• Monday 10 March, 2025 11:08 AM
  • Advertize
  • Aarudhal FM

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று

(1 பேதுரு 4:7-11)

ஆகையால்…

1. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். 7 வச.

2. ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். 7 வச.

3. ஊக்கமான அன்புகூறுங்கள். 8 வச.

4. முறுமுறுப்பில்லாமல் உபசரியுங்கள். 9 வச.

5. நல்ல உக்கிராணக்காரர் போல உதவி செய்யுங்கள். 10 வச.

6. தேவனுடைய வசனத்தின்படி போதியுங்கள். 11 வச.

7. தேவனை மகிமைப்படுத்துவதையே செய்யுங்கள். 11 வச.

தேவனால் பிறந்தவனின் அடையாளம்

( 1 யோவான் நிருபத்திலிருந்து ) தேவனால் பிறந்தவர்களை நாம் எப்படி அடையாளம் காண முடியும் ?
அப்.யோவான் தனது முதலாவது நிருபத்தில் “தேவனால் பிறந்தவனின் 7 அடையாளங்களை” குறிப்பிடுகிறார்.

1. இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பான். 5:1

2. நீதி செய்கிறவனாயிருப்பான். 2:29, 3:10

 3. பாவம் செய்யமாட்டான். 3:8, 5:18

4. தேவ வார்த்தைக்கு செவிகொடுப்பான். 4:6

 5. அன்புள்ளவனாயிருப்பான். 4:7

 6. உலகத்தை ஜெயிக்கிறவனாயிருப்பான். 5:4, 4:4

 7. தன்னை காக்கிறவனாயிருப்பான். 5:18

Thanks to Bro. Vivek

பரத்திலிருந்து வருகிற ஞானம்

தேவனுடைய பிள்ளைகள் இந்த உலகத்தில் தேவஞானமுள்ளவர்களாய் வாழ வேண்டியது அவசியம். தேவஞானமென்பது லெளகிகமானதல்ல, அது பரத்திலிருந்து இறங்கிவருவதாகும். அந்த பரமஞானத்தின் 7 தன்மைகளை யாக்கோபு தனது புத்தகத்தில் விளக்குகிறார்.

பரத்திலிருந்து வருகிற ஞானம். யாக் 3:17

1. சுத்தமுள்ளது
2. சமாதானமுள்ளது
3. சாந்தமுள்ளது
4. இணக்கமுள்ளது
5. இரக்கமும், நற்கனிகளும் நிறைந்தது
6. பட்சபாதமில்லாதது
7. மாயமற்றது.

Thanks to Bro. vivekananth

ஒரேதரம் செய்துமுடித்தார்

ஒரேதரம் செய்துமுடித்தார்.” (எபிரெயர் 7:27)
லேவி கோத்திர ஆசாரியர்களுக்கும், நமது மகா பிரதான ஆசாரியராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை விளக்கும் எபிரெய ஆசிரியர், கிறிஸ்துவின் செயலை ஒரேதரம் செய்து முடித்தார் என்று எழுதுகின்றார்.

கிறிஸ்து எதை ஒரேதரம் செய்து முடித்தார்?

1. ஒரேதரம்… பாடுபடும்படி இந்த பூமியில் வெளிப்பட்டார். (எபி 9:26, 25)
2. ஒரேதரம்… எல்லாருடைய பாவங்களையும் சுமந்து தீர்த்தார். (எபி 9:28)
3. ஒரேதரம்…  தம்மை தாமே பலியிட்டார்.  (எபி 7:27)
4. ஒரேதரம்… நம்மை பரிசுத்தமாக்கியிருக்கிறார். (எபி 10:10)
5. ஒரேதரம்… மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து, நம்மையும் அந்த சிலாக்கியத்திற்கு உட்படுத்தினார். (எபி 9:12)
6. ஒரேதரம்… நித்திய மீட்பை நமக்கு உண்டு பண்ணினார். (எபி 9:12)
7. இனி இரண்டாந்தரம்… தமக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி தரிசனமாவார். (எபி 9:28)

Thanks to கே. விவேகானந்த்

இயேசு கிறிஸ்து பிறந்தார் ஏன்? எப்படி? எங்கு?

மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இப்பூமியில் பிறந்தவர்களே. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. ஆகவேதான் அவருடைய பிறப்பு உலகம் முழுவதும் நினைவு கூறப்படுகிறது. மத்தேயு 1:16

கிறிஸ்துவின் பிறப்பை குறித்து வேதம் கூறும் சத்தியம்.

  1. தாவீதின் சந்ததியில் பிறந்தார். (ரோமர் 1:5, 2 தீமோ 2:8)

    வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலாய் பிறந்தார் (லூக் 1:69, 75)

    1. கன்னிகையின் குமாரனாய் பிறந்தார். (கலா 4:5)

    “ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும்” (கலா 4:5). ஸ்திரீயினிடத்திற்தான் பிள்ளைகள் பிறக்கிறார்கள் என்றாலும், இயேசு கிறிஸ்து கன்னிகையின் குமாரனாய் பிறந்தார் (ஏசா 7:14). அதாவது, அவர் பரிசுத்தமுள்ளவராய் பிறந்தார்.

