• Thursday 10 April, 2025 11:32 PM
  • Advertize
  • Aarudhal FM

நம் திருச்சபையில் அரசாங்க வேலைக்கு காத்திருப்பவர்களுக்காக

✅TNPSC Group 1 Recruitment 2025
✅காலி இடங்கள்: 70 Deputy Collector, Deputy Superintendent of Police, District Employment Officer, Assistant Director of Rural Development, District Employment Officer, Assistant Commissioner of Labour Posts
✅உடனே விண்ணப்பிக்க Link: https://tamilanguide.in/tnpsc-recruitment-2025-70-group-1-posts-apply-now/
✅கல்வி தகுதி: Any Degree
✅இறுதி நாள்: 30.04.2025
💒 நமது திருச்சபையைச் சார்ந்த, பட்டப்படிப்பு படித்துள்ள அனைத்து பிள்ளைகளையும் இந்தத் தேர்வை எழுத ஊக்குவிக்கும்படி / வழிகாட்டும்படி அன்போடு வேண்டுகிறேன். 🙏

கிறிஸ்தவ மதபோதகரின் உடலை அடக்கம் செய்த இந்து, முஸ்லிம்கள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற கிறிஸ்தவ மத போதகரின் உடலை இந்து, முஸ்லிம்கள் இணைந்து அடக்கம் செய்திருக்கிறார்கள். மனிதநேயத்துக்கு சிறந்த எடுத்துக்கட்டாக இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் போற்றுகிறார்கள்.

தமிழ்நாடு எப்போதுமே மத ரீதியான பிரிவினைகளை ஏற்காது. எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் மாநிலம் ஆகும். சாதி மத வேறுபாடுகள் மூலம் இங்கு அரசியல் செய்ய முடியாது. இன்ன சாதி என்றோ, இன்ன மதம் என்றோ கூறி, தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது. மக்கள் தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள்.

இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் மிகவும் ஒற்றுமையாக வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கோயில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்குவது இங்கு தான். இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழாவிற்கு முதல் வரிசையில் செல்வது இந்துக்கள் தான். இதுபோல் வேளாங்கண்ணி மேரி மாத ஆலயம் தொடங்கி பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மக்கள் செல்வார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை இந்துக்களுக்கு அடுத்தபடியாக கிறிஸ்தவர்கள் கணிசமான அளவு இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மிக ஒற்றுமையாக இருக்கிறார்கள். இங்கு மனித நேயத்திற்கு சிறந்த உதாரணம் என்கிற அளவில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் 90 வயதாகும் இயேசு ரத்தினம் (வயது 90). இவர் தென்காசி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மத போதகராக இருந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இயேசு ரத்தினம் கடந்த 30 ஆண்டுகளாக குடும்பத்தினரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் இந்திரா காலனியில் வசித்து வந்திருக்கிறார். அவருக்கு அப்பகுதியினர் உணவு வழங்கி வந்தார்கள்.

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக இயேசு ரத்தினம் நேற்று முன்தினம் இறந்து விட்டார். இதுகுறித்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தும் யாரும் அவரை பார்க்கவே வரவில்லை. இதனை அறிந்த சொக்கம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உடையார்சாமி, திரிகூடபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் செய்யது மீரான் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இந்து, முஸ்லிம்களும் சென்று, கிறிஸ்தவ மதச்சடங்கின்படி இயேசு ரத்தினம் உடலை அடக்கம் செய்தனர். கிறிஸ்தவ மத போதகரின் உடலை இந்து, முஸ்லிம்கள் இணைந்து அடக்கம் செய்த நிகழ்ச்சி மனிதநேயத்துக்கு எடுத்துக்காட்டாகவும், நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது.

கிழங்குகளும்… பயன்களும்…

*மரவள்ளிக் கிழங்கு – இதயத் துடிப்பை சீராக வைக்கும்.

*சேப்பக்கிழங்கு – உடல் வெப்பத்தை தணிக்க உதவும்.

கருணை கிழங்கு -இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

*சர்க்கரைவள்ளிக் கிழங்கு – சரும பாதுகாப்புக்கு பயனுள்ளது.

*உருளைக் கிழங்கு – நார்ச்சத்தை அதிகரிக்கும்.

*பனங்கிழங்கு – செரிமானப் பிரச்னைகளை சரிசெய்ய உதவும்.

