இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே நமக்கு நன்மையானதும், பூரணமானதுமான வரங்கள் கிடைக்கின்றன.
அதாவது, சிலுவையில் இயேசு கிறிஸ்து நமக்காக பரிகாரியாக தமது இரத்தத்தை சிந்தி மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். இன்றும் அவர் நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்; நாளை அவர் நீதிபதியாக திரும்பி வருவார் என்று விசுவாசிப்பதே உண்மையான சுவிசேஷத்தின் மையம்.
அதுவே இரட்சிப்பின் வழி, மீட்பின் வழி, ஞானத்தின் வழி, பரிபூரணத்தின் வழி, வல்லமையின் வழி, எல்லா பிரச்சனைகளுக்கும் பரிகார வழி, விடுதலையின் வழி, பரலோகத்திற்கும் மகிமைக்கும் வழியாக மாறுகிறது.
இந்த சுவிசேஷத்திற்கு எதிராக வேறொரு செய்தியுடன் எந்த தூதன் வந்தாலும் அவன் சபிக்கப்பட்டவன். இயேசு கிறிஸ்துவோடு நடந்தவரும், அவரைக் குறித்த வெளிப்பாட்டைப் பெற்றவருமான பேதுருவாக இருந்தாலும், “நான் முகமுகமாக எதிர்ப்பேன்” என்ற சுவிசேஷ வைராக்கியம் இந்த கடைசி நாட்களில் நமக்கு வர வேண்டும்.
கர்த்தருடைய கிருபை நம்மோடு கூட இருப்பதாக.
– செலின்
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் அவருடைய இரண்டாம் வருகையை விசுவாசிப்பதே உண்மையான சுவிசேஷம். அவரே இரட்சிப்பு, மீட்பு, விடுதலை மற்றும் பரலோக மகிமைக்கான ஒரே வழி என்பதை நினைவூட்டும் ஆவிக்குரிய செய்தி.
இயேசு கிறிஸ்து, சுவிசேஷம், இரட்சிப்பின் வழி, சிலுவை, இயேசுவின் இரத்தம், மீட்பு, பரலோக வழி, தேவ கிருபை, கிறிஸ்தவ சிந்தனை, Tamil Christian Message, Christian Devotional Tamil,