• Saturday 19 April, 2025 10:10 AM
  • Advertize
  • Aarudhal FM

49 பெண்களுக்கு காதல் வலை, 5 முறை திருமணம்; காதல் மன்னனை பொறி வைத்து பிடித்த போலீஸ்

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யஜித் சமால்(வயது 34). திருமணத்திற்கு வரன் தேடும் வலைதளங்களில் பதிவு செய்யும் விதவைகள், விவகாரத்தான பெண்களை குறி வைத்து சமால் தனது காதல் வலையை விரித்துள்ளார். இதில் மயங்கும் பெண்களிடம் தாம் ஒரு போலீஸ் அதிகாரி என்று அறிமுகமாகி பின்னர் அவர்களுடன் நட்பாக பழகத் தொடங்கி உள்ளார்.

5 திருமணம்

பின்னர் அவர்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவர்களிடம் பணத்தை பெற்றுள்ளார். ஒவ்வொரு பெண்ணிடமும் இதே முறையை பயன்படுத்திய சமால் இதில் 5 பெண்களை ஒரே நேரத்தில் திருமணமும் செய்துள்ளார். திருமணம் செய்து கொண்டு பணத்தை பெற்றுவிட்டு அவர்களுடன் வாழ மறுப்பு தெரிவித்ததாகக் கூறி இரு பெண்கள் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

பொறி வைத்த போலீஸ்

ஒரே நபர் மீது இரு பெண்கள் வெவ்வேறு நேரங்களில் புகார் அளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சமாலை கைது செய்ய திட்டமிட்ட காவல் துறையினர், பெண் போலீஸ் அதிகாரியின் தகவல்களை வரன் பார்க்கும் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதனை பார்த்து தொடர்பு கொண்ட சமாலை லாவகமாக பேசி கைது செய்தனர். 

மோசடி

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காவல் துறையினரே ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மொத்தமாக 49 பெண்களுடன் சமால் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு பெண் சுமார் 8 லட்சம் வரையில் அவர் பெயரில் வங்கியில் தனிநபர் கடன் பெற்று சமாலுக்கு காரை பரிசாக வழங்கி உள்ளார். வேறொரு பெண் சுமார் 30 லட்சம் வரை தொழில் தொடங்குவதற்காக சமாலுக்கு வழங்கி உள்ளார். 

கைது – கைது செய்யப்பட்ட சமாலிடம் இருந்து ஒரு கார், விலை உயர்ந்த இருசக்கர வாகனம், 2.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

thanks to asianet news tamil

ஆன்மீக நிகழ்ச்சியில் நிகழ்ந்த சோகம்; கோவில் சுவர் விழுந்து 9 சிறுவர்கள் பலி

 Aug 4, 2024, 4:37 PM

மத்திய பிரதேசம் மாநிலம், சாகர் மாவட்டத்தின், ஷாபூர் கிராமத்தில் ஹர்தௌல் பாபா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று காலை 8.30 மணியளவில் மத நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான கட்டிடங்கள் மழை நீரில் நனைந்து வலுவிழந்த நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், வழிபாட்டு நிகழ்ச்சியின் போது கோவிலின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. சம்பவத்தின் போது 10 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அப்பகுதியில் நின்று கொண்டிருந்ததால் சிறுவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்தில் 9 சிறுவர்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த சில சிறுவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் கனமழை காரணமாக அம்மாநிலத்தில் அண்மை காலமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

அண்மையில் ரேவா மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் அதே போன்ற விபத்தில் 9 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

thanks to asianet news tamil

சிறுவனின் உயிரை குடித்த ஆன்லைன் கேம்; தற்கொலைக்கு ப்ளூ பிரிண்ட் தயாரித்து விபரீத முடிவு

Aug 3, 2024, 1:08 PM

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 15 வயது மாணவர் கடந்த 26ம் தேதி இரவு 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் தற்கொலை காவல் துறைக்கு பெரும் சவாலாக அமைந்ததைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எப்படி தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம் என்ற விரிவான திட்ட அறிக்கையை அம்மாணவன் துள்ளியமாக படமாக வரைந்து வைத்திருந்ததைக் கண்டு காவல் துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனின் வரைபடத்துடன் சேர்ந்து ஒரு கேமிங் குறியீட்டில் எழுதப்பட்ட பல ஆவணங்களையும் அதிகாரிகள் கண்டு பிடித்தனர். சிறுவனின் தந்தை நைஜீரியாவில் வேலை செய்து வரும் நிலையில், சிறுவன் தனது தாய் மற்றும் தம்பியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இது தொடர்பாக சிறுவனின் தாய் கூறுகையில், தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்த சிறுவன் ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகினான்.