    1. பாலகனாய் பிறந்தார். (ஏசா 9:6)

    தேவன் மனிதனானார். “பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” எபி 2:14

    1. இயேசு என்ற நாமத்திலே பிறந்தார். (மத் 1:16)

    “அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத் 1:21).

    1. இரட்சகராக பிறந்தார். (லூக் 2:11)

     “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” (1 தீமோ 1:15). மனுகுலத்தை பாவத்திலிருந்து இரட்சிக்க சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்.

    1. இராஜாவாகப் பிறந்தார் (மத் 2:2)

    அவரை உள்ளத்தில் ஆண்டவரும் (ஆளுகை செய்கிறவர்) இரட்சகருமாக ஏற்றுக் கொள்கிறவர்களின் வாழ்வில் இராஜாவாய் வீற்றிருந்து பராமரித்து, பாதுகாத்து, வழிநடத்துவார்.

    1. மரித்தோரிலிருந்து முதற் “பிறந்தவர்” வெளி 1:5)

    மரித்தோரிலிருந்து முதற் “பிறந்தவர்” என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்து சொல்லப்படவில்லை என்றாலும், மரித்தவர்களின் நடுவிலிருந்து உயிரோடு எழுந்தவராய் இருக்கின்றார் என்பதை காட்டுகிறது. அவர் இன்றும் ஜீவிக்கின்றார். இனி இந்த பூமியை நியாயம் தீர்க்கவராக வரப்போகின்றார்

    அவர் பிறந்ததை நினைவு கூறும் சந்தர்ப்பத்தில் அவர் மரித்தார், அவர் உயிர்தெழுந்தார், அவர் மறுபடியும் வருவார் என்பதையும் நாம் நினைவு கூற வேண்டியது அவசியம்.

    இயேசு கிறிஸ்து “உங்களுக்காக பிறந்தார்” என்பதை மறக்க வேண்டாம் (லூக் 2:10,11).

    Thanks to – கே. விவேகானந்த்

    ஜெபத்தில் எது இருக்க வேண்டும்? எது இருக்க கூடாதது? முக்கியமான குறிப்புகள்

    என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கையிலும் என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும் அப்படியாயிற்று. யோபு 16 : 17

    தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர். அநேகரது ஜெபம் கேட்கப்படவில்லை காரணம் ஜெபத்தில் இருக்க வேண்டிய விஷயங்கள் அறியாமல் இருப்பதால் ஜெபம் கேட்கபடவில்லை. இந்தக் குறிப்பில் ஜெபத்தில் இருக்க வேண்டிய விஷயங்களையும் ஜெபத்தில் இருக்கக்கூடாத விஷயங்களையும் நாம் இதில்அறிந்துக்கொள்வோம்.

    ஜெபத்தில் இருக்க வேண்டியவைகள்

    1 .பாவ அறிக்கை
    நெகே 1 : 4
    தானி 9 : 4 , 20

    2 . தாழ்மை
    2 நாளாக 7 : 14

    3 . பொருத்தனை
    சங் 50 : 14 , 15

    4 . தேவசித்தம்
    1 யோவா 5 : 14

    5 . இயேசுவின் நாமம்
    யோவா 14 : 14,
    யோவா 16 : 24

    6 . விசுவாசம்
    மாற்கு 11 : 24

    7 . தேவன் பலன் கொடுக்கிறார் என்ற நம்பிக்கையோடுள்ள விசுவாசம். எபி 11 : 6

    8 . ஸ்தோத்திரம்
    பிலி 4 : 6

    ஜெபத்தில் இருக்க கூடாதவைகள்

    1 . அவிசுவாசம்
    மாற்கு 9 : 22 , 23

    2 . இச்சைகளை நிறைவேற்ற ஜெபித்தல்
    யாக் 4 : 3

    3 . இருமனம், சந்தேகம் யாக் 1 : 6 , 7

    4 . சுயநலமாக கேட்காமல் தேவனுக்கென்று கேட்கவேண்டும்
    உதாரணமாகஅன்னாள் ஜெபம்
    1 சாமு 1 : 11

    5 . சோர்வு லூக் 18 : 1

    6 . பெருமை லூக் 18:11

    7 .வீண்வார்த்தைகள்
    யோபு 35 : 13
    மத் 6 : 79 , 9

    8 .மற்றவர்கள் குற்றத்தை மன்னிக்காத தன்மை மாற் 11 : 25

    இந்தக் குறிப்பில் ஜெபத்தில் இருக்க வேண்டியவைகளும் இருக்கக்கூடாதவைகளையும் குறித்து
    இதில் சிந்தித்தோம்

    ஆமென் !