Skip to content
August 26, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • பொறுமை கடலினும் பெரிது
  • தியான செய்திகள்

பொறுமை கடலினும் பெரிது

Editorial Team July 15, 2026 1 minute read
tn_45

ஒரே மரத்தின் ஒரே கிளையில் இரண்டு மாம்பழங்கள் வளர்ந்து கொண்டிருந்தன. வெளியில் பார்த்தால் இரண்டும் ஒரே மாதிரி தோன்றினாலும், அவற்றின் நிலை ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவற்றில் ஒன்று ஏற்கனவே பழுத்து இனிமையடைந்திருந்தது. மற்றொன்று இன்னும் பச்சையாகவே இருந்தது; அது பழுக்க இன்னும் காலம் தேவைப்பட்டது. ஒரே கிளை, ஒரே சூரியன், ஒரே மழை, ஒரே சூழ்நிலை ஆனாலும் வளர்ச்சியின் நேரம் வேறுபட்டது. இந்தச் சிறிய காட்சி, வாழ்க்கையின் மிகப் பெரிய உண்மையை நமக்குக் கற்றுத்தருகிறது: ஒவ்வொருவருக்கும் தன் நேரம் உண்டு.

இறைமக்களே, நம் வாழ்க்கையிலும் இதேபோல பல தருணங்கள் நிகழ்கின்றன. நம்முடன் தொடங்கியவர்கள் சிலர் விரைவில் முன்னேறிவிடுகிறார்கள். அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் உயர்கிறார்கள். ஆனால் நாம் இன்னும் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது. அந்த நேரத்தில் நம் மனதில் பல கேள்விகள் எழுகின்றன. “ஏன் நான் இல்லை?”, “எனக்கு வாய்ப்பு இல்லையா?”, “என் வாழ்க்கை ஏன் இப்படித்தான் இருக்கிறது?” என்று நாம் நம்மையே குறை கூறத் தொடங்குகிறோம். ஒப்பீடு நம் மனதை உடைக்கத் தொடங்குகிறது.

ஆனால் உண்மையில், அது தோல்வி அல்ல. அது தாமதமும் அல்ல. அது தேவன் நிர்ணயித்த நேரம் இன்னும் வரவில்லை என்பதே உண்மை. பச்சை மாம்பழம், பழுத்த மாம்பழத்தைப் பார்த்து குறை கூறாது. அது அவசரப்படாது. அது இயற்கையை நம்பி அமைதியாக காத்திருக்கிறது. ஏனெனில் அது அறிவது ஒன்றே: “என் நேரம் வரும்.” அதே போல நாமும் நம் வாழ்க்கையில் பொறுமையை கற்றுக்கொள்ள வேண்டும். பிறரைப் பார்த்து தளர வேண்டாம். நம்முடைய பயணம் தனித்துவமானது.

இறைமக்களே, பொறுமை என்பது சும்மா காத்திருப்பது அல்ல. அது நம்பிக்கையுடன் காத்திருப்பது. அது உள்ளத்தில் உறுதியுடன் நிலைத்திருப்பது. நாம் காத்திருக்கும்போது, தேவன் நம்மை தயார் செய்து கொண்டிருக்கிறார். நாம் காணாத இடங்களில் அவர் வேலை செய்து கொண்டிருக்கிறார். நாம் நினைப்பதைவிட அவர் திட்டம் பெரியது.

இதைக் காட்டும் ஒரு சிறிய சம்பவம் இருக்கிறது. ஒரு நாள், ஒரு சிறுமி தோட்டத்தில் ஒரு அழகான பூச்செடியைப் பார்த்தாள். அந்த செடி மிகவும் அழகாக மலர்ந்திருந்தது. ஆனால் அதன் அடிப்பகுதியில் சேறும், மாட்டுச் சாணமும் இருப்பதை அவள் கவனித்தாள். “இவ்வளவு அழகான பூ இவ்வளவு அசுத்தமான இடத்தில் இருக்கக் கூடாது” என்று எண்ணினாள். உடனே அந்தச் செடியை வேரோடு பிடுங்கி எடுத்தாள். அதை தண்ணீரால் சுத்தம் செய்து, சுத்தமான இடத்தில் வைத்தாள்.

சில நேரத்தில் அந்தச் செடி வாடத் தொடங்கியது. அதன் அழகு மறைந்தது. பூ சுருங்கி விழுந்தது. அப்போது அங்கு வந்த தோட்டக்காரன் அதைப் பார்த்து வருந்தினார். “இந்த செடி என் தோட்டத்தில் மிகவும் சிறந்தது. அதை ஏன் பிடுங்கினாய்?” என்று கேட்டார். சிறுமி தனது காரணத்தை சொன்னாள். அதற்கு தோட்டக்காரன் அமைதியாக பதிலளித்தார்: “இந்த செடியை அந்த இடத்தில் வைத்ததும் நான் தான். அதற்கு சாணம் போட்டதும் நான் தான். எந்த செடி எங்கு வளர வேண்டும் என்பதை நான் அறிவேன்.”

இந்தச் சம்பவம் நமக்கு ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது. நாம் பல நேரங்களில் நம் வாழ்க் கையின் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளாமல் குறை கூறுகிறோம். “ஏன் இந்த குடும்பம்?”, “ஏன் இந்த வேலை?”, “ஏன் இந்த சோதனை?” என்று கேட்கிறோம். ஆனால் நாம் அறியாதது என்னவென்றால் தேவன் நோக்கமின்றி எதையும் செய்யமாட்டார். நாம் இருக்கும் இடம் ஒரு தவறு அல்ல; அது ஒரு திட்டம். அது ஒரு தண்டனை அல்ல; அது ஒரு தயார் செய்தல்.

நாம் இருக்கும் சூழ்நிலை சில நேரங்களில் சிரமமாக தோன்றலாம். ஆனால் அந்த சூழ்நிலையே நம்மை வளர்க்கும் உரமாக இருக்கலாம். சாணம் இல்லாமல் செடி வளராது. அதேபோல் சோதனை இல்லாமல் மனிதன் வளர முடியாது. நாம் தவிர்க்க விரும்பும் பல அனுபவங்களே நம்மை உயரத்திற்கு கொண்டு செல்லும் படிக்கட்டுகளாக இருக்கின்றன.

இறைவேதம் கூறுகிறது: “தன் இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.”

இந்த வசனம் நமக்கு சொல்லுவது என்னவென்றால், வாழ்க்கையின் சுமைகள் வீணானவை அல்ல. அவை நம்மை உருவாக்கு கின்றன. அவை நம்மை உறுதியாக்குகின்றன. அவை நம்மை உயரத்திற்கு ஆயத்தப்படுத்துகின்றன.

இறைமக்களே, நம்முடைய வாழ்க்கையை மற்றவர் களுடன் ஒப்பிட வேண்டாம். ஒப்பீடு நம்மை தாழ்வாக உணரச் செய்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. ஒவ்வொருவருக்கும் தேவன் தனித்த திட்டம் வைத்திருக்கிறார். ஒருவரின் நேரம் இன்று வந்திருக்கலாம்; மற்றொருவரின் நேரம் நாளை வரும். ஆனால் தாமதமான வெற்றி கூட, சரியான நேரத்தில் வரும் போது, அது நிலையானதாக இருக்கும்.

முடிவாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான்: நேரம் வராத வெற்றி இல்லை. நோக்கம் இல்லாத வாழ்க்கை இல்லை. தேவன் அமைத்த நேரம் தவறுவதில்லை. ஆகையால் நாம் அவசரப்பட வேண்டாம். நாம் புலம்ப வேண்டாம். நாம் நம்பிக்கையை இழக்க வேண்டாம். பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும். ஏனெனில், சரியான நேரத்தில், தேவன் நம்மை உயர்த்துவார். அவர் செய்யும் செயல்கள் தாமதமாக தோன்றலாம்; ஆனால் அவை எப்போதும் துல்லியமானவை. நம் நேரம் வரும். நம் வாழ்க்கையும் இனிமையாய் பழுக்கும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: சிறிய கனவு
Next: அறியாமையில் இழந்த ஆசீர்வாதம்

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026
தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன் david
  • வேதாகம மனிதர்கள்

தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன்

August 24, 2026
ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

August 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

நான் ஆகாதவனாகப் போகாதபடி
  • வியாக்கியான பிரசங்கங்கள்

நான் ஆகாதவனாகப் போகாதபடி

Editorial Team August 26, 2026
wesly
  • தமிழ்நாடு

பிரபல போதகர் அரியலூர் வெஸ்லி ஐயா கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்

Editorial Team August 26, 2026
டோனி வால்பெர்க் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தினார்: “எல்லா மகிமையும் அவருக்கே”
  • சாட்சிகள்

டோனி வால்பெர்க் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தினார்: “எல்லா மகிமையும் அவருக்கே”

Editorial Team August 25, 2026
101 போட்டிகளில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: “எல்லா மகிமையும் தேவனுக்கே” என தலைமை பயிற்சியாளர் நெகிழ்ச்சி
  • உலகம்

101 போட்டிகளில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: “எல்லா மகிமையும் தேவனுக்கே” என தலைமை பயிற்சியாளர் நெகிழ்ச்சி

Editorial Team August 25, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.