ஒரு மரங்கொத்திப் பறவை, ஒரு பெரிய மரத்தின் அடிவாரத்தில் அமர்ந்து அதைத் தனது அலகால் கொத்திக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் திடீரென ஒரு மின்னல் அந்த மரத்தை தாக்கியது. மின்னல் தாக்கியதால் அந்த பெரிய மரம் சாய்ந்து விழுந்தது.
இதைக் கண்ட மரங்கொத்திப் பறவை மிகுந்த பெருமை கொண்டது. “நான் கொத்தியதால்தான் இந்த மரம் விழுந்தது! என் அலகு எவ்வளவு வலிமையானது!” என்று எண்ணியது. அதனால் அது இன்னும் அதிகமாக பெருமை கொண்டு, “நான் இன்னும் பெரிய மரங்களையும் வீழ்த்தி காட்டுவேன்” என்று சவால் விடுத்தது.
அது மற்றொரு பெரிய மரத்திற்குச் சென்று அதையே போல் கொத்த முயன்றது. ஆனால் இந்த முறை அது தோல்வியடைந்தது. மரம் விழவில்லை. மாறாக, அதன் அலகே முறிந்து போய்விட்டது.
இந்தச் சிறிய சம்பவம் நமக்கு ஒரு பெரிய உண்மையை கற்றுத்தருகிறது. நம்மால் நிகழ்ந்தது என்று நாம் நினைக்கும் பல விஷயங்கள் உண்மையில் தேவனுடைய கிருபையால் நடந்தவை.
இன்றைய உலகில் பலர் இப்படித் தான் இருக் கிறார்கள். தேவன் அவர்களின் வாழ்க்கையிலும் குடும்பங் களிலும் பெரிய காரியங்களைச் செய்கிறார். ஆனால் அவர்கள் அதை உணராமல், “என் உழைப்பால் என் திறமையால் என் புத்தியால் என் செல்வாக்கால்” என்று தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையான ஆன்மீக மனிதர்கள் வேறுபட்டவர்கள். அவர்கள் செய்ததைப்பற்றி பெருமை பேசுவதில்லை.
ஒரு தேவ மனிதரிடம், “நீங்கள் எத்தனை பேரை தேவனிடத்திற்கு நடத்தி வந்துள்ளீர்கள்?” என்று கேட்டபோது, அவர் தாழ்மையுடன், “அதற்கான கணக்குப் புத்தகம் என்னிடம் இல்லை” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அவருடைய இந்த தாழ்மைதான், தேவன் அவரை அதிகமாக பயன் படுத்தியதற்கான காரணம்.
இறைமக்களே, தாழ்மை என்பது ஒரு பலவீனம் அல்ல; அது ஒரு பெரிய ஆவிக்குரிய வலிமை. நாம் நம்மைத் தாழ்த்திக் கொண்டு, தேவனை உயர்த்தும் போது தான், அவர் நம்மை உயர்த்துகிறார்.
இறைவேதம் கூறுகிறது: “தேவன் அகங்காரிகளை எதிர்க்கிறார்; தாழ்மையானவர்களுக்கு கிருபை அளிக்கிறார்” (யாக்கோபு 4:6) மேலும், “கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியை முழுமையாக அறிவிப்பவன் யார்?” (சங்கீதம் 106:2)
அன்பானவர்களே, நம் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நன்மைக்கும், வெற்றிக்கும், உயர்வுக்கும் காரணம் நாம் அல்ல, நம் தேவனே. எனவே, நம் பெயரை உயர்த்தா மல், இயேசுவின் நாமத்தை உயர்த்துவோம். நம்மை முன்னி -லைப்படுத்தாமல், தேவனை முன்னிலைப்படுத்துவோம்.
நாம் நம்மை குறைத்துக் கொண்டால், தேவன் நம்மை உயர்த்துவார். தாழ்மையுடன் வாழ்வோம், அவருடைய கிருபையில் வளர்வோம்
– போதகர். பெ. பெவிஸ்டன்