கொரோனாவின் சமத்துவம் கவிதை

வெள்ளையனும் கறுப்பினத்தானும்
பார்ப்பானும் தீண்டத்தாதவனும்
ஆண்டையும் அடிமையும்
உயர்ந்தவனும் தாழ்ந்தவனும்
தேவபாஷை பேசுபவனுயும்
நீசபாஷை பேசுபவனையும்
இந்துவும் இசுலாமியனும்
உயரமானவனும் குள்ளர்களும்
வலியவனும் பலவீனனும்
பணக்காரனும் ஏழையும்
அமெரிக்கனும் ஆப்பிரிக்கனும்
ஆணும் பெண்ணும்
படித்தவனும் படிக்காதவனும்
அனைவருமே ஓரினம்தான்
என்று உலகுக்கு உரைக்கிறது
கொரோனா வைரஸ்
மூட மனிதனே!
அதிகாரத்தை வைத்து
பணத்தை வைத்து
சாதியை வைத்து
மதத்தை வைத்து
நிறத்தை வைத்து
மொழியை வைத்து
செல்வாக்கை வைத்து
பிறரை ஆள நினைக்காதே!
அகங்கரிக்காதே!
கண்ணிற்குப் புலப்படாத
ஒரு வைரஸ் போதும்
உன்னையும் உன் இனத்தையும்
கூண்டோடு அழிக்க!