ஜெப வீட்டிற்க்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்
திருப்பூர் 27 டிசம்பர் 2022
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது சபைக்கு சொந்தமான பட்டா நிலத்திலே ஜெப வீடு கட்டுவதற்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது அரசு அதிகாரிகளால் ஒரு மாத காலத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக நாட்கள் சென்ற பின்பும் அனுமதி மறுக்கப்பட்டதால் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்து நேற்று காலை போதகர் அமல்ராஜ் மற்றும் சபை மக்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தை துவங்கினர் நேற்று இரவு வரைக்கும் தொடர்ந்த போராட்டத்தின் இறுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் அனைவரும் அடைக்கப்பட்டனர் இதில் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் உட்பட அனைவரும் அடைக்கப்பட்ட இந்த சூழ்நிலையில் கிறிஸ்தவ முன்னணி இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

விரைவில் இவர்களுக்கு நல்ல தேர்வு கிடைக்க நம் ஜெபத்தை விரைவுப்படுத்துவோம். உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் நன்றி.
கைது செய்யப்பட்ட போதகர் அமல்ராஜ் அடைக்கப்பட்ட சூழ்நிலையில் இருந்து பேசிய வீடியோ தொகுப்பினை கீழே உள்ள லின்க் ஐ கிளிக் செய்து காணவும்
தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைத்து மத தலைவர்களுக்கும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.https://tcnmedia.in/the-chief-minister-of-tamil-nadu-cut-the-christmas-cake-and-distributed-sweets-to-all-the-religious-leaders-and-shared-christmas-greetings/
- கூண்டுக்குள்ளே இருந்தாலும்! வித்யா’வின் விண் பார்வை!
- குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லையா இது தான் காரணம்
- Online Dating Safety and How to Recognize Red Flags
- Online Dating Safety and How to Recognize Red Flags
- தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களேஎச்சரிக்கை