பிரபல தீர்க்கதரிசி ஜான் முத்து பரலோக மகிமையில் பிரவேசித்தார்
India
  
Latest Post
  
News
  

பிரபல தீர்க்கதரிசி ஜான் முத்து பரலோக மகிமையில் பிரவேசித்தார்

Share this page with friends

சென்னை; 30, அக் 2022

தீர்க்கதரிசி ஊழியத்தினை மகிமையாக நிறைவேற்றிய பாஸ்டர். S. ஜான் முத்து அவர்கள் தனது முதுமையின் காரணமாக கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தார்.

கடந்த இரு தினங்களாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூளையில் இரத்த உறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட இவருக்கு ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் 30, அக்டோபர் (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

திருமணம் செய்துகொள்ளாமல் அண்ணகர் என்ற நிலையில் தீர்க்கதரிசன ஊழியத்தை நிறைவேற்றி வந்தவர் போதகர் எஸ். ஜான் முத்து.

திருவணாமலை மாவட்டத்தினை சேர்ந்த இவர் மருதோன்றி பூங்கொத்து என்ற இவரது நிகழ்ச்சி ஆறுதல் எஃபம் மூலம் பிரசித்திப்பெற்றவை. இவர் தனது வாழ்நாளில் நூற்றுக்கணக்கான மாணவர்களை தனது சொந்த செலவில் படிக்க வைத்துள்ளார். விதவைகள் மற்றும் ஆதரவற்றோர்களின் நல்வாழ்விற்கு ஆதரவளித்து பராமரித்துள்ளார்.

பாஸ்டர் ஜான் முத்து அவர்களின் நல்லடக்க ஆராதனை 31, அக்டோபர் 2022 (செவ்வாய் கிழமை) அன்று பிற்பகல் 2.30 மணிக்கு போதகரின் சொந்த ஊரான திருவணாமலை மாவட்டத்திலுள்ள இளங்குன்னி கிராமத்தில் நடைபெறுவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

போதகரை இழந்து வாடும் சபையார், குடும்பத்தார், உடன் மற்றும் உதவி ஊழியர்களின் ஆறுதலுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். நன்றி

மக்கள் அதிகம் வாசித்தவை:

தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைத்து மத தலைவர்களுக்கும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்த...
கட்டாய மதமாற்றத்தால் நாட்டுக்கே ஆபத்து: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் சிலுவைகளை உடைத்தெறிந்த வாலிபர்
கடலூரில் கிறிஸ்தவ போதகரை சரமாரியாக தாக்கிய கவுன்சிலரின் கணவர்
கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு; மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜெப வீட்டிற்க்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் உட்பட ...
கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் இன்று தொடக்கம்!
பாசிச சக்திகள் நம்மை வீழ்த்த முடியாது நாம் அனைவரும் பெரும்பான்மையினர் தான் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச...
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப...

Share this page with friends