ஆண் குழந்தைதான் வேணும்… கொடூரத் தாயால் விபரீதம்!

ராஜஸ்தானில் ஆண் குழந்தை பெறாத விரக்தியில், பிறந்து 17 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றத் தாயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் மன உளைச்சலில் இருந்த அந்த பெண், தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ளார். கணவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ஆணோ, பெண்ணோ அனைவரும் சமம் என்பதை சமூகம் எப்போதுதான் உணருமோ?

உஷார்: சுட்டெரிக்கும் வெயில்

இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும் தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட 3°C அதிகமாக இருக்கக்கூடும் என IMD கணித்துள்ளது. வட மாவட்டங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் நேற்று 38°C மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பால், வெளியில் செல்லும் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

கல்வி அலுவலகத்தில் தீ விபத்து ஆவணங்கள் எரிந்ததால் பரபரப்பு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் வட்டார கல்வி அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இயங்கி வருகிறது. இங்கு தா.பேட்டை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதிவேடுகள், பள்ளி மாணவ, மாணவிகள் குறித்தான அனைத்து பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த வட்டார கல்வி அலுவலகத்தின் அருகே காலியாக இருந்த இடத்தில் சருகுகள், காய்ந்த கட்டைகள் கிடந்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக பற்றிய நெருப்பு வட்டார கல்வி அலுவலகத்தின் உள்ளே தீப்பொறி பரவி உள்ளது. இதில் வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து புகை வருவதை அப்பகுதியினர் பார்த்து முசிறி தீயணைப்பு நிலையத்திற்கும், ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து முசிறி தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கர்ணன் தலைமையில் மீட்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து பீரோ கணினிகள் உள்ளிட்டவைகளை உடனடியாக வெளியே கொண்டு வந்தனர். இதில் பழைய பதிவேடுகள் அனைத்தும் தீயில் எரிந்து போனது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

9 வயதில் திருமணம் மசோதா நிறைவேற்றம்

9 வயதில் திருமணம் மசோதா நிறைவேற்றம் பாரம்பரியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய மசோதாவை நிறைவேற்றி ஈராக் ஆட்சியாளர்கள் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றனர்.பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை, 18ல் இருந்து 9ஆக குறைத்துள்ளனர். ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஜஃபரி இஸ்லாமிய விதிகளின் படி, 9 வயது பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கலாம். ஆனால் இது பெண்களின் வாழ்க்கைக்கு ஆபத்தாக அமையும் என எதிர்கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா டிரம்ப் உறுதிமொழி ஏற்கும் பைபிள்

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், வருகிற ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். 2வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், தான் பதவியேற்ற பின்னர் என்னென்ன மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் செய்யப்படும் என்று தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருகிறார்.

டொனால்ட் டிரம்ப்போடு, ஜே.டி.வானஸ் என்பவர் துணை அதிபராக வரும் 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். உலகின் தலைசிறந்த நாடாக பார்க்கப்படும் அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் விழாவில் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

அந்த வகையில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு வெளிநாட்டு தலைவர்காளுடன் ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அதிபர் பதவியேற்பு விழாவின்போது டொனால்ட் டிரம்ப் உறுதிமொழியேற்கும் பைபிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், அவரது மறைந்த தாய் கொடுத்த பைபிள் மற்றும் மறைந்த அமெரிக்கா முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிள் ஆகியவற்றின் மீது உறுதிமொழி எடுக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் பதவியேற்ற போது, ஆப்ரகாம் லிங்கனின் பைபிளை கொண்டு பதவியேற்றார். அமெரிக்கா அதிபர்களின் பதவியேற்பு விழாக்களின் போது நீண்ட காலமாக பைபிள் மீது உறுதிமொழி எடுக்கம் வழக்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 62 பேர்

இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர்.

அடையாளம் காணப்படாத 4 பேரை அடையாளம் காணவும், மீதமுள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருவனந்தபுரம் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 5 ஆண்டுகளாக பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.இந்த அதிர்ச்சி தகவலை அந்த மாணவி, தான் படித்த பள்ளியில் வழங்கப்பட்ட கவுன்சிலிங்கில் தெரிவித்தார். அவர் 13 வயதில் இருந்து, பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு பலாத்காரமும் செய்யப்பட்டிருக்கிறார்.

பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவியிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். யார் யாரெல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்? என்று வீராங்கனையிடம் விசாரணை நடத்தப்பட்டது.அப்போது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 5 ஆண்டுகளில் தன்னை 62 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினார். மேலும் தன்னை சீரழித்தவர்களில் பலரது பெயர் விவரங்களையும் அவர் தெரிவித்தார். அதனடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 62 பேர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.வீராங்கனையை சீரழித்தவர்களில் அவரது காதலன், காதலனின் நண்பர்கள், உடற்பயிற்சி ஆசிரியர், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், உடன் படிக்கும் மாணவர்கள் என பலரும் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களில் வீராங்கனையின் காதலன் உள்பட 20 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, மாணவியை பலாத்காரம் செய்தபோது எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோவை காண்பித்து தொடர்ந்து சீரழித்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.பள்ளி படிக்கும் வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவினர் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனையிடம் மாஜிஸ்திரேட்டு ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தார்.இந்நிலையில் அடூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் விளையாட்டு வீராங்கனை நேற்று ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் மற்றும் தன்னை சீரழித்தவர்கள் பற்றிய விவரங்களை விளையாட்டு வீராங்கனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாணவி அளித்த வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார்.பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பத்தினம் திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 62 பேரில் 58 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர். அடையாளம் காணப்படாத 4 பேரை அடையாளம் காணவும், மீதமுள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களில் 15 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்த வழக்கின் பொறுப்பு அதிகாரியான போலீஸ் டி.ஐ.ஜி. அஜீதா பேகம் தெரிவித்துள்ளார்.

திருப்பதி கூட்ட நெரிசல் 6 பேர் பலி.. கடிந்த முதல்வர் சந்திரபாபு.. மன்னிப்பு கேட்ட தேவஸ்தானம்

திருப்பதி: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். சேலம், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். திருப்பதி தேவஸ்தானம் இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்த கொடூர விபத்தில் 34 பேர் காயம் அடைந்த நிலையில் அங்கே பக்தர்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் பெற பக்தர்கள் குவிந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் பலியாகி உள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட மேலும் பலர் சிகிச்சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

டோக்கன் பெறுவதற்கு கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து உள்ளது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து அங்கே நிலைமை மோசமாகி.. கீழே விழுந்தவர்கள் மீது கால் வைத்தவர்கள் மேலும் பலர் தடுக்கி கீழே விழுந்தனர்.

கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் ஏறி நடந்து சென்றதால் பலருக்கு உடலில் காயம் ஏற்பட்டு உள்ளது. அதேபோல் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. சிலருக்கு கழுத்து பகுதியில் மக்கள் மிதித்ததில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.இதனால் சம்பவ இடத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். சேலம், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். இந்த கொடூர விபத்தில் 34 பேர் காயம் அடைந்த நிலையில் 10 பேர் மோசமான உடல்நிலையில் உள்ளனர். . சொர்க்கவாசல் இலவச டோக்கன் பெற ஒரே நேரத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவே விபத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

திருப்பதி கோவில் வளாகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த நபர்களை சந்திக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திருமலைக்கு வருகை தருகிறார். இந்த விபத்திற்கு காரணமான அதிகாரிகளை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருப்பதி தேவஸ்தானம் இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.முறையாக ஏற்பாடு செய்யாத காரணத்திற்காக திருப்பதி தேவஸ்தானம் இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, தேவஸ்தான நிர்வாகம் மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிருப்தி அடைந்துள்ளதாகவும் .. தொலைபேசியில் அதிகாரிகளை கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது

திருமலை ஸ்ரீவாரி வைகுண்ட வாசலை தரிசிப்பதற்காக டோக்கன் வாங்க விஷ்ணு நிவாசம் அருகே மக்கள் வரிசையில் நிற்கையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் பலியானது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டோக்கன் பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், உயர் அதிகாரிகளை சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணிகளை செய்து வருமாறு உத்தரவிட்டுள்ளேன். நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவர்களின் உயிரைக் காப்பாற்றவும் உத்தரவிட்டுள்ளேன். நேரடியாக TTD அதிகாரிகளிடம் பேசி, நிலைமையை ஆய்வு செய்து வருகிறேன், என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.