ஜெப வீட்டிற்க்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்

ஜெப வீட்டிற்க்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்

Share this page with friends

திருப்பூர் 27 டிசம்பர் 2022

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது சபைக்கு சொந்தமான பட்டா நிலத்திலே ஜெப வீடு கட்டுவதற்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது அரசு அதிகாரிகளால் ஒரு மாத காலத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக நாட்கள் சென்ற பின்பும் அனுமதி மறுக்கப்பட்டதால் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்து நேற்று காலை போதகர் அமல்ராஜ் மற்றும் சபை மக்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தை துவங்கினர் நேற்று இரவு வரைக்கும் தொடர்ந்த போராட்டத்தின் இறுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் அனைவரும் அடைக்கப்பட்டனர் இதில் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் உட்பட அனைவரும் அடைக்கப்பட்ட இந்த சூழ்நிலையில் கிறிஸ்தவ முன்னணி இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

விரைவில் இவர்களுக்கு நல்ல தேர்வு கிடைக்க நம் ஜெபத்தை விரைவுப்படுத்துவோம். உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் நன்றி.

கைது செய்யப்பட்ட போதகர் அமல்ராஜ் அடைக்கப்பட்ட சூழ்நிலையில் இருந்து பேசிய வீடியோ தொகுப்பினை கீழே உள்ள லின்க் ஐ கிளிக் செய்து காணவும்

தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைத்து மத தலைவர்களுக்கும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.https://tcnmedia.in/the-chief-minister-of-tamil-nadu-cut-the-christmas-cake-and-distributed-sweets-to-all-the-religious-leaders-and-shared-christmas-greetings/

மக்கள் அதிகம் வாசித்தவை:

தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் சிலுவைகளை உடைத்தெறிந்த வாலிபர்
கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு; மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
பிரபல தீர்க்கதரிசி ஜான் முத்து பரலோக மகிமையில் பிரவேசித்தார்
தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைத்து மத தலைவர்களுக்கும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்த...
பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து நேரடியாக கிறிஸ்தவம் இஸ்லாமுக்கு எதிராக தீர்மானம்
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப...
பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
சத்தீஸ்கர் தேவாலயத்தில் பயங்கர தாக்குதல் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த காயம்
கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் இன்று தொடக்கம்!
கடலூரில் கிறிஸ்தவ போதகரை சரமாரியாக தாக்கிய கவுன்சிலரின் கணவர்

Share this page with friends