Skip to content
August 16, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தகவல் களஞ்சியம்
  • பாடல் பிறந்த கதை
  • இயேசு அழைக்கிறார் – ஒரு ஆறுதலின் கீதம்
  • பாடல் பிறந்த கதை

இயேசு அழைக்கிறார் – ஒரு ஆறுதலின் கீதம்

Editorial Team July 1, 2026 1 minute read
tn_jesus-calls-610x300-orig_orig

“இயேசு அழைக்கிறார்…” – ஒரு ஆறுதலின் கீதம்

வேதாகம அடிப்படை: மத்தேயு 11:28

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”

பாடலாசிரியர்: F. J. செல்லத்துரை
இசை (ராகம்): F. J. செல்லத்துரை

சென்னை மெரினா கடற்கரை. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வியாதியால் வாடுபவர்கள், பிள்ளைப்பேறு வேண்டி ஜெபிப்பவர்கள், வேலை தேடி சோர்வுற்றவர்கள், குடும்பப் பிரச்சினைகளால் மனமுடைந்தவர்கள், அன்புக்குரியவர்களை இழந்து ஆறுதல் தேடுபவர்கள் என எண்ணற்ற தேவைகளோடு மக்கள் கூடியிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் தேவனுடைய வார்த்தையை அறிவிக்க வந்தவர், தேவ ஊழியர் சகோதரர் D. G. S. தினகரன். இசைக்குழு மென்மையாக இசைக்க, அவர் தனது விருப்பமான பாடல்களில் ஒன்றான “இயேசு அழைக்கிறார்” என்ற பாடலை உணர்வுபூர்வமாகப் பாடத் தொடங்குவார். அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் கூட்டத்தை நிரப்ப, பலர் ஆறுதலையும், சுகமளிக்கும் தேவனுடைய தொடுதலையும் அனுபவித்து, நன்றியோடு ஆண்டவரை மகிமைப்படுத்துவார்கள்.

உலகின் பல நாடுகளிலும் நகரங்களிலும் வல்லமையான நற்செய்தி மற்றும் அற்புத சுகமளிக்கும் ஊழியத்தை மேற்கொண்ட சகோதரர் தினகரனின் ஊழியத்தின் பெயரே “இயேசு அழைக்கிறார்” (Jesus Calls Ministries). அந்தப் பெயருக்கு அடித்தளமாக அமைந்ததே இந்தப் பாடல்.

இந்தப் பாடலை தனது நற்செய்திக் கூட்டங்களில் தொடர்ந்து பாடியதன் மூலம், சகோதரர் தினகரன் இதை உலகம் முழுவதும் பிரபலமாக்கினார். இதனால், இந்தப் பாடலைக் கேட்டாலே பலருக்கு அவரது ஆறுதல் நிறைந்த ஊழியம் நினைவுக்கு வரும் அளவிற்கு, பாடலும் ஊழியமும் ஒன்றோடொன்று இணைந்துவிட்டன.

இதன் காரணமாக, இந்தப் பாடலை எழுதியவரும் சகோதரர் தினகரன்தான் என்று பலர் எண்ணினர். ஆனால், அந்தத் தவறான எண்ணத்தை நீக்கும் வகையில், தனது நற்செய்திக் கூட்டங்களிலேயே பாடலாசிரியரை அறிமுகப்படுத்தி, அவருக்குரிய அங்கீகாரத்தை சகோதரர் தினகரன் வழங்கினார்.

இந்த அற்புதமான பாடலை இயற்றியவர் சகோதரர் F. J. செல்லத்துரை. இவர் ஜோதி – சைமன் தம்பதியருக்கு 1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி அரக்கோணத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை அரக்கோணத்தில் முடித்த அவர், பின்னர் சென்னையில் கல்லூரி ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தார்.

