ஜோசப் டேன்யன் என்பவர் பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த ஒரு கத்தோலிக்க பாதிரியார். 1873-ம் ஆண்டு ஹவாய் தீவிலுள்ள தொழு நோயாளிகளுக்கு மத்தியில் ஊழியம் செய்வதற்காக, அவர் அனுப்பப்பட்டார். அதிக உற்சாகத்தோடு அங்கு வந்தார். ஒவ்வொரு தொழு நோயாளியிடமும் நட்பை வளர்க்க வேண்டும் என்று எண்ணத்துடன் வந்தார். ஆனால் மக்களோ, அவரை விட்டு விலகினர். அவர் ஒரு சிற்றாலயத்தைக் கட்டினார். அங்கே ஆராதனை நடத்தினார். தன் முழு அன்பையும் தொழு நோயாளிகளிடம் ஊற்றினார். ஆனால் அவை எல்லாம் வீணாயிற்று.
அவருடைய ஊழியத்திற்கு அளவே இல்லை. 12 வருடங்களாக இவ்வாறு போராடி ஊழியம் செய்தார். ஆனால் ஒன்றும் பயனில்லை. கடைசியாக அவர் அந்த இடத்தை விட்டு வெளியேற தீர்மானித்தார். கப்பல் ஏறுவதற்கு தளத்தில் மன வேதனையோடு நின்றுக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அவர் தன்னுடைய உள்ளங்கைகளை உற்றுப் பார்த்தார்.
அங்கு சில வெள்ளப் புள்ளிகள் காணப்பட்டன. அவை உணர்ச்சி இன்றி இருந்தன.
அவர், தானும் ஒரு தொழு நோயாளி என்பதை உணர்ந்தார் டேனியன், நாமும் இவர்களை போல தொழுநேயாளி ஆனதை குறித்து சற்றும் கவலை படவே இல்லை, தொழு நோயாளிகள் வசிக்கும் இடத்துக்கு மீண்டும் சென்றார்.
தன்னுடைய ஊழியத்தை மீண்டும் தொடங்கினார்.
அவரும், தொழுநோயாளி என்ற செய்தி,
எங்கும் பரவியது. அவருடைய வீட்டைச் சுற்றி பலர் வந்தனர். அவருடைய நிலைமை, தங்களைப் போல் ஆயிற்றே என உணர்ந்தனர். அந்த வாரம், ஞாயிறு அன்று. அவருக்கு மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. சிற்றாலயம் நிரம்பி வழிந்தது. அன்பின் ஆழத்தைக் குறித்து அவர் பிரசங்கித்தார். அவர் இறையியலுக்கு அப்பால் போதித்தார். அவருடைய ஊழியம் வெற்றிகரமாக அமைந்தது…
இன்று உங்கள் அன்பின் நிறைவை பெற்றுக் கொள்பவர்களே..!! நாளை உங்களுடைய விசுவாசத்தைக் கேள்விப்பட்டு மகிழுவார்கள்…!!
ஒருவனுடைய விசுவாசம் எவ்வளவு பெரியது என்பதை விட அவன் கொண்ட (அன்பு) எவ்வளவு பெரியது என்பதே சிறந்தது. வேதம் என்ன கூறுகிறது தெரியுமா..?
இப்பொழுது “விசுவாசம், நம்பிக்கை, அன்பு” இந்த மூன்றும் நிலைத்திருக்கின்றன. இவைகளில் “அன்பே” பெரியது