- சுவிசேஷத்தின் படி இயேசு கிறிஸ்து நல்லவர் என்று பிரசங்கித்தோம். ஆனால் வெளிப்படுத்தின சுவிசேஷத்தின் படி அவர் மகிமையான தேவன், நீதியுள்ள நியாயாதிபதி என்பதை சொல்ல மறந்தோம்.
- கர்த்தர் அன்புள்ளவர் என்றோம். ஆனால் அவர் அன்போடு சிட்சித்து திருத்துகிறவர் என்பதையும் சொல்ல மறந்தோம்.
- கர்த்தர் கிருபையுள்ளவர் என்றோம். ஆனால் அவர் பாவத்தை ஏற்றுக்கொள்ளாத பரிசுத்த தேவன் என்பதையும் சொல்ல மறந்தோம்.
- கர்த்தர் வல்லமையாக உயர்த்துவார், பெரிதாக பயன்படுத்துவார் என்றோம். ஆனால் பயன்படுத்தப்படுவதற்கு முன், இயேசு கிறிஸ்துவின் தாழ்மையும், கீழ்ப்படிதலும், பாடுகளை சகிக்கும் மனப்பான்மையும் நம்மில் உருவாக வேண்டும் என்பதை சொல்ல மறந்தோம்.
- கர்த்தர் வரங்களால் நிரப்புவார் என்றோம். ஆனால் ஆவிக்குரிய வரங்களோடு சேர்ந்து ஆவியின் கனிகளும் நம் வாழ்க்கையில் வெளிப்பட வேண்டும் என்பதை சொல்ல மறந்தோம்.
- இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் ஆசீர்வாதங்களை ஆணித்தரமாக பிரசங்கித்தோம். ஆனால் அந்த சிலுவையில் அவர் பாடுபட்டு, அவமானத்தை சகித்து, தம்மையே ஒப்புக்கொடுத்தார்; நாமும் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை சொல்ல மறந்தோம்.
- இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் செய்த அற்புதங்களையும், அவர் நமக்காக செய்வதையும் அறிவித்தோம். ஆனால் அவர் மீண்டும் ராஜாவாகவும், நீதியுள்ள நியாயாதிபதியாகவும் வருவார் என்பதை சொல்ல மறந்தோம்.
இன்றைய நாட்களில் முழுமையான சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும். ஆசீர்வாதத்தையும், கிருபையையும் போலவே பரிசுத்தத்தையும், கீழ்ப்படிதலையும், கிறிஸ்துவின் வருகையையும் அறிவிக்கும் வைராக்கியம் நமக்கு தேவை.
கர்த்தருடைய கிருபை நம்மோடு இருப்பதாக!
– செலின்