1972-ஆம் ஆண்டு, இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட செல்லத்துரை, அதன்பிறகு திருச்சபை மறுமலர்ச்சி ஊழியங்களில் முழுமையாக ஈடுபட்டு, பல சபைகளில் வேதாகமப் போதனைகளை வழங்கினார். 1973 ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். குடும்பத்துடன் இணைந்து தேவ ஊழியத்தில் தொடர்ந்து ஈடுபட்டார்.

மேலைநாட்டு இசையில் அடிப்படைப் பயிற்சி பெற்றிருந்த செல்லத்துரை, ஒரு பாடகர் குழுவை அமைத்து பல நற்செய்திக் கூட்டங்களில் ஆராதனையை வழிநடத்தினார். அக்கார்டியன், மவுத் ஆர்கன், மாண்டலின் மற்றும் கீபோர்டு போன்ற இசைக்கருவிகளை திறமையாக வாசித்தார். தமிழிலும் தெலுங்கிலும் சேர்த்து சுமார் 150 பாடல்களை இயற்றி, அவற்றிற்கு இசையமைத்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் செக்கந்திராபாத்தை மையமாகக் கொண்டு ஊழியம் செய்து வந்த காலத்தில், 1975-ஆம் ஆண்டு ஒரு நாள் உபவாச ஜெபத்தில் இருந்தபோது, இந்தப் பாடலுக்கான இசையை ஆண்டவர் தனது இதயத்தில் கொடுத்ததாக அவர் சாட்சியளித்துள்ளார். பின்னர், அந்த இசைக்கேற்ற ஆறுதலான வரிகளை எழுதி “இயேசு அழைக்கிறார்” என்ற பாடலை உருவாக்கினார்.

இந்தப் பாடல் முதன்முறையாக செக்கந்திராபாத்தில் நடைபெற்ற ஒரு நற்செய்திக் கூட்டத்தில் பாடப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் தேவனுடைய பிரசன்னத்தை ஆழமாக அனுபவித்தனர். அந்த நாளிலிருந்து, இந்தப் பாடல் ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டு, ஆறுதலையும், சமாதானத்தையும், தேவனுடைய சுகப்படுத்தும் வல்லமையையும் நினைவூட்டும் கீர்த்தனையாக உலகம் முழுவதும் பாடப்பட்டு வருகிறது.

“இயேசு அழைக்கிறார்” என்பது வெறும் ஒரு பாடல் அல்ல; சுமைகளால் சோர்ந்தவர்களை ஆண்டவரின் பாதத்திற்கு அழைக்கும் அன்பின் அழைப்பாகும். மத்தேயு 11:28-ல் இயேசு வழங்கிய அழைப்பை இனிய இசையிலும் எளிய தமிழிலும் மக்களின் இதயங்களுக்கு கொண்டு சென்ற ஆறுதலின் கீதமாக இது தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கிறது.

நன்றி: கிறிஸ்தவ திரட்டி

Post navigation

Previous: நாற்பது நாள் ராப்பகல் வன வாசம் பண்ணினீர் – பாடல் உருவான வரலாறு
Next: பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே – ஒரு நித்திய அடைக்கலத்தின் கீர்த்தனை

இதையும் படிக்கலாம்

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

Editorial Team July 2, 2026
tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

Editorial Team July 2, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tcn_MT_Calcutta
  • சாட்சிகள்

வாழ்க்கையின் கடினமான காலத்திற்கும்… ஒரு நோக்கம் இருக்கலாம்

Editorial Team August 13, 2026
NLNL-OfficialTrailer
  • உலகம்

‘No Limbs, No Limits: The NickV Story’ – அடுத்த மாதம் திரையரங்குகளில்

Editorial Team August 13, 2026
cathedral
  • உலகம்

கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்

Editorial Team August 11, 2026
andrew
  • சாட்சிகள்

சகோதரர் ஆண்ட்ரூ – “தேவனின் வேதாகமக் கடத்தல்காரர்” (God’s Smuggler)

Editorial Team August 7, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.