Skip to content
July 10, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • உறவுகளை காக்கும் ஆற்றல்
  • தியான செய்திகள்

உறவுகளை காக்கும் ஆற்றல்

Editorial Team July 10, 2026 1 minute read
tn_29

ஒரு தம்பதியரின் திருமணம் மகிழ்ச்சியாக நடைபெற் றது. உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடிய அந்த நிகழ்வு, அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய ஆரம்பமாக அமைந்தது. மணமேடையில் அவர்கள் இருவரும் புன்னகையுடன் அமர்ந்திருந்தனர். எதிர்கால கனவு கள், ஆசைகள், நம்பிக்கைகள் அந்த ஒரு தருணத்தில் கலந்திருந்தது.

அந்த சந்தோஷமான சூழலில், திடீரென ஒரு சிறிய சம்பவம் நடந்தது. ஒரு எலி மேடையின் ஓரமாக வேகமாக ஓடி மறைந்தது. அதை கவனித்த மாப்பிள்ளை, மணப்பெண் ணை நோக்கி மெதுவாக, “அந்தப் பக்கம் எலி ஓடியதை பார்த்தாயா?” என்று கேட்டார்.

மணப்பெண் உடனே பதிலளித்தாள்: “ஆம், பார்த்தேன். ஆனால் அந்தப் பக்கம் இல்லை, இந்தப் பக்கம் தான் ஓடியது.” மாப்பிள்ளை சிரித்தபடி, “இல்லை, நான் தெளிவாக பார்த்தேன்; அது அந்தப் பக்கம் தான் ஓடியது” என்றார்.

மணப்பெண் மீண்டும் வலியுறுத்தினாள்: “இல்லை, நான் பார்த்தது சரிதான்; அது இந்தப் பக்கம் தான் ஓடியது.”

இந்தச் சிறிய கருத்து வேறுபாடு சில நொடிகளில் வாக்குவாதமாக மாறியது. ஆரம்பத்தில் சிரிப்புடன் இருந்த உரையாடல், மெதுவாக உறுதியான வாதமாக மாறியது. இருவரும் தங்கள் கருத்தை நிரூபிக்க முயன்றனர். யாரும் ஒருவருக்கொருவர் இடம் கொடுக்கத் தயங்கவில்லை.

அங்கு இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஒரு எலி எந்த திசையில் ஓடியது என்ற சிறிய விஷயம், அவர்களின் மனநிலையை பாதிக்கும் அளவுக்கு வளர்ந்தது. அந்த ஒரு சிறிய விஷயம், அவர்களின் உறவில் ஒரு சின்ன விரிசலை உருவாக்கியது.

அந்த விரிசல் அங்கேயே முடிந்துவிட்டதா? இல்லை. அந்த நாளின் சிறிய வாக்குவாதம், பின்னர் பெரிய மனக் கசப்புகளுக்குக் காரணமாகியது என்று கூறப்படுகிறது. புரிதல் இல்லாமை, பிடிவாதம், விட்டுக்கொடுக்காத மனநிலை இவையெல்லாம் சேர்ந்து, அந்த உறவை பாதித்தன.

இறைமக்களே, இந்தச் சம்பவம் நமக்கு ஒரு மிக முக்கியமான உண்மையை எடுத்துரைக்கிறது. வாழ்க்கையில் பெரும்பாலான பிரச்சனைகள் பெரிய காரணங்களால் உருவா குவதில்லை. மிகச் சிறிய விஷயங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் அணுகுமுறையே அதை பெரிதாக்குகிறது. ஒரு சிறிய கருத்து வேறுபாடு, நாம் அதை எப்படி கையாளுகிறோம் என்பதையே பொருத்தது. அதை நிதானமாக அணுகினால் அது அங்கேயே முடிந்துவிடும். ஆனால் அதை பிடிவாதமாக எடுத்துக் கொண்டால் அது உறவையே பாதிக்கும் அளவுக்கு வளர்ந்து விடும்.
வாக்குவாதம் எப்போதும் உண்மையை வெளிப்படுத்தாது; அது பல நேரங்களில் மனதை காயப்படுத்தும். “யார் சரி?” என்பதை நிரூபிப்பதில் நாம் அதிகமாக கவனம் செலுத்தும் போது, “உறவு சரியாக இருக்கிறதா?” என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

உறவுகளில் வெற்றி பெறுவது என்பது, மற்றவரை தோற்கடிப்பதல்ல. அது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதி லும், மதிப்பதிலும் இருக்கிறது. பலர், விட்டுக்கொடுத்தால் தாங்கள் பலவீனமானவர்கள் என்று நினைக்கிறார்கள். “நான் ஏன் மௌனமாக இருக்க வேண்டும்?” “நான் சொல்வது தான் சரி” என்ற எண்ணம் அவர்களை வழிநடத்துகிறது. ஆனால் உண்மையில், விட்டுக்கொடுத்தல் என்பது பலவீனம் அல்ல; அது பலத்தின் வெளிப்பாடு. அது மனப்பெருக்கத்தின் அடையாளம். அது அன்பின் செயல்பாடு.

நாம் விரும்பியது கிடைத்தால் மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் நம்மைச் சேர்ந்தவர்களின் நலனுக்காக, நம்முடைய விருப்பத்தை விட்டுக்கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இன்னும் உயர்ந்தது. அது உறவுகளை ஆழமாக இணைக் கும். ‘விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை’ என்ற பழமொழி ஒரு சாதாரண சொல் அல்ல; அது வாழ்க்கையை காக்கும் ஞானம்.

குடும்பத்தில் அமைதி நிலைக்க வேண்டுமானால், தாய் தந்தை, கணவன் மனைவி, சகோதரர்கள், நண்பர்கள் அனைவரிடமும் புரிதலும் பொறுமையும் அவசியம். ஒவ்வொ ருவரும் தங்கள் கருத்தில் மட்டும் நிலைத்திருந்தால், எந்த உறவும் நீண்ட நாள் நிலைக்காது.

சில நேரங்களில் மௌனம் பேசுவதைக் காட்டிலும் வலிமையானது. சில தருணங்களில் ஒரு அடி பின்வாங்குவது, உறவை முன்னேற்றும். ஒரு சிறிய “சரி, நீ சொல்வது போல் இருக்கட்டும்” என்ற வார்த்தை கூட பெரிய பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரலாம்.
இறைவேதம் நமக்கு இதை தெளிவாக கற்றுக்கொடுக் கிறது: “தீமைக்குத் தீமையையும் செய்யாதீர்கள்” (1 பேது 3:9). மேலும், “ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து வாழுங்கள்” (கொலோ. 3:18) என்று அறிவுறுத்துகிறது.

இந்த வசனங்கள், உறவுகளில் பணிவு, அன்பு, சமாதானம் ஆகியவை எவ்வளவு முக்கியமானவை என்பதை நினைவூட்டுகின்றன.

இறைமக்களே, வாழ்க்கையில் அமைதி வேண்டுமா? அப்படியானால், நாம் எப்போது பேச வேண்டும், எப்போது மௌனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எப்போது வாதிட வேண்டும், எப்போது விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

உறவுகளை வெல்ல முயற்சிக்காதீர்;
உறவுகளை காக்க முயற்சியுங்கள்.

முடிவாக நினைவில் கொள்ள வேண்டியது: சிறிய வாக்குவாதம் பெரிய பிரிவை உண்டாக்கலாம்.
ஆனால் ஒரு சிறிய விட்டுக்கொடுத்தல் பெரிய உறவை காப்பாற்றும்.

வாக்குவாதம் உறவுகளை உடைக்கும்; விட்டுக்கொடுத்தல் உறவுகளை கட்டும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: அடையாளத்தை அறியாத கழுகு
Next: காணாத கயிறுகள்

இதையும் படிக்கலாம்

tn_31
  • தியான செய்திகள்

ஆழமே உயரத்தின் அடித்தளம்

Editorial Team July 10, 2026
tn_30
  • தியான செய்திகள்

காணாத கயிறுகள்

Editorial Team July 10, 2026
tn_28
  • தியான செய்திகள்

அடையாளத்தை அறியாத கழுகு

Editorial Team July 10, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tn_31
  • தியான செய்திகள்

ஆழமே உயரத்தின் அடித்தளம்

Editorial Team July 10, 2026
tn_30
  • தியான செய்திகள்

காணாத கயிறுகள்

Editorial Team July 10, 2026
tn_29
  • தியான செய்திகள்

உறவுகளை காக்கும் ஆற்றல்

Editorial Team July 10, 2026
tn_28
  • தியான செய்திகள்

அடையாளத்தை அறியாத கழுகு

Editorial Team July 10, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.