Skip to content
August 15, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • காத்திருத்தல் வீணல்ல
  • தியான செய்திகள்

காத்திருத்தல் வீணல்ல

Editorial Team June 23, 2026 1 minute read
waiting

வேத வாசிப்பு: ஆதியாகமம் 30:22-26

அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும், இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றாள் (ஆதி.30:23,24).

நீண்டகாலம் காத்திருப்பது என்பது மனிதனுக்கு மிகுந்த இளைப்பை உண்டாக்கும் விஷயம். ஆனால் காத்திருந்தது வரும்போது அது கொடுக்கின்ற மகிழ்ச்சி சொல்லி முடியாதது. இதைத்தான் நீதிமொழிகள் இப்படிச் சொல்கிறது: “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவ விருட்சம்போல் இருக்கும்” (நீதி.13:12). இன்று நாமும் எதற்காவது விரும்பிக் காத்திருந்து களைத்துப்போய் இருக்கிறோமா? கர்த்தர் ஜெபத்தைக் கேட்கவில்லையே என்று தவிக்கிறோமா?

யாக்கோபு மனதார விரும்பியது ராகேலைத்தான்; ஆனால் லாபானின் சூழ்ச்சியால் அவளது கூச்சப்பார்வையுடைய அக்கா லேயாள் அவனுக்கு மனைவியானாள். என்றாலும் யாக்கோபு ராகேலுக்காக மேலும் ஏழு ஆண்டுகள் வேலை செய்து அவளை மனைவியாக்கிக் கொண்டான். அற்பமாய் எண்ணப்பட்ட லேயாளுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. இதைப் பொறுக்க முடியாத ராகேல் தன் அக்காவில் பொறாமை கொண்டு, தனது வேலைக்காரியை யாக்கோபுக்குக் கொடுக்க, லேயாளும் தனது வேலைக்காரியைக் கொடுக்க, அவர்களும் யாக்கோபுக்கு பிள்ளைகளைப் பெற்றார்கள். அதன் பின்பு லேயாள் இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் பெற்றுவிட்டாள். இத்தனையும் நடந்துமுடிந்த பின்னரே, கர்த்தர் ராகேலை நினைந்தருளினார். ராகேலுக்குத் தேவன் அருளிய குமாரன்தான் யோசேப்பு. இங்கே இரு சகோதரிகளினது அவசரங்களும் குடும்பத்தில் பின்னால் பல பிரச்சனைகளுக்கு வித்திட்டிருந்தாலும், யாக்கோபின் அன்பு மனைவி ராகேல் ஒரு மகனைப் பெற்றபோது, தன் தாயின் நிந்தையை நீக்கியவன் என்றும், இன்னும் கர்த்தர் ஒரு மகனைத் தருவார் என்றும் ராகேல் மகிழ்ந்து அவனுக்கு இட்ட பெயர்தான் யோசேப்பு.

ஆம், “தேவன் நிந்தையைப் போக்கிவிட்டார்” என்பதன் அடையாளமாகப் பிறந்தவர் தான் யோசேப்பு. மாத்திரமல்ல, யோசேப்பு என்றால் “பெருக்கம்” என்று அர்த்தமாம். பிறக்கும்போது உறுதியான ஆசீர்வாதத்தைச் சுமந்து கொண்டு பிறந்த யோசேப்பு, தன் பெயருக்கேற்றபடி பிறப்பிலே தன் தாயின் நிந்தையைப் போக்கியது மாத்திரமல்லாமல், தன் வாழ்விலும் தன் இனத்தாரின் குறைகளை நீக்கிய ஒருவராகவே காணப்படுகிறார். யோசேப்பு பிறப்பதற்கு கர்த்தர் ஒரு வேளையை வைத்திருந்தார். அவருடைய வேளைகள் ஒருபோதும் தவறாகாது. ஆகவே, நமது ஜெபங்களுக்கும் கர்த்தர் ஒரு ஏற்ற காலத்தை வைத்திருப்பார்; அப்போது பெரிய ஆசீர்வாதத்துடன் அது நிச்சயம் கிடைக்கும். ஆனால் நாம் காத்திருக்கவேண்டுமே!

ஜெபம்: தகப்பனே, அநேகநேரங்களிலே உம்முடைய வேளைக்கு நாங்கள் காத்திருக்காமல் ஆசீர்வாதங்களை இழந்திருக்கிறோம். எங்களை மன்னியும். காத்திருந்து உமது கரத்திலிருந்து மேன்மையான ஆசீர்வாதங்களைப் பெற எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.

Post navigation

Previous: வேதத்திலுள்ள கிருபை
Next: ஏன் கிருபை தேவை

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tcn_MT_Calcutta
  • சாட்சிகள்

வாழ்க்கையின் கடினமான காலத்திற்கும்… ஒரு நோக்கம் இருக்கலாம்

Editorial Team August 13, 2026
NLNL-OfficialTrailer
  • உலகம்

‘No Limbs, No Limits: The NickV Story’ – அடுத்த மாதம் திரையரங்குகளில்

Editorial Team August 13, 2026
cathedral
  • உலகம்

கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்

Editorial Team August 11, 2026
andrew
  • சாட்சிகள்

சகோதரர் ஆண்ட்ரூ – “தேவனின் வேதாகமக் கடத்தல்காரர்” (God’s Smuggler)

Editorial Team August 7, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.