
தமிழ்நாட்டின் கல்விக்கு கிறிஸ்தவம்தான் – பழனிசாமி கோவையில் புகழுரை!

தமிழகத்தில் கல்வி நிலை சிறப்பாக இருப்பதற்குக் கிறிஸ்துவ பள்ளிகள்தான் முக்கிய காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
கோவை : 15 Feb 2021
கோவை கொடிசியா அரங்கில் தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்வின் போது கிறிஸ்தவ மக்களிடம் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கிறிஸ்தவ மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார். மேலும் கிறிஸ்தவர்களின் முக்கிய பயணமாக விலங்கும் ஜெருசலேம் பயணத்திற்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 35 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் ஜெருசலேம் செல்பவர்களின் எண்ணிக்கை 500லிருந்து 1000 பேர் ஆக உயர்த்தப்படும் என்ற உறுதியையும் முதல்வர் வழங்கினார்.
அப்போது பேசிய முதல்வர், “தமிழகத்தில் கல்வி உயர்ந்த நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் கிறிஸ்தவ பள்ளிகள்தான். நமது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கூட கிறிஸ்தவ பள்ளியில்தான் பயின்றார். என்னுடைய மகனும் தற்பொழுது கிறிஸ்தவ பள்ளியில்தான் பயின்று வருகிறார்.
அதுமட்டுமின்றி இனி சிறுபான்மையின மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் வழியில் நின்று பயணிக்கும் நமது அரசு எனவே சிறுபான்மை இன மக்கள் இனி கவலை கொள்ள வேண்டாம். தேர்தலில் கூட்டணிகள் மாறினாலும் கொள்கைகள் மாறாது என்றும் நமது அதிமுகவினர் அனைத்து மத நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர்” என்றார்.
அதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் அவரது பணிகள் மேன்மேலும் சிறக்கப் பாதிரியார்கள் ஆண்டவரை ஜெபித்து ஆசீர்வதித்தனர்.
Thanks: tamil.samayam.com