Skip to content
July 1, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • தியான செய்திகள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Subscribe
  • Home
  • தகவல் களஞ்சியம்
  • கீர்த்தனைக் கவிஞர் தேவவரம் முன்ஷியார் – தமிழ் கிறிஸ்தவ இலக்கியத்தின் முன்னோடி
  • தகவல் களஞ்சியம்
  • வரலாறுகள்

கீர்த்தனைக் கவிஞர் தேவவரம் முன்ஷியார் – தமிழ் கிறிஸ்தவ இலக்கியத்தின் முன்னோடி

Editorial Team July 1, 2026 1 minute read

தமிழ் கிறிஸ்தவ இலக்கிய வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றவர்களில் ஒருவர் கீர்த்தனைக் கவிஞர் தேவவரம் முன்ஷியார். கவிஞர், கீர்த்தனையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், அகராதியாளர், இறையியல் அறிஞர், ஜெபவீரர் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய அவர், தமிழ் கிறிஸ்தவ இலக்கிய வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்தார்.

பிறப்பு மற்றும் குடும்பப் பின்னணி

தேவவரம் முன்ஷியார் 1802-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மயிலாடி கிராமத்தில், சிவனான் – ஞானாயி தம்பதியருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். அவரது தந்தை சிவனான், தென்னிந்தியாவின் முதல் கிறிஸ்தவ முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் மகராசன் வேதமாணிக்கம் தேசிகரின் மூத்த சகோதரர் ஆவார்.

1806-ஆம் ஆண்டு ஜெர்மன் மிஷனரியான அருள்திரு. வில்லியம் டோபியாஸ் ரிங்கல்டௌபே (William Tobias Ringeltaube) மயிலாடியில் சுவிசேஷப் பணியைத் தொடங்கியபோது, திருமுழுக்கு பெற்ற முதல் 40 விசுவாசிகளில் தேவவரமும் ஒருவர். அப்போது அவரது தந்தை சிவனான், “ஞானாபரணம்” என்ற கிறிஸ்தவப் பெயரை ஏற்றுக்கொண்டார்.

இளமைப் பருவம்

“விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்ற பழமொழிக்கேற்ப, சிறுவயதிலேயே தேவவரம் கல்வியிலும் வேதாகம அறிவிலும் சிறந்து விளங்கினார். சிறுவர்களிடையே வேதாகம வசனங்களை மனப்பாடமாகச் சொல்லும் போட்டிகளை நடத்துவது ரிங்கல்டௌபே போதகரின் வழக்கமாக இருந்தது. அவற்றில் தொடர்ந்து வெற்றி பெற்று பரிசுகளைப் பெற்றவர் தேவவரம்.

கல்வியும் புலமையும்

1809-ஆம் ஆண்டு மயிலாடியில் தொடங்கப்பட்ட ஆங்கிலப் பள்ளி பின்னர் நாகர்கோவிலில் இறையியல் கல்வி நிலையமாக மாற்றப்பட்டது. அங்கு கல்வி கற்ற முதல் மாணவர்களில் தேவவரமும் ஒருவர்.

அவரது திறமையைக் கண்ட அருள்திரு. சார்லஸ் மீட் (Charles Mead), தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உயர்கல்வி கற்க அனுப்பினார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், வானியல், அறிவியல், இசை போன்ற பல துறைகளில் தேர்ச்சி பெற்றார். குறிப்பாக சமஸ்கிருதத்தில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.

படிப்பை முடித்த பின்னர், நாகர்கோவிலில் மீட் போதகரின் நற்செய்திப் பணியில் உதவியாளராகச் சேர்ந்தார்.

கவிஞராக உயர்ந்தவர்

புகழ்பெற்ற கிறிஸ்தவக் கவிஞர் ஜான் பால்மருக்குத் தமிழ் இலக்கியப் பயிற்சி அளித்த திருவம்பலத் திண்ணமுத்தம் பிள்ளையிடமே தேவவரமும் தமிழ் இலக்கணமும் கவிதை இயற்றும் முறைகளையும் கற்றார்.

அவரது கவிதைகள் செம்மையான தமிழிலும் ஆழமான வேதாகமக் கருத்துகளுடனும் அமைந்திருந்தன. கிறிஸ்தவ சத்தியங்களைத் தெளிவாகவும் வலிமையாகவும் எடுத்துரைத்த அவரது படைப்புகள், தமிழ் இலக்கிய அறிஞர்களின் பாராட்டைப் பெற்றன. அவரது புலமையைக் கண்டு அறிஞர்கள் அவரை “தோமுனி” என்று அழைத்தனர். பின்னர் அதுவே “முன்ஷி” என்ற பட்டமாக நிலைத்தது.