மாடியில் இருந்து கீழே குதிப்பதற்கு முதல் நாளில், நாள் முழுவதும் கத்தியுடன் கேம் விளையாடி வந்தான். பின்னர் நான் கண்டித்ததைத் தொடர்ந்து இரவின் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அறைக்குச் சென்று விளையாடத் தொடங்கினார். பின்னர் இரவில் வாட்ஸ்அப் குழுவில் சிறுவன் மாடியில் இருந்து குதித்துவிட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதன் பின்னர் சிறுவனின் அறைக்கு சென்று பார்த்தபோது அவன் அங்கு இல்லை. மாறாக கீழே குதித்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாக தெரிவித்துள்ளார். மாணவர்களின் மனநிலைக்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்படும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒரு கட்டத்திற்கு பின்னர் சிறுவர்களை அடிமையாக்கி அவர்களை கட்டுப்படுத்துகிறது. இதனால் தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடும் மாணவர்கள், சிறுவர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவர்களின் செயல்பாடுகளும் மாறுகின்றன. இதனிடையே அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்தும் சிறுவர்களை அவர்களின் பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

thanks to asianet news tamil

உடல் ஆரோக்கியத்திற்காக கிழங்கு சாப்பிட்ட இளைஞர் முகம் வீங்கி துடிதுடித்து பலி

Aug 3, 2024, 1:50 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தார்வழி பகுதியில் வசித்து வருகிறார். விவசாய பணிகளுக்கு டிராக்டர் ஓட்டி வரும் மணிகண்டனுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

இதனிடையே மாச்சம்பட்டு பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மணிகண்டன் தேங்காய் ஏற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விளைந்திருந்த காட்டு கருணைக் கிழங்கை மணிகண்டன் சாப்பிட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் அதனை சமைக்காமல் சாப்பிட வேண்டாம் என்று கூறியதற்கு, பச்சையாக சாப்பிட்டால் தான் கூடுதல் பலம் கிடைக்கும் என்று கூறிவிட்டு அந்த கிழங்கை சாப்பிட்டுள்ளார்.

அதனை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஒவ்வாமை ஏற்பட்டு அவரது முகம், உடலின் சில பகுதிகள் வீங்கத் தொடங்கி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எந்தவித முன்னேற்றமும் தெரியாத நிலையில், உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

thanks to asianet news tamil

நாட்டிலேயே முதல்முறை; சேலத்தில் ஏலியனுக்கு கோவில் கட்டிய சித்தர் – இனி எல்லாமே ஏலியன்கள் தானாம்

 Aug 2, 2024, 11:53 PM

ஏலியன் கோவில் – சேலம் மாவட்டம் மல்லமுப்பம்பட்டி பகுதியில் சிவ கைலாய ஆலயத்தில் இரட்டை ஆருடை சிவலிங்கம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு கடவுள் சிலைகள் ஒவ்வொரு சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளன. ராமர் போர் முடிந்து ஓய்வு பெற்ற இடம் என்று கருதப்படுவதால் ராமகவுண்டனூர் என்ற பெயர் பெற்றுள்ளதால் அம்பு எய்தும் கோலத்தில் இங்கு ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிது.

இந்த கோவிலை லோகநாதன் என்றசித்தர் பாக்கியா நடத்தி வருகிறார். நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத வகையில் ஏலியனை கடவுளாக பாவித்து அதன் சிலை பாதாளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாக்யா சித்தர் கூறுகையில், “உலகில் சிவன் படைத்த முதல் தெய்வம் ஏலியன் தான். உலகிலேயே ஏலியனின் முதல் சிலை இங்கு தான் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் சிலை அமைப்பதற்கு முன்பாக ஏலியனிடம் அனுமதி பெறப்பட்டதாம். ஏலியன் தெய்வங்கள் அனுமதி கொடுத்ததன் அடிப்படையிலேயே சிலை அமைக்கப்பட்டுள்ளதாம்.

இனிவரும் காலங்களில் ஏலியன்களின் வருகை அதிகமாக இருக்குமாம். அளவில்லாத சக்தியை கொண்ட ஏலியன்கள் உலகிற்கு எந்த தீங்கும் செய்ய மாட்டார்கள். அதற்காக தான் இந்த கோவிலை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

thanks to asianet news tamil

கோவையில் ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட வழக்கறிஞர்; பட்டப்பகலில் வெட்டி படுகொலை

Aug 2, 2024, 6:57 PM

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் கோவையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்யாவள்ளி கோவில்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதனிடையே பொள்ளாச்சி செல்வதற்காக இன்று காலை தனது காரில் புறப்பட்ட உதயகுமாரின் உடல் மைலேரிபாளையம் அருகே கோழிப்பண்ணை முன்பாக கிடந்தது.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ஓடும் காரில் இருந்து உதயகுமார் கீழே தள்ளிவிடப்பட்டதாகவும், அவர் கீழே விழுந்தவுடன் மர்ம நபர்கள் அவரை உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. வழக்கறிஞரை கொலை செய்த மர்ம நபர்கள் அவரது காரிலேயே தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்த உதயகுமாரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

thanks to asianet news tamil

சென்னையில் பயங்கரம்! 17 வயது சிறுவன் சரமாரி வெட்டி படுகொலை! உடல் அடையாறு ஆற்றில் வீச்சு!

Aug 2, 2024, 12:07 PM

சென்னையில் 17 வயது சிறுவன் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டு உடல் அடையாறு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கம் அருகே, நேற்று காலை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அடையாறு ஆற்றின் கரையோரம் வெட்டுக்காயங்களுடன் சடலம் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடந்த அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

பின்னர் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியபோது எம்.ஜி.ஆர்.நகர் சூளை பள்ளம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (எ) வெள்ளை சஞ்சய் (17) என்பதும் இவன் மீது பல்வேறு வழக்குகள் எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காசி திரையரங்கம் அருகே உள்ள அடையாறு ஆற்றின் மேம்பாலத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

thanks to asianet news tamil

பிஞ்சு குழந்தைகள் சாமரம் வீச, பள்ளியிலேயே ஒய்யாரமாக படுத்து உறங்கிய ஆசிரியை

உத்தரபிரதேசம் மாநிலம், அலிகார் மாவட்டத்தில் தானிபூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அரசு ஆரம்பப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியை ஒருவர் பாடம் நடத்துவதற்கு பதிலாக தரையில் படுத்துக் கொண்டு குழந்தைகளை தமக்கு காற்று வீசுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பிஞ்சு குழந்தைகளும் ஆசிரியைக்கு காற்று வீசி உள்ளன.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

thanks to asianet news tamil

பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கணவனை போட்டு தள்ளிய மனைவி! 18 வயது மகனும் உடந்தை! ஓராண்டுக்கு பின் சிக்கியது எப்படி?

Aug 1, 2024, 12:01 PM

மதுரை மாவட்டம்  திருமங்கலம் அசோக்நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம்(42). ராணுவவீரர். இவரது மனைவி ஜோதி(36). இந்த தம்பதிக்கு 18 வயதில் மகன் உள்ளார். விடுமுறைக்கு வந்த தர்மலிங்கம் கடந்தாண்டு ஏப்ரல் 3ம் தேதி நடந்த விபத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தர்மலிங்கம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்: தர்மலிங்கத்தின் மனைவி ஜோதி பால்பாண்டி என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவரது காதலுக்கு ஜோதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து தர்மலிங்கத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் பால்பாண்டியை மறக்க முடியாததால் ஜோதி அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் தர்மலிங்கத்துக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த மனைவி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி விடுமுறைக்கு ஊருக்கு வந்த தர்மலிங்கம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது திட்டமிட்டு வேனை ஏற்றி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து கொலை வழக்காக மாற்றிய போலீசார் மனைவி ஜோதி, கொலைக்கு உதவியாக இருந்த 18 வயது மகன், டிரைவர் பாண்டி, கிளீனர் அருண்குமார், உக்கிரபாண்டி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள பால்பாண்டியை தேடிவருகின்றனர்.

thanks to asianet news tamil

பள்ளி மாணவனை கரெக்ட் செய்து டியூசன் ஆசிரியை உல்லாசம்! விஷயம் தெரிந்த பெற்றோர்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

Jul 26, 2024, 10:49 AM

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்த இவர் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு வீட்டிலேயே டியூசன் எடுத்து வருகிறார். இவரிடம் 15 வயது மாணவன் டியூசன் படித்து வந்துள்ளான். 

இந்நிலையில் டியூசன் ஆசிரியைக்கும், மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்துள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் நாளடைவில் மாணவனின் பெற்றோருக்கு தெரிவயவந்ததை அடுத்து  டியூசன் அனுப்புவதை நிறுத்தி உள்ளனர். ஆனாலும் டியூசன் ஆசிரியை மாணவனுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

பொறுமை இழந்த மாணவனின் பெற்றோர் மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியை மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து டியூசன் ஆசிரியை கைது செய்யப்பட்டார். 

thanks to asianet news tamill