*”நீயோ, தேவனுடைய மனுஷனே.”*
1 தீமோ. 6:11
பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதின நிருபங்களில், ” *நீ* ” என்ற வார்த்தையை, பல முறை பயன்படுத்தியுள்ளார். இதோ அவைகள்:
( தீமோத்தேயுவிற்கு எழுதின முதலாம் நிருபம்)
*நீ* வேற்றுமையான உபதேசங்களை சிலர் போதியாதபடி அவர்களுக்கு கட்டளையிடு. 1:3
*நீ* நல்ல போராட்டம்பண்ணு. 1:18
*நீ* விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு. 1:18
*நீ* தேவனுடைய வீட்டில் நடக்க வேண்டிய வகையை அறி. 3:15
*நீ* சகோதரருக்கு போதி. 4:6
*நீ* அநுசரித்த நற்போதகத்தில் தேறினவனாகு. 4:6
*நீ* கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு. 4:11
*நீ* விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. 4:12
*நீ* தேறுகிறதை யாவருக்கும் விளங்கப்பண்ணு. 4:15
*நீ* சாட்சிகளற்ற, குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாதே. 5:19
*நீ* பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாதே. 5:21
*நீ* உன் பலவீனங்களை, பலப்படுத்து. 5:23
*நீ* பண ஆசையை விட்டு ஓடு. 6:11
*நீ* நீதி, தேவபக்தி, விசுவாசம், அன்பு, பொறுமை, சாந்தகுணத்தை அடையும்படி நாடு. 6:11
*நீ* நல்ல போராட்டத்தைப் போராடு. 6:12
*நீ* கற்பனையைமாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள். 6:13
*நீ* உன்னிடம் ஒப்புவிக்கப்பட்டதை காத்துக்கொள். 6:20
( தீமோத்தேயுவிற்கு எழுதின இரண்டாம் நிருபம் )
*நீ* உனக்கு உண்டான தேவவரத்தை அனல்மூட்டி எழுப்பிவிடு. 1:6
*நீ* சுவிஷேசத்திற்காக தீங்கநுபவி. 1:8
*நீ* ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தை, கைக்கொண்டிரு. 1:13
*நீ* கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு. 2:1
*நீ* என்னிடத்தில் கேட்டவைகளை, மற்ற மனுஷர்களிடத்தில் ஒப்புவி. 2:2
*நீ* இயேசு கிறிஸ்துவிற்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி. 2:3
*நீ* உன்னை தேவனுக்கு முன்பாக, உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 2:15
*நீ* தேவபக்தியின் வேஷந்தரித்தவர்களை விட்டு விலகு. 3:5
*நீ* எல்லாவற்றையும், நன்றாய் அறிந்திருக்கிறாய். 3:10.
*நீ* கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு. 3:14
*நீ* பரிசுத்த வேத எழுத்துக்களை, சிறுவயதுமுதல் அறிந்தவன். 3:15
*நீ* எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு. 4:5
*நீ* சீக்கிரமாய் என்னிடத்தில் வா, ஏனென்றால் எல்லோரும் என்னைவிட்டுப் பிரிந்து போய்விட்டனர். 4:9-10,
*நீ* எச்சரிக்கையாயிரு, வெகு தீமையை செய்தவனுக்கு. 4:14-15
நீ கால சூழ்நிலைகளைகளுக்கு ஜாக்கிரதையாய் செயல்படு. 4:21
யார் இந்த நீ?
தீமோத்தேயு மட்டுமா?
இல்லை, நீங்களும் நானும்தானே இந்த ” நீ “