ஜெபவீரர்

தேவவரம் முன்ஷியார் ஒரு சிறந்த ஜெபவீரராகவும் விளங்கினார். நெய்யூரில் மீட் போதகருடன் தங்கியிருந்த காலத்தில், அங்குள்ள பாறை ஒன்றின் மீது தனியாகச் சென்று நீண்ட நேரம் ஜெபிப்பது அவரது அன்றாட வழக்கமாக இருந்தது.

ஒருமுறை ஜான் பால்மர், நத்தானியேல் செட்டியார் மற்றும் தேவவரம் முன்ஷியார் ஆகியோர் உலக்கை அருவிக்கு சென்றபோது, வேதாகமம் எவரிடமும் இல்லாததை உணர்ந்தனர். அப்போது, “இயற்கையே தேவனுடைய மகிமையை அறிவிக்கிறது” என்று சங்கீதங்களை நினைவுகூர்ந்து, மனப்பாடமாக வேதாகமத்தை விளக்கி ஜெபித்தார்.

அவரது பக்தியையும் ஞானத்தையும் கண்டு, பொதுமக்கள்கூட அவரை மரியாதையுடன் “ஐயா” என்று அழைத்தனர்.

தேவவரம் முன்ஷியாரின் கீர்த்தனைகள்

இவர் எழுதிய பல கீர்த்தனைகளில் இன்று கிடைப்பவை ஒன்பது மட்டுமே.

  1. அடியேன் மனது வாக்கும்
  2. அதிமங்கலக் காரணனே
  3. இயேசு நாயகனைத் துதிசெய்
  4. காரும் கிறிஸ்தேசுவே
  5. சேரும் கிறிஸ்தேசுவே எனைச் சேரும்
  6. தேவசுதன் பூவுலகோர்
  7. நித்தமும் சிந்தித்து சிந்தித்து
  8. வருவார் விழித்திருங்கள்
  9. வாரும் தேற்றரவரே

பிற இலக்கியப் படைப்புகள்

கீர்த்தனைகள் மட்டுமல்லாமல், பல முக்கியமான கிறிஸ்தவ இலக்கிய நூல்களையும் அவர் இயற்றினார்.

  • வேதவிதிக்குறள் – திருக்குறள் வடிவில் கிறிஸ்தவ அறக்கருத்துகளை வழங்கும் நூல்.
  • திருட்டாந்த மாலை – விவிலிய அடிப்படையிலான கிறிஸ்தவ ஒழுக்க வாழ்வை எடுத்துரைக்கும் நூல்.
  • சிந்து கவிமாலை – பல்வேறு கீர்த்தனைகள் அடங்கிய தொகுப்பு.
  • செம்மொழி மாலிகை – ஆத்திச்சூடியைப் போன்று சுருக்கமான கிறிஸ்தவ போதனைகளை வழங்கும் நூல்.
  • சங்கீத வாரணம் – தாவீதின் சங்கீதங்களைப் பாடல் வடிவில் வழங்கும் படைப்பு.
  • நல்லறிவின் சாரம் – வினா-விடை வடிவில் வேதாகம உண்மைகளை விளக்கும் நூல்.

அகராதிப் பணிகள்

தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தேவவரம் முன்ஷியார் முக்கிய பங்களிப்பு செய்தார்.

அவர் உருவாக்கிய அகராதிப் பணிகளில்:

  • சதுரகராதி
  • வினையகராதி (அல்லது பஞ்சகராதி)
  • வேத அகராதி
  • பெயரகராதி

ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் சில முழுமையடையாமல் கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்து விட்டன.

கைப்பிரதிக் கழகப் பணி

1830-ஆம் ஆண்டு நெய்யூரில் மீட் போதகர் தொடங்கிய கைப்பிரதிக் கழகத்தில் செயலர், முதன்மை எழுத்தர் மற்றும் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். சுமார் 150-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கையெழுத்து நூல்களைத் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

சமகால அறிஞர்களின் பாராட்டு

கீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மர், “தேவவரம் தேசிகரின் ஆழமான இலக்கியப் புலமையை அவருடைய பாடல்களை அறிந்தவர்கள் தனியே உணர்வார்கள்” என்று பாராட்டியுள்ளார்.

அருள்திரு. அ. வேதக்கண் அவரைப் பற்றி எழுதுகையில், “அவருடைய தமிழ்ப் புலமை, தேவபக்தி, ஊழிய ஆர்வம் ஆகியவற்றை மிஷனரிகள் மிகுந்த மரியாதையுடன் மதித்தனர். அவர் குருப்பட்டம் பெறாதிருந்தாலும், அதற்குத் தகுதியானவராக அனைவராலும் கருதப்பட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் இறுதிக்கால ஊழியம்

பின்னர் தேவவரம் முன்ஷியார் திருவனந்தபுரத்தில் தங்கி, அங்குள்ள கிறிஸ்துநாதர் ஆலயத்தில் பல ஆண்டுகள் தமிழ் ஆராதனைகளை நடத்தினார். அந்தக் காலகட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ இலக்கியங்களையும் உருவாக்கினார்.

குடும்பச் சோதனைகள், குறிப்பாக தனது மகனின் மரணம் உள்ளிட்ட துயரங்கள் காரணமாக சில படைப்புகள் முழுமை பெறாமல் போயின.

ஆண்டவருக்குள் இளைப்பாறல்

தமிழ் கிறிஸ்தவ இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பைச் செய்த தேவவரம் முன்ஷியார், 1874-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் ஆண்டவருக்குள் நித்திரையடைந்தார். அவரது உடல் அங்குள்ள கிறிஸ்துநாதர் ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழ் கிறிஸ்தவக் கீர்த்தனை மரபையும் இலக்கியத்தையும் வளப்படுத்திய முன்னோடிகளில் தேவவரம் முன்ஷியார் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். அவரது பாடல்களும் இலக்கியப் படைப்புகளும் இன்று வரை தமிழ் கிறிஸ்தவ வரலாற்றின் விலைமதிப்பற்ற செல்வமாகத் திகழ்கின்றன.

நன்றி: மயிலாடி

Post navigation

Previous: பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே – ஒரு நித்திய அடைக்கலத்தின் கீர்த்தனை
Next: கீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மர் – தமிழ் கிறிஸ்தவக் காப்பிய இலக்கியத்தின் முன்னோடி

இதையும் படிக்கலாம்

  • கட்டுரைகள்
  • தகவல் களஞ்சியம்

மனித உடலின் மூலப்பொருட்கள் – வேதாகமமும் அறிவியலும் கூறும் உண்மை

Editorial Team July 1, 2026
  • கட்டுரைகள்
  • தகவல் களஞ்சியம்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு

Editorial Team July 1, 2026
Hamath.jpg
  • கட்டுரைகள்
  • தகவல் களஞ்சியம்

வேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் – Hittites

Editorial Team July 1, 2026

பாடல் பிறந்த கதை

  • தகவல் களஞ்சியம்
  • பாடல் பிறந்த கதை

நான் பாவிதான் – பாடல் பிறந்த கதை

Editorial Team July 1, 2026
ஜீவிக்கிறார்! இயேசு ஜீவிக்கிறார்! பாடல் பிறந்த கதை
  • தகவல் களஞ்சியம்
  • பாடல் பிறந்த கதை

ஜீவிக்கிறார்! இயேசு ஜீவிக்கிறார்! பாடல் பிறந்த கதை

July 1, 2026
ராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் – நூற்றாண்டுகளைக் கடந்த கிறிஸ்துமஸ் கீதம்
  • தகவல் களஞ்சியம்
  • பாடல் பிறந்த கதை

ராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் – நூற்றாண்டுகளைக் கடந்த கிறிஸ்துமஸ் கீதம்

July 1, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • பிரசங்க குறிப்புகள்
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • பிரசங்க குறிப்புகள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • பிரசங்க குறிப்புகள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

  • கதைகள்
  • தகவல் களஞ்சியம்

பிறனிடத்திலும் அன்புகூருவாயாக

Editorial Team July 1, 2026
willium+tintel.jpg
  • தகவல் களஞ்சியம்
  • வரலாறுகள்

சத்தியத்திற்காக தங்கள் உயிரைப்பலி கொடுத்த வில்லியம் டின்டேல்

Editorial Team July 1, 2026
  • கட்டுரைகள்
  • தகவல் களஞ்சியம்

மூன்று “ஐயோ” நகரங்கள்

Editorial Team July 1, 2026
  • தகவல் களஞ்சியம்
  • தகவல்கள்

தேவனின் நாமங்கள்

Editorial Team July 1, 2026

Kingdom Network is a registered Tamil news platform delivering accurate and timely news from Tamil Nadu, India, and around the world. We are committed to responsible journalism, factual reporting, and editorial excellence.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.