Skip to content
July 16, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • கேள்வி பதில்கள்
  • தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்களை தேவ சித்தம் என்று எடுத்துக்கொள்ளாமல், சில கிறிஸ்தவ போதகர்கள் சில அரசியல் நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது ஏன்?
  • கேள்வி பதில்கள்

தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்களை தேவ சித்தம் என்று எடுத்துக்கொள்ளாமல், சில கிறிஸ்தவ போதகர்கள் சில அரசியல் நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது ஏன்?

Editorial Team July 4, 2026 1 minute read
tn_politics

கேள்வி: தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்களை தேவ சித்தம் என்று எடுத்துக்கொள்ளாமல், சில கிறிஸ்தவ போதகர்கள் சில அரசியல் நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது ஏன்?

பதில்:

ஒரு அரசியல் நிகழ்வையோ, தலைவரையோ தேவ சித்தம் என்று சிலர் கருதுவதற்கு அவர்களுக்கு கருத்து சொல்லும் உரிமை இருப்பது போலவே, அதைப் பற்றி வேறுபட்ட ஆவிக்குரிய பார்வையை வெளிப்படுத்துவதற்கும் மற்றவர்களுக்கு உரிமை இருக்கிறது.

எனவே இத்தகைய விஷயங்களில் சகலத்தையும் அறிகிறவர் தேவனே. ஆனாலும் தேவ சித்தம் என்ன என்பதை பகுத்தறியும் ஆவிக்குரிய முதிர்ச்சி கொண்ட ஊழியர்களும், விசுவாசிகளும் எழும்ப வேண்டியது அவசியம்.

யார் மெய்யான கிறிஸ்தவர்கள்?

  1. தேவ ராஜ்யம் வெளிப்பட, பாவத்திலிருந்து மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் விசுவாசித்து, பாவ அறிக்கை செய்து, அவருடைய இரத்தத்தின் மூலம் மீட்பைப் பெற்று, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று, கிறிஸ்துவை தன் வாழ்க்கையில் அறிக்கை செய்கிறவர்.
  2. ஆவிக்குரிய சபை வாழ்க்கையில் இணைந்து, ஜெபம், உபவாசம், உபதேசம், விசுவாசம், ஐக்கியம் ஆகியவற்றில் உறுதியாக நிலைத்திருப்பவர்.
  3. இந்த உலகத்தின் போக்குகளுக்கு ஒத்த வேஷம் போடாமல், நன்மை எது, தீமை எது, தேவ சித்தம் எது என்பதை பகுத்தறியும் புதிய சிந்தை கொண்டவர்.
  4. தேவ சித்தத்தை அறிந்து, தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு கிறிஸ்துவின் ஒளியாக இருந்து, அனுதினமும் சிலுவையை சுமந்து, சுயத்தை வெறுத்து, கிறிஸ்துவைப் போல வாழ தன்னை ஒப்புக்கொடுப்பவர்.
  5. உணர்ச்சிகளால் இழுக்கப்படாமல், தன் ஆவிக்குரிய அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல், இயேசு கிறிஸ்துவை தன் வாழ்க்கையின் மையமாக வைத்து வளர்ந்து செல்பவர்.
  6. தேவ வசனத்தின் படி வளர்ந்து, ஆவியின் கனிகளால் நிறைந்து, செயல்களின் மூலம் கர்த்தரை மகிமைப்படுத்தி வாழ்பவர்.
  7. எல்லாவற்றிற்கும் மேலாக, பரலோக வாஞ்சையோடும், பரிசுத்த ஆவியின் நடத்துதலோடும், இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி வாழ்பவர்.

மெய்யான கிறிஸ்தவன் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவன்

  1. காணப்படுகிறவை அனைத்தும் நிலையற்றவை என்பதை அறிந்திருப்பான். உலகத்தின் தாக்கங்கள் மற்றும் உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல, தேவ சித்தத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுப்பான்.
  2. தந்திரங்களும், வஞ்சனைகளும் அவனை எளிதில் வீழ்த்த முடியாது. ஏனெனில் அவன் விழிப்புணர்வோடும், தேவ ஞானத்தோடும் நடப்பான்.
  3. இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் எதிர்ப்புகளையும், நிந்தைகளையும் சந்தித்தாலும், உண்மையில் நிலைத்திருப்பான்.

பாவத்தை பாவம் என்றும், தீமையை தீமை என்றும், அநியாயத்தை அநியாயம் என்றும் அறிந்து நடப்பதே தேவனை அறிந்த வாழ்க்கையின் அடையாளம்.

