“தரித்திரன் என் மேல் தரிசனம் எதற்கென்றேன்?
தரித்திரன் என்றாலும் என்னைத் தரித்தவன் அல்லவோ!”
— என்கிறார்.
“நல்ல நிலத்தில் விழுந்த விதை என்பதில் சிறிது கர்வம் தான்!
ஆனாலும் சாக வேண்டுமே… பலன் கொடுக்க!!”
“தொலைந்த ஆடானேன்…
தனியனாய் தவித்தேன்.
மந்தை சேர்ந்த பின் தான் அறிந்தேன்…
மீந்த 99-க்கும் இதே அனுபவம் உண்டென்று!”
“ஒவ்வொரு ஜெபமும் வினாவுடன் தான் முடிகிறது.
ஆனால் விடை என்னவோ…
ஜெயம் தான்!”
“எத்தனை முறை விழுந்தாலும் எழும்பச் சொல்லுகிறார்…
எனக்கே சலித்துவிட்டது.
எப்படி சொல்லாமல் இருப்பார்?
அவர் தான் ஏழு எழுபது முறை மன்னிப்பவர் ஆயிற்றே!”
“ஒவ்வொரு முறை சறுக்கும்போதும்
என் கரம் பிடிக்கிறார்…
விழுந்துவிடக் கூடாது என்று மட்டுமல்ல,
என்னை உயர்த்திவிடவும் தான்.”
– திருமதி. அ. பிரின்சி ஷெக்கினா (பெராக்கா ஏ.ஜி. சபை – கல்மேடு, மதுரை)