John D. Rockefeller உலக வரலாற்றில் மிகச் சிறந்த செல்வந்தர்களில் ஒருவராக அறியப்படுகிறார். ஆனால் அவர் செல்வத்தை எளிதில் பெறவில்லை. கடின உழைப்பு, ஒழுக்கம், தொடர்ந்து முயற்சி ஆகிய இவற்றின் மூலம் படிப்படியாக உயர்ந்தவர்.
ஒரு நாள் அவர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். விமானம் உயரத்தில் அமைதியாக பறந்து கொண்டிருந்தது. அந்த நேரத்திலும் அவர் ஓய்வெடுக்காமல் தனது அலுவல் பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தார்.
அதைப் பார்த்த ஒரு இளைஞன் ஆச்சரியத்துடன் கேட்டான்: “ஐயா, நீங்கள் இவ்வளவு உயரம் அடைந்துள் ளீர்கள். இப்போது ஓய்வு எடுத்துக்கொள்ளலாமே?”
ராக்ஃபெல்லர் சிரித்தபடி பதிலளித்தார்: “இந்த விமானத்தை விமானி உயரத்திற்கு கொண்டு வந்துவிட்டார். இப்போது அது எளிதாக பறந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நேரத்தில் விமானி ‘இப்போது ஓய்வு போதும்’ என்று எண்ணி இயந்திரத்தை அணைத்துவிட்டால் என்ன ஆகும்?”