  1. வெளிப்புற அடையாளங்கள், வார்த்தைகள் அல்லது தோற்றங்களை மட்டும் வைத்து முடிவு செய்யாமல், ஒருவரின் வாழ்க்கையின் கனிகளையும், செயல்களையும் கவனித்து பகுத்தறிவது ஆவிக்குரிய முதிர்ச்சியின் அடையாளம்.

சவுல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

  1. இஸ்ரவேல் மக்கள் மற்ற ஜாதிகளைப் போல ராஜாவை விரும்பினார்கள். மனித விருப்பமும் தேவ சித்தமும் எப்போதும் ஒன்றாக இருக்காது என்பதை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.
  2. சவுல் வெளிப்புற தோற்றத்தில் சிறப்பாக காணப்பட்டாலும், உள்ளான கீழ்ப்படிதலும் தாழ்மையும் குறைந்தபோது அவரது வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
  3. தேவன் எழுப்பிய தாவீதுக்கு எதிராக சவுல் பொறாமையிலும் பயத்திலும் செயல்பட்டார்.
  4. சவுலின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், கீழ்ப்படிதல் இல்லாத வாழ்க்கையின் விளைவுகளை காட்டுகின்றன.
  5. தேவனை சாராமல் தவறான வழிகளில் தீர்வுகளை தேடியது அவரது வீழ்ச்சிக்கு காரணமானது.

புதிய ஏற்பாட்டு அன்னாள் போல தேவ ராஜ்யத்தை எதிர்பார்த்திருப்போம்

  1. உலக அரசுகள் மனிதனுக்கு முழுமையான மீட்பை தர முடியாது.
  2. மனித தத்துவங்களும், உலக ஞானமும் தேவனுடைய இடத்தை எடுக்க முடியாது.
  3. வெளிப்புற மத வழக்கங்கள் மட்டும் மனிதனுக்கு உண்மையான மாற்றத்தை தராது.
  4. அன்னாள் தேவ ஆலயத்தை விட்டு பிரியாமல் ஜெபத்தோடு தேவ வாக்குத்தத்தத்தை எதிர்பார்த்தது போல, நாமும் தேவ ராஜ்யத்தின் நிறைவேற்றத்திற்காக விழித்திருந்து ஜெபிக்க வேண்டும்.

மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம் விக்கிரகங்களிலிருந்தும், உலக பற்றுகளிலிருந்தும் விலகி தேவனை மையமாக வைத்து வாழ்வதே ஆகும்.

முதிர்ச்சி பெற்ற கிறிஸ்தவன் வஞ்சனைகளில் சிக்காமல், தேவ ஞானத்தோடு தீர்மானம் எடுப்பான்.

வளர்ந்த கிறிஸ்தவன் உணர்ச்சிகளை விட தேவ சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பான்.

உண்மையான கிறிஸ்தவன் கிறிஸ்துவுக்காக பாடுகளையும் சகிப்பான். நீதியை நேசித்து அநியாயத்தை எதிர்ப்பான்.

மனித புகழையும், உலக மகிமையையும் அல்ல; தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய மகிமையையும் தேடி வாழ்வோம்.

கர்த்தர் தமது கிருபையால் நம்மை நடத்துவாராக.

– செலின்

மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளங்கள், தேவ சித்தத்தை பகுத்தறிதல், உணர்ச்சிகளை தாண்டிய விசுவாச வாழ்க்கை மற்றும் தேவ ராஜ்யத்தை எதிர்நோக்கும் ஆவிக்குரிய பார்வை குறித்து விளக்கும் கட்டுரை.

Tags:
True Christian, Tamil Christian Message, Christian Life, God’s Will, Spiritual Discernment, Jesus Christ, Bible Teaching, Christian Devotional

Post navigation

Previous: பரிபூரண தேவ சித்தத்தின் ஆராதனையில் இருக்க வேண்டிய பத்து காரியங்கள்
Next: வாழ்வியல் பாடங்கள் – அனுபவங்கள் கற்றுத்தரும் வாழ்க்கை உண்மைகள்

இதையும் படிக்கலாம்

tn_qa
  • கேள்வி பதில்கள்

கர்த்தர் சொன்னார் என்ற செய்தியை எப்படி பரிசோதிப்பது?

Editorial Team July 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tn_48
  • தியான செய்திகள்

அறியாமையில் இழந்த ஆசீர்வாதம்

Editorial Team July 16, 2026
tn_45
  • தியான செய்திகள்

பொறுமை கடலினும் பெரிது

Editorial Team July 15, 2026
tn_44
  • தியான செய்திகள்

சிறிய கனவு

Editorial Team July 15, 2026
tn_49
  • தியான செய்திகள்

தேவையானது ஒரு தீர்மானம்

Editorial Team July 15, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.