எல்லாருக்குமே…
- ஆபிரகாமின் ஆசீர்வாத அபிஷேகம் வேண்டும்.
- தாவீதின் விசேஷ அபிஷேகம் வேண்டும்.
- எலியாவின் அக்கினி அபிஷேகம் வேண்டும்.
- மோசேயின் வல்லமையான அபிஷேகம் வேண்டும்.
இதன் பின்னால் இருக்கும் எண்ணம் என்னவென்றால், ஆபிரகாமின் ஆசீர்வாதம், எலியாவின் எதிர்த்து நிற்க முடியாத ஆவிக்குரிய தைரியம், தாவீதின் ராஜரீகம் மற்றும் மோசேயின் தலைமைத்துவம் ஆகியவற்றை பெற வேண்டும் என்பதே.
ஆனால் யாருக்குமே இயேசு கிறிஸ்துவின் மீது இருந்த அபிஷேகம் வேண்டாம் போலத் தோன்றுகிறது. ஏனெனில் அந்த அபிஷேகம் அவருக்கு சொந்த வீட்டைக் கொடுக்கவில்லை; அந்த அபிஷேகம் அவரை படகில் தூங்க வைத்தது; அந்த அபிஷேகம் அவருக்கு பல அவதூறுகளையும், எதிர்ப்புகளையும் கொண்டு வந்தது. இறுதியில் அந்த பாதை அவரை சிலுவை வரை அழைத்துச் சென்றது.
ஆனால் கர்த்தருடைய ஆவியானவர் அவரோடு இருந்து செய்த பலத்த செய்கைகள், அன்றைய காலத்தில் பரிசேயர்களால் விமர்சிக்கப்பட்டது போல, இன்றைக்கும் அதே நிலை தொடர்கிறதோ என்ற ஐயம் எழாமல் இல்லை.
ஆசீர்வாதத்தை மட்டும் அல்ல, கிறிஸ்துவின் தாழ்மையும், தியாகமும், சிலுவையை சுமக்கும் மனப்பான்மையும் நமக்கு வேண்டும்.
கிருபை வேண்டுமே!
– செலின்