புதுச்சேரி பேராயர் இல்லத்தை தலித் அமைப்பினர் முற்றுகை.

Share this page with friends

புதுச்சேரி பேராயர் இல்லத்தை தலித் அமைப்பினர் திடீரென முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி மிஷன் வீதியில் பேராயர் இல்லம் உள்ளது. இங்கு பேராயர் மறைமாவட்ட முதன்மை குரு, பொருளாளர் மற்றும் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் தங்கியுள்ளனர். இதில் பொருளாளர் பதவியிலிருந்த அருட்தந்தை ஒரு மாதத்துக்கு முன்பு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே இந்த உத்தரவு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அருட்தந்தையர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 3 நாட்களாக பேராயர் இல்லத்தில் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தல் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகம், புதுச்சேரி தலித் கிறிஸ்தவர்கள் விடுதலை இயக்க கொள்கை பரப்பு செயலாளர் பெர்ணான்டஸ், தலைவர் மேரி ஜான் உள்ளிட்ட சில அமைப்புகளின் நிர்வாகிகள் பேராயர் இல்லத்துக்கு வந்தனர். அவர்களுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நுழைவாயில் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பெரியகடை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

நன்றி: இந்து தமிழ் (டிசம்பர் 4, 2020)

மக்கள் அதிகம் வாசித்தவை:

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழியர்கள் செய்ய வேண்டிய பத்து கட்டளைகள்.
இந்த கரங்கள் எனக்குரியதும் அல்ல!என்னுடையதும் அல்ல!எனக்கு சொந்தமானதும் அல்ல!யாருக்குறியதுதெரியமா?
பரிசுத்த அலங்காரம் என்றால் என்னவென்று தெரியுமா?
மோட்ச பிரயாணம்
இயேசுவின் திட்டம்
கிறிஸ்துவை ஏற்று கொண்டும், அவரது வசனம், இரத்தத்தை நம்புகிறோம் என்று சொல்லியும் ஏன் நம்மால் பரிசுத்தம...
வாரிசு ஊழியம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விளக்கம்.
பிளஸ் டூ தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்; ஜோசப் கல்லூரி செயலாளர் வலியுறுத்தல்
மானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள்: கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து
கொரானா வியாதி பற்றி 12 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கதரிசனம்

Share this page with friends