ஒரு நாள், ஒரு மனிதன் ஒரு கிராமம் வழியாக அமைதியாக நடந்து கொண்டிருந்தான். அவன் மனம் அமைதி யோடும் கவனத்தோடும் இருந்தது. வழியில் காணப்பட்ட ஒவ்வொரு காட்சியையும் ரசித்தபடி சென்றுகொண்டிருந்தான். அப்போது அவன் கண்கள் ஒரு இடத்தில் நின்றுபோனது. அங்கே சில பெரிய யானைகள் கட்டப்பட்டிருந்தன. அவை மிக வலிமையானவை. ஒரு மரத்தையே பிடுங்கிவிடும் அளவிற்கு சக்தி கொண்டவை. ஆனால் அவற்றை கட்டியிருந் தது மிகவும் மெலிந்த ஒரு கயிறு மட்டுமே.
அந்த கயிறு அவற்றின் காலில் சாதாரணமாக கட்டப்பட்டிருந்தது. அதை பார்த்த மனிதன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். “இவ்வளவு பெரிய யானைகள், இப்படிப் பட்ட பலவீனமான கயிறால் எப்படி கட்டுப்பட்டிருக்கின்றன?” என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது. “இவை விரும்பினால் இந்த கயிறை எளிதில் அறுத்து தப்பிக்க முடியாதா?” என்று அவன் யோசித்தான்.
அவனுடைய குழப்பத்திற்கான விடையை அறிய, அங்கிருந்த யானைப் பாதுகாவலரிடம் அவன் கேட்டான். அவர் சிரித்தபடி ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்தினார்: “இந்த யானைகளை கட்டி வைத்திருப்பது கயிறு அல்ல; அவற்றின் மனதில் இருக்கும் நம்பிக்கை தான்.”
அவர் மேலும் விளக்கத் தொடங்கினார். “இந்த யானை கள் சிறிய கன்றுகளாக இருந்தபோது, இதே மாதிரியான கயிறுகளால் கட்டப்பட்டிருந்தன. அப்போது அவை தப்பிக்க பலமுறை முயன்றன. தங்கள் முழு வலிமையையும் பயன்படு த்தின. ஆனால் அவற்றால் கயிறை அறுத்து விட முடியவில் லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் தோல்வி அடைந்த தால், ஒரு எண்ணம் அவற்றின் மனதில் ஆழமாக பதிந்தது ‘என்னால் முடியாது.’”
காலம் சென்றது. அந்தச் சிறிய கன்றுகள் வளர்ந்து இன்று பெரிய யானைகளாக மாறின. அவற்றின் உடல் வலிமை பல மடங்கு அதிகரித்தது. ஆனால் அவற்றின் மனதில் பதிந்திருந்த அந்த பழைய தோல்வி நினைவு மாறவில்லை. அதனால் தான் இன்று அவற்றால் எளிதில் அறுக்கக் கூடிய கயிறையும் அவை முயற்சி செய்து அறுக்கவில்லை.
உண்மையில், அவற்றை கட்டிப்போட்டது கயிறு அல்ல; அவற்றின் மனதில் பதிந்திருந்த “முடியாது” என்ற நம்பிக்கையே. இறைமக்களே, இந்தச் சம்பவம் நம்முடைய வாழ்க்கையையும் மிகத் தெளிவாக பிரதிபலிக்கிறது. நம்மில் பலர் வெளிப்புற சூழ்நிலைகளால் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நம்முடைய உள்ளத்தில் இருக்கும் எண்ணங்களால்தான் கட்டுப்பட்டிருக்கிறோம்.
என்னால் முடியாது, நான் மாற்ற முடியாது, என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் இப்படிப்பட்ட எண்ணங்க ளே நம்மை கட்டி வைத்திருக்கும் “காணாத கயிறுகள்”.
பல நேரங்களில் கடந்த கால தோல்விகள், பிறர் கூறிய எதிர்மறை வார்த்தைகள், மனக் காயங்கள் இவை எல்லாம் நம் மனதில் பதிந்து, நம்மை முன்னேறாமல் தடுத்து நிறுத்துகின்றன. நாம் முயற்சி செய்யாமல் நின்றுவிடுகிறோம். நம்மிடம் இருக்கும் வல்லமையை மறந்து விடுகிறோம்.
ஆனால் உண்மை என்னவென்றால் நாம் நினைப்பதை விட நாம் மிகவும் வலிமையானவர்கள். தேவன் நமக்குள் வைத்திருக்கும் திறமைகள், அருள், ஆவிக்குரிய வல்லமை இவை அனைத்தும் மிகப் பெரியவை.
சாத்தான் மனிதனை சங்கிலிகளால் கட்டுவதில்லை; எண்ணங்களால் கட்டுகிறான். “நீ தகுதியற்றவன்”, “நீ மாற்றமடைய முடியாது”, “நீ தோல்விக்கே உருவானவன்” என்று பொய்களை நம்பச் செய்கிறான். ஆனால் அவை உண்மைகள் அல்ல; நம்மை அடிமைப்படுத்தும் ஏமாற்றங்கள் மட்டுமே. தேவனுடைய சத்தியம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. நாம் பழைய மனிதர்கள் அல்ல; நாம் புதிய சிருஷ்டிகள். நம்முடைய கடந்த காலம் நம்மை நிர்ணயிக்காது. தேவனுக்குள் நமக்கு புதிய ஆரம்பம் உண்டு.
இதைத்தான் இறைவேதம் கூறுகிறது: “உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர்.12:2).
இந்த வசனம் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை உணர்த்து கிறது. மாற்றம் வெளியில் தொடங்குவதில்லை; அது மனதில் தொடங்குகிறது.
நம்முடைய சிந்தனையை மாற்றினால், நம்முடைய வாழ்க்கையும் மாறும். ஆகையால் நாம் செய்ய வேண்டியது: தேவனுடைய சத்தியத்தால் நமது சிந்தனையை நிரப்ப வேண்டும். கடந்த கால தோல்விகளை விட வேண்டும். புதிய முயற்சியை தொடங்க வேண்டும். ஜெபத்தில் உறுதியாக நிற்க வேண்டும். இவற்றை நாம் நடைமுறைப்படுத்தும்போது, நம்மை கட்டியிருந்த “காணாத கயிறுகள்” தானாகவே தளர்ந்து விடும்.
யானைகள் போல, பழைய தோல்விகளை நினைத்து நின்றுவிடாதீர். தேவன் உங்களுக்குள் வைத்துள்ள வல்லமை யை உணருங்கள். மீண்டும் முயற்சி செய்யத் துணிந்து முன்னேறுங்கள். முடிவாக நினைவில் கொள்ள வேண்டியது: நம்மை கட்டிப்போடுவது வெளிப்புற சூழ்நிலை அல்ல; நம் மனநிலையே.
“நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை நடத்திச்செல்வார்”
இந்த வரிகள் தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் பாடல் வரிகளாகும். ஆம், நம்பிக்கையை மாற்றினால் வாழ்க்கை மாறும்; தேவனுடைய சத்தியம் நம்மை விடுவிக்கும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்