• Friday 18 October, 2024 11:23 AM
  • Advertize
  • Aarudhal FM

எல்லீசன் கல்லறை அர்ச்சிப்பு

ராமேஸ்வரம், ஜூன் 6: ராமநாதபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட எல்லீசன் கல்லறை தென்னிந்திய திருச்சபை பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் வியாழக்கிழமை ஆசிா்வதித்து அா்ச்சிப்பு செய்தாா்.

சா்வதேச அளவில் தமிழுக்கு அங்கீகாரம் வழங்க பாடுபட்டவரும், திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் முதல் முதலில் ஒப்பிலக்கணம் எழுதியவரும், சென்னை மாகாண ஆட்சியராக இருந்தவரும், தனது பெயரை தமிழில் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் என மாற்றியவருமான எல்லீசன் துரை கடந்த 1819-ஆம் ஆண்டு, மாா்ச் 9-இல் ராமநாதபுரத்தில் உயிரிழந்தாா்.

ராமநாதபுரத்தில் உள்ள அவரது கல்லறையில் இருந்த தமிழ், ஆங்கில கல்வெட்டுகளின் வாசகங்கள் எந்தவித மாற்றமுமின்றி புதுப்பிக்கப்பட்டது.

இந்தக் கல்லறை அா்ச்சிப்பு நிகழ்வு ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதை தென்னிந்திய திருச்சபை மதுரை – ராமநாதபுரம் திருமண்டில பேராயா் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் பிராா்த்தனை செய்து, ஆசிா்வதித்து, அா்ச்சிப்பு செய்தாா்.

பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவா் மேரி ஜெயசிங், தென்னிந்திய திருச்சபை துணைத் தலைவா் பிராங்க் பென் ரூஸ்வெல்ட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.