அன்றும் இன்றும்
அந்தியோக்கியாவில் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் மெய்யாக பிரதிபலித்த மக்களையே முதன் முதலில் “கிறிஸ்தவர்கள்” என்று அழைத்தார்கள்.
ஆனால் இன்று…
👉🏻 இவர் கிறிஸ்துவ அரசியல்வாதி
👉🏻 இவர் கிறிஸ்துவ நடிகர் / நடிகை
👉🏻 இவர் கிறிஸ்துவ ரௌடி
👉🏻 இவர் கிறிஸ்துவ விபச்சாரி
👉🏻 இவர் கிறிஸ்துவ சாராய வியாபாரி
👉🏻 இவர் கிறிஸ்துவ லாட்டரி சீட்டு வியாபாரி
👉🏻 இவர் கிறிஸ்துவ போதை வியாபாரி
என்று பல அடையாளங்களோடு அழைக்கப்படும் நிலையை காண்கிறோம்.
ஆனால் உண்மை என்னவென்றால், பெயரளவில் ஒரு அடையாளத்தை வைத்திருப்பது மட்டும் கிறிஸ்துவுக்குரிய வாழ்க்கை அல்ல. கிறிஸ்துவை அறிந்தவர்கள் அவருடைய சுபாவத்தையும், பரிசுத்தத்தையும், அன்பையும் தங்கள் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும்.
எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொண்டு “நான் கிறிஸ்தவன்” என்று சொன்னால் போதும் என்று நினைக்கும் மனநிலை அதிகரிக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.
இப்படிப்பட்ட இந்த நாட்களில் தான் கர்த்தர் பெயரளவிலான அடையாளத்தை அல்ல, உண்மையாக அவரைப் பின்பற்றும் மெய்யான கிறிஸ்தவர்களை தேடுகிறார்.
கர்த்தருடைய கிருபை உண்டாவதாக!
– செலின்
அந்தியோக்கியாவில் முதன் முதலில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டவர்களின் வாழ்க்கையும், இன்றைய பெயரளவு கிறிஸ்தவ அடையாளமும் குறித்து சிந்திக்க வைக்கும் ஆவிக்குரிய கட்டுரை.
Christian Life, True Christian, Jesus Christ, Tamil Christian Message, Faith, Spiritual Thought, Christian Devotional