1. வீட்டைக் கட்டுகிறார்
“கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்.” (1 சாமுவேல் 25:28)
“அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்.” (2 சாமுவேல் 5:11)
காரணம்: தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார். (2 சாமுவேல் 5:10)
2. வீட்டை ஆசீர்வதிக்கிறார்
“கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.” (2 சாமுவேல் 6:11)
“கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.” (2 சாமுவேல் 6:12)
“கர்த்தர் ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.” (1 நாளாகமம் 13:14)
“நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு.” (நீதிமொழிகள் 15:6)
காரணம்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அந்த வீட்டில் இருந்தது.
3. வீட்டைப் பாதுகாக்கிறார்
“நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ?” (யோபு 1:10)
காரணம்: (யோபு 1:8)
- உத்தமன்
- சன்மார்க்கன்
- தேவனுக்குப் பயந்து நடந்தவன்
- பொல்லாப்புக்கு விலகியவன்
4. வீட்டில் சுகமாய் தங்கப்பண்ணுகிறார்
“கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.” (சங்கீதம் 4:8)
“நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக.” (ரூத் 1:9)
“அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கிற்று.” (மத்தேயு 8:15)
காரணம்:
- நீதியின் பலிகளைச் செலுத்துதல்
- கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருத்தல் (சங்கீதம் 4:5)
- இயேசுவின் பிரசன்னம் வீட்டில் இருப்பது (மத்தேயு 8:14)
5. வீட்டில் சமாதானம் தருகிறார்
“உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.” (சங்கீதம் 122:7)
6. வீட்டை இரட்சிக்கிறார்
“இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது.” (லூக்கா 19:9)
காரணம்: சகேயு மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்டான். கர்த்தர் அவன் வீட்டிற்கு இரட்சிப்பைக் கொண்டுவந்தார்.
முடிவுரை
கர்த்தர் வீட்டைக் கட்டுகிறார்.
கர்த்தர் வீட்டை ஆசீர்வதிக்கிறார்.
கர்த்தர் வீட்டைப் பாதுகாக்கிறார்.
கர்த்தர் வீட்டில் சுகமாய் தங்கப்பண்ணுகிறார்.
கர்த்தர் வீட்டில் சமாதானம் தருகிறார்.
கர்த்தர் வீட்டை இரட்சிக்கிறார்.
“கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா.” (சங்கீதம் 127:1)