தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

Share this page with friends

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி வழங்கப்படுகிறது.இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது

தேவாலயம் சீரமைப்பு

தமிழகத்தில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நடப்பாண்டில் (2021-2022) நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எந்த வித நிதியுதவியும் பெற்றிருத்தல் கூடாது. இது தொடர்பாக சான்றிதழ் அளிக்க வேண்டும்

.விண்ணப்பிக்கலாம்

சீரமைப்பு பணிக்காக ஒருமுறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாலயத்துக்கு மறுமுறை நிதியுதவி 5 ஆண்டுகளுக்கு பின்னரே வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தை உரிய சான்றிதழ் மற்றும் அனைத்து ஆவணங்களுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmw@gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்கள் ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னனு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பதிவு: நவம்பர் 29,  2021 தூத்துக்குடி:

ThinaThanthi news

மக்கள் அதிகம் வாசித்தவை:

ஞாயிறு ஆராதனைகள் குறித்து, சபை மக்களுக்கான அறிவிப்பு
கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது
பாஸ்டர் பால் தங்கையா அவர்கள்
ஏழைகளுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம் - போப் ஆண்டவரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
மதமாற்றுவதாக கூறி தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் காவல்துறையில் புகார் ...
குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாக மாற்ற அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
போதகர் முன்னிலையில் விசுவாசிகள் உறுதிமொழி | வைரல் வீடியோ | ஓட்டுக்கு பணம் Say NO | TCN Media
போதகர் பெவிஸ்டன் அவர்களுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் சர்வதேச விருது வழங்கி பாராட்டு
வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள்
78 மணி நேரத்தில் வேதாகமத்தை அனல் பறக்க வாசித்து மூன்று உலக சாதனை படைத்த தமிழ் போதகர் | TCN Media

Share this page with friends