• Thursday 26 March, 2026 10:26 AM
  • Advertize
  • Aarudhal FM

இன்று மகளிர் உரிமை தொகை டெபாசிட்! என்ன மகிழ்ச்சியா?

பெண்களின் வங்கிக் கணக்கில், மாதந்தோறும் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகையான ₹1,000 அரசால் டெபாசிட் செய்யப்படும்.

அதன்படி நாளை 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். அதனால் இன்று பெண்களின் வங்கிக் கணக்கில் ₹1,000 டெபாசிட் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான எஸ்எம்எஸ் வந்ததும் ₹1,000 டெபாசிட் செய்யப்பட்டதை பெண்கள் தெரிந்து கொள்ளலாம்

மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம்) சிறப்பினமாகக் கருதி முழுவதும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.