• Friday 20 September, 2024 08:41 AM
  • Advertize
  • Aarudhal FM

பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஊதுவதன் ரகசியம் என்ன தெரியுமா?

பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஊதுவதன் ரகசியம் என்ன தெரியுமா? ஆச்சரியமூட்டும் கிரேக்க வரலாறு! முழு பிறந்தநாள் கேக்குகளை பயன்படுத்திய முதல் நாடு ஜெர்மனிதான்.

பொதுவாக பிறந்தநாள் என்றாலே மக்கள் ஒருவித கொண்டாட்ட மனநிலையில் இருப்பார்கள். சாக்லெட்கள், புத்தாடை என அந்த நாளை சிறப்பாக கேக் வெட்டி கொண்டாட விரும்புவார்கள். ஆக, பிறந்தநாள் என்றாலே பலருக்கும் பிறந்தநாள் கேக் மற்றும் மெழுகுவர்த்தி நினைவுக்கு வருகின்றன. ஆனால் பிறந்தநாளில் மெழுகுவர்த்தியை ஊதி ஏன் கேக் வெட்டுகிறார்கள் என்பது பலருக்குத் தெரியாது. இது பல பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதன் பின்னணி என்ன என்பதை இன்று தெரிந்து கொள்வோம்.
பிறந்தநாளில் கேக் வெட்டும் பாரம்பரியம் ஜெர்மனியில் இடைக்காலத்தில் உருவானது என்று வரலாறு கூறுகிறது. இந்த கொண்டாட்டம் கிண்டர் ஃபெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அன்றும், பிறந்தநாள் கேக்குகள் இன்று போலவே இருந்தன. முழு பிறந்தநாள் கேக்குகளை பயன்படுத்திய முதல் நாடு ஜெர்மனிதான்.
மெழுகுவர்த்தியை முதலில் பயன்படுத்தியவர்கள் கிரேக்கர்கள். கிரேக்கர்கள் ஆர்ட்டெமிஸ் என்ற தெய்வத்தை வணங்கினர். அந்த தெய்வ வழிபாட்டின் போது கிரேக்கர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றியதாக தெரிகிறது. தெய்வத்தை வணங்கும் போது, ஒரு வட்ட கேக்கில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுகின்றன.
கிரேக்கர்கள் செய்த கேக்குகள் வட்டமாகவும் சந்திர வடிவமாகவும் இருந்தன. மெழுகுவர்த்தியில் இருந்து வரும் ஒளி சந்திரனின் ஒளியின் அடையாளம் என்று வரலாறு கூறுகிறது. அங்கு பிரார்த்தனை செய்த பின் மெழுகுவர்த்திகள் அணைக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், மெழுகுவர்த்தியை அணைத்த பின் வரும் புகையில்தான் உண்மையான விஷயம் உள்ளது. மெழுகுவர்த்திகளை ஊதும்போது, அந்தப் புகை மேலே செல்கிறது, கிரேக்கர்கள் இந்தப் புகையை புனிதமானதாகக் கருதினர். ஏனென்றால், அவர்கள் பிரார்த்தனை செய்யும் எந்த ஆசைகளும் புகையின் மூலம் தங்கள் தெய்வமான ஆர்ட்டெமிஸைச் சென்றடையும், இதனால் அவர்களின் விருப்பம் நிறைவேறும் என்று அவர்கள் நம்பினர்.

அதனால் பிறந்த நாள் அன்று, கேக் வெட்டிவிட்டு மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பது என்பது பிற்காலத்தில் வழக்கமாகிவிட்டது