உண்மைக்கு கிடைக்கும் பரிசுகள்

Share this page with friends

கர்த்தருக்கு உண்மையாய் …. இருந்தீர்களென்றால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்:

  1. அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
    (உபாகமம் 28:2)
  2. கர்த்தருக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், பின்னர் நீ செய்கிற அனைத்திலும் நீ போகிற அனைத்து திட்டங்களிலும் வெற்றிபெற்றவன் ஆவாய்.
    (1 இராஜாக்கள் 2:3)
  3. உண்மையானவனைக் கர்த்தர் காக்கிறார்.
    (சங்கீதம் 31:23)
  4. உண்மையானவர்கள் அவரோடு வாசம்பண்ணும்படி அவர் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்.
    (சங்கீதம் 101:6)
  5. தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும்,
    கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
    (சங்கீதம் 145:18)
  6. என் கட்டளைகளின்படி நடந்து,
    என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான், அவன் பிழைப்பான்.
    (எசேக்கியேல் 18:9)
  7. கொஞ்சத்திலே உண்மையாயிருந்தால் அநேகத்தின்மேல் அதிகாரியாக வைப்பார்.
    (மத்தேயு 25:21)
  8. மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை தருவார்.
    (வெளிப்படுத்தின விசேஷம் 2:10)

Share this page with friends