• Sunday 2 February, 2025 01:40 PM
  • Advertize
  • Aarudhal FM

மகாராஷ்டிரா ரயில் விபத்து.. தீவிபத்து அச்சம், இறங்கி ஓடிய போது பகீர்- பலர் உடல் சிதறி பலி

புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் எதிர்பாராத விதமாக தண்டவாளத்தை கடக்கையில் கர்நாடகா எக்ஸ்பிரஸ் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர் உயிரிழக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தின் ஜல்கோவன் மாவட்டத்தில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் பெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக பயணிகள் அச்சப்பட்டுள்ளனர். இதனால் தாங்கள் பாதிக்கப்படக் கூடாது என்று கருதி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து பயணிகள் பலரும் கீழே இறங்கினர். பின்னர் அருகிலிருந்த தண்டவாளத்தை கடக்க முற்பட்டனர். அப்போது அந்த வழித்தடத்தில் அதிவேகமாக வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் பயணிகள் பலரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுவரை 10 பயணிகள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.