ஒருவர் நம்மிடம் “கர்த்தர் சொன்னார்” என்று ஒரு செய்தியை பகிரும் போது, அதை நாம் நிதானமாக பரிசோதிக்க வேண்டும். ஏனெனில்,
- அது வெறும் தோன்றலாக அல்லது கற்பனையாக கூட இருக்கலாம்.
- அது உணர்ச்சியின் அடிப்படையில் வந்த ஒன்றாக கூட இருக்கலாம்.
- நம்மை ஏமாற்றும் பொய்யான செய்தியாக கூட இருக்கலாம்.
- ஆழமான புரிதல் இல்லாமல் சாதாரணமாக சொல்லப்பட்ட வார்த்தையாக கூட இருக்கலாம்.
- நம்மை திருப்திப்படுத்துவதற்காக சொல்லப்பட்ட செய்தியாக கூட இருக்கலாம்.
- நம் சூழ்நிலையை அறிந்து, அதற்கேற்ப உருவாக்கப்பட்ட செய்தியாக கூட இருக்கலாம்.
- நம்மை புகழ்வதற்காக சொல்லப்பட்ட வார்த்தையாக கூட இருக்கலாம்.
எனவே “தேவன் பேசினார்” என்று சொல்லப்படும் காரியங்களை நாம் கவனமாக பரிசோதிக்க வேண்டும்.
தேவன் உண்மையாக பேசினால்:
- அதில் பொய், வஞ்சகம், தந்திரம் மற்றும் சூழ்ச்சிகள் இருக்காது. அதில் உண்மையும், சத்தியமும், மாறாத தன்மையும் இருக்கும்.
It will be truth alone.
- அது கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கையையும், விசுவாசத்தையும், அவரை சார்ந்திருக்கும் மனநிலையையும் அதிகரிக்கும்.
It will lead us to rely on God.
- அது நம்மை உடைக்கும், உருவாக்கும், சீர்படுத்தும், தேற்றும், தாழ்மைப்படுத்தும் மற்றும் மனந்திரும்புதலை உருவாக்கும்.
It will transform us.
- சுய புகழ்ச்சியை விட தேவ புகழ்ச்சி உண்டாகும். எல்லா மகிமையும், கனமும் கர்த்தருக்கே செலுத்தப்படும்.
Ultimately God will receive honor and glory.
- ஏற்கனவே எழுதப்பட்ட தேவ வார்த்தைக்கும், வேதாகம சத்தியத்திற்கும் ஒருபோதும் முரண்படாது.
It will never contradict the written Word of God.
- சரியான தீர்மானம் எடுக்கவும், பிரச்சனைகளை சரி செய்யவும் தேவையான ஞானம், புத்தி மற்றும் அறிவை கொடுத்து நம்மை வழிநடத்தும்.
It will produce wisdom and knowledge.
- அது நம்மை தேவ சித்தத்தில் செயல்பட வைக்கும். நெருக்கடிகள் மற்றும் சாதகமற்ற சூழ்நிலைகள் இருந்தாலும், முன்னேற தேவையான தைரியம், உற்சாகம், உள்ளான பலம் மற்றும் வழிநடத்துதல் கிடைக்கும்.
It will give us strength, power, provision and courage.
- குழப்பம் மற்றும் முரண்பாடுகளுக்கு பதிலாக தெளிந்த புத்தி, தேவ சமாதானம், உள்ளான சந்தோஷம் மற்றும் ஆறுதல் பெருகும்.
It will give us surpassing peace and joy.
- தீர்க்கதரிசனம் சொல்லும் நபரின் வாழ்க்கையையும் வெளிப்படுத்தும். ஏனெனில் தேவ வார்த்தையை அறிவிக்கும் நபரின் வாழ்க்கை கனிகளும் முக்கியமானவை.
It will reveal the prophets.
- அது தேவ வல்லமையை வெளிப்படுத்தும். தேவனிடமிருந்து வரும் வார்த்தை வெறுமையாக திரும்பாமல், தேவ நோக்கத்தை நிறைவேற்றும்.
It will reveal divine power.
ஒவ்வொரு ஆவிக்குரிய செய்தியையும் நிதானத்தோடும், தேவ வார்த்தையின் வெளிச்சத்திலும் பரிசோதித்து நடப்போம்.
கர்த்தர் கிருபை தருவாராக.
– செலின்
ஒருவர் “கர்த்தர் சொன்னார்” என்று சொல்லும் போது, அதை தேவ வார்த்தை, சத்தியம், ஆவிக்குரிய கனிகள் மற்றும் தேவ சமாதானத்தின் அடிப்படையில் எப்படி பரிசோதிக்க வேண்டும் என்பதை விளக்கும் கிறிஸ்தவ சிந்தனை.
Tags:
God’s Voice, Prophecy, Discernment, Tamil Christian Message, Bible Truth, Spiritual Wisdom, Christian Life, Holy Spirit