சத்தீஸ்கர் தேவாலயத்தில் பயங்கர தாக்குதல் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த காயம்
India
  
Latest Post
  
News
  

சத்தீஸ்கர் தேவாலயத்தில் பயங்கர தாக்குதல் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த காயம்

Share this page with friends

நாராயன்பூர், 2 ஜனவரி 2023,

சத்தீஸ்கர் தேவாலயத்தில் பயங்கர தாக்குதல் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த காயம்.

சத்தீஸ்கர் நாராயன்பூர் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயன்பூர் என்ற கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் ஒரு கும்பல் அத்துமீறி நுழைந்து அங்குள்ள பொருட்களை உடைத்தெறிந்தது. இந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் பொழுது சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட வந்த நாராயண்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் சதானகுமார் உட்பட அவர்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

(நாராயண்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் சதானகுமார்)

மேலும் தேவாலயத்தில் உள்ள ஏராளமான விலைமதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையடித்து சென்றது அந்த கும்பல். இந்த சம்பவம் குறித்து காவல்துறை மிக வேகமாக செயல்பட்டு இதுவரை அந்த கும்பலிலிருந்து 11 பேரை கைது செய்திருக்கின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் இது போன்ற சம்பவம் ஏராளமான இடங்களில் சபைகள் பாதிக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

மதசார்பற்ற இந்திய தேசத்தில் மதத்தின் பெயரால் நடக்கும் அராஜாகங்களை இந்திய அரசு விரைவில் தடுத்து நிறுத்த ஜெபம் பண்ணுவோம். ஜெபத்திற்காக உங்கள் நண்பர்களுக்கும் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கும் இச்செய்தியை பகிருங்கள்.


சத்தீஸ்கர் மாநிலம் நாராயன்புர் தேவாலயத்தில் நடைபெற்ற தாக்குதல் குறித்து வீடியோ தொகுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது கீழே உள்ள லின்க் ஐ கிளிக் செய்து காணவும்

https://tcnmedia.in/to-live-as-christians/
https://tcnmedia.in/these-are-the-witnesses-that-jesus-is-sinless/

மக்கள் அதிகம் வாசித்தவை:

கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் இன்று தொடக்கம்!
பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
பாசிச சக்திகள் நம்மை வீழ்த்த முடியாது நாம் அனைவரும் பெரும்பான்மையினர் தான் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச...
தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைத்து மத தலைவர்களுக்கும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்த...
கடலூரில் கிறிஸ்தவ போதகரை சரமாரியாக தாக்கிய கவுன்சிலரின் கணவர்
தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களேஎச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப...
பிரபல தீர்க்கதரிசி ஜான் முத்து பரலோக மகிமையில் பிரவேசித்தார்
கட்டாய மதமாற்றத்தால் நாட்டுக்கே ஆபத்து: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
ஜெப வீட்டிற்க்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் உட்பட ...

Share this page with friends