• Friday 20 September, 2024 04:20 AM
  • Advertize
  • Aarudhal FM

ICAI CA Results: சி.ஏ தேர்வு ரிசல்ட் வெளியீடு; செக் செய்வது எப்படி?


29 Jul 2024 18:57
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) சி.ஏ (CA) பவுண்டேசன் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. icai.nic.in மற்றும் icai.org இணையதளங்களில் ஜூன் 2024 அமர்வுத் தேர்வுக்கான சி.ஏ தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். ஜூன் 20, 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஜூன் சி.ஏ தேர்வை ஐ.சி.ஏ.ஐ நடத்தியது.

சி.ஏ பவுண்டேசன் தேர்வு முடிவைத் தெரிந்துக்கொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான icai.org அல்லது icai.nic.in என்ற இணையதளப் பக்கங்களில் தங்கள் பதிவு எண்கள் அல்லது கடவுச்சொல் மற்றும் ரோல் எண்களுடன் உள்நுழைய வேண்டும்.

ஒவ்வொரு தாளிலும் 40 மதிப்பெண்கள் மற்றும் நான்கு தாள்களின் மொத்தமாக 50 சதவீத மதிப்பெண்கள் எடுத்தவர்கள் சி.ஏ பவுண்டேசன் தேர்வில் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். சி.ஏ தேர்வில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்களைப் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு “டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி” என்ற தகுதி நிலை வழங்கப்படும்.

கடந்த ஆண்டு, 29.99 சதவீதம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றனர், அவர்களில் 29.77 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் 30.19 சதவீதம் பேர் ஆண்கள். மொத்தம் 137153 பேர் (71966 ஆண்கள் மற்றும் 65187 பெண்கள்) தேர்வெழுதினர், அவர்களில் 41132 பேர் (21728 ஆண்கள் மற்றும் 19404 பெண்கள்) சி.ஏ பவுண்டேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

TN SSLC Results: 10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; செக் செய்வது எப்படி?

TN SSLC Results: 10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; செக் செய்வது எப்படி?தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; ஆன்லைனில் ரிசல்ட் எப்படி பார்ப்பது என்பது இங்கே தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் இன்று (ஜூலை 30) எஸ்.எஸ்.எல்.சி துணைத்தேர்வு முடிவுகளை பிற்பகல் 2 மணிக்கு வெளியிட்டது. tnresults.nic.in, dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் துணை தேர்வு மதிப்பெண்களை தெரிந்துக் கொள்ளலாம்.

10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 2 ஆம் தேதி முதல் ஜூலை 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தநிலையில், இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு மதிப்பெண்களை தெரிந்துக் கொள்வது எப்படி?

படி 1: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – tnresults.nic.in

படி 2: முகப்புப்பக்கத்தில் கிடைக்கும் ‘10 ஆம் வகுப்பு SSLC முடிவு 2024’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்

படி 3: உள்நுழைவு சாளரத்தில், தேர்வு எண் அல்லது பதிவு எண், பிறந்த தேதி (DOB) மற்றும் கொடுக்கப்பட்ட பட உரையை (கேப்ட்சா) உள்ளிடவும்.
படி 4: சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது திரையில் உங்கள் மதிப்பெண் பட்டியல் காண்பிக்கப்படும்.

படி 5: பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

இந்த ஆண்டு, 10 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 26 அன்று முதல் ஏப்ரல் 8 வரை நடைபெற்றது. இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.55 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டின் 91.39 சதவீதத்திலிருந்து ஒரு சிறிய அதிகரிப்பு ஆகும் மற்றும் 2022 இல் தேர்ச்சி 90.07 சதவீதமாகும். இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டமும், அதைத் தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் இரண்டும் மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.

மொத்தம் 260 சிறை கைதிகள் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதினர், அவர்களில் 228 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு சிறை கைதிகளின் தேர்ச்சி சதவீதம் 87.69. கடந்த ஆண்டு 42.42 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இம்முறை, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் இலவசமாக தெரிந்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் இந்தியன் நியூஸ்

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்? மாணவர்களுக்கு குட் நியூஸ்

30 Jul 2024 16:37

இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் பங்கேற்ற மாணவர்களில் சிலர் விடைத்தாள் நகல் கேட்டும், மறு கூட்டல், மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான விடைத்தாள் நகல்கள் கடந்த வாரம் விநியோகம் செய்யப்பட்டு, தற்போது மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. அதன்தொடர்ச்சியாக மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றுகள் அல்லது மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; “இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 01.08.2024 அன்று முதல் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் (Original Mark Certificates) / (Statement of Mark) சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது