலிருந்த கர்த்தத்துவத்தை ஜனங்கள் கண்டார்கள்.

* கிழக்கிலிருந்து தேடி வந்த சாஸ்திரிகள். (மத் 2:1,2,11).

* நாத்தான்வேல் (யோவா 1:48,49).

* எருசலேமின் ஜனங்கள் (யோவா 12:13).

சிலுவையிலும் அவர் கர்த்தத்துவம் மாறவில்லை, என்பதை அவரோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளனின் வார்த்தைகள் புலப்படுத்துகிறது (லூக் 23:42). அவரை பரிகாசம்பண்ணும்படியாக “நசரேயனாகிய இயேசு யூதருடைய இராஜா” என்று எழுதப்பட்டதும் (யோவா 19:19), அவரின் கர்த்தத்துவம் வெளிப்படும்பொருட்டே.

உயிர்தெழுந்த கிறிஸ்துவாய் தம்மை சீஷர்களுக்கு வெளிப்படுத்தினபோது, “ஆண்டவரே இக்காலத்திலா இராஜியத்தை இஸ்ரவேலுக்கு திரும்ப கொடுப்பீர்” (அப் 1:6) என்று கேட்டதும், அவர் தோளின்மீதிருந்த கர்த்தத்துவத்தினிமித்தமே. மகிமையிலும் அவர் இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தர்.

ஆனால், கர்த்தத்துவத்தை சுமந்த அதே தோள், சாபத்தின் சின்னமாகிய சிலுவையை சுமந்ததை யோவான் 19:17-ல் வாசிகிறோம். சிலுவையை சுமந்தார் என்றால் நம்முடைய துக்கங்களை (ஏசா 53:4), அக்கிரமங்களை (ஏசா 53:11), பாவங்களை (ஏசா 53:120 சிலுவையின் உருவில் சுமந்தார். நாம் அனுபவிக்க வேண்டிய பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை அவர் ஏற்றுக்கொண்டார். “நாம் பாவங்களுக்கு செத்து நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சுமந்தார்” (1 பேதுரு 2:24). நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்கவே அவர் வெளிப்பட்டார் (1 யோ 3:5). உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவாட்டுக்குட்டியானார்.

அவர் சிலுவையை சுமந்தது துக்கத்தோடே அல்ல; தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டே (எபி 12:2). அது எந்த சந்தோஷம் தெரியுமா? நம்மை அவர் தோளின் மீது சுமக்கப்போகிற சந்தோஷம் (லூக் 15:5,6). ஆம், காணாமல் போன ஆட்டை கண்டுபிடித்த மேய்ப்பன் தன் தோளின் மீது ஆட்டை சுமந்து கொண்டு சந்தோஷப்பட்டதுபோல, நம்மை அவரின் கர்த்தத்துவமுள்ள தோளில் உட்கார வைத்து சந்தோஷப்படுகிறார். அவருக்கே சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக!

தாவீதின் திறவுகோலை உடையவரின் கர்த்தத்துவமுள்ள தோலில் நாம் இராஜரீக கூட்டமாய் உட்கார வைக்கப்பட்டிருக்கிறோம் (1 பேதுரு 2:9). அவருடைய அன்பு அளவிடப்படமுடியாது.

அவர் தோளில் அமர்ந்திருக்கும் நாம் சிலுவையின் உருவில் நம்முடைய பாவங்களை சுமந்த தோளிலுள்ள காயங்களை முத்தம்செய்து, கர்த்தத்துவமுள்ள தோளில் கனிவாய் நம்மை அமரவைக்க கடினசிலுவை சுமந்தவரை நினைவுகூர்ந்து கருத்துடனே தொழுதிடுவோம்! ஆமென்.

Thanks to Bro. vivekananth

அழுகையின் ஆற்றல்

“அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து…”  சங் 86:6

அழுகை – சூழ்நிலைக்கேற்ற நிலைகளில் 

  • குழந்தை தாய்ப்பாலுக்கும், 
  • பிள்ளைகள் தேவைகளுக்கும், 
  • நாம் நமது உடலில் உண்டாகும் வேதனையிலும், 
  • மன அழுத்தங்களிலும், 
  • தவறுகளை உணரும்போதும், 
  • வெற்றியிலும், தோல்வியிலும், 
  • உறவுகள் நெருங்குகையிலும் விலகுகையிலும், 
  • லாபத்திலும் நஷ்டத்திலும், 
  • விவஸ்தையே இல்லாம அழுகுறீயே என காரணமின்றியும். 

நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் அழுகை இடம்பெறுகிறது. தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும்போதும் அழுதுகொண்டே பிறக்கும் நாம், போகும்போது அநேகரை அழ வைத்து விட்டும் போகிறோம், இவையெல்லாம் இயற்கை. ஆயினும்…, 

ஆண்டவர் சமூகத்தில் அழுவது ஆற்றல் மிக்கது

ஏனெனில், தேவ சமூகத்தில் அழும்போது… 

1.  தேவனின் – கனிவான கவனம் நம்மீது திரும்புகிறது. லூக் 23:27-28

2. தேவன் – எழுந்து தம் ஜனங்களுக்காக செயல்படுகிறார். யோவேல் 2:17-18

3. தேவன்– வனாந்தரத்திலும் வாக்கருளி, வழி காட்டுகிறார். ஆதி 21:16-22

4. தேவன் – நாம் இழந்ததையெல்லாம் திரும்பக்கொடுக்கிறார். 1 சாமு 30:1-19

5. தேவன்– முன்னோக்கி ஓடின காலத்தின் கடிகாரத்தின் முள்ளை, பின்னோக்கித் திருப்பினார். ( ஆரோக்கிய வாழ்வுக்காக ) ஏசா 38:2-8

6. தேவன் – எதிரான காரியங்களை மாற்றியமைக்கிறார். எஸ் 9:1-8:3

7. தேவன் – தம்முடைய, நிலையான ஆசீர்வாதங்களைத் தருகிறார். ஓசி 12:4

சில நேரங்களில் அழுகை அவசியமற்றது எனத் தோன்றலாம், ஆனால் 

தேவ சமூகத்தில் அழுகை ஆற்றல்மிக்கது 

கே. விவேகானந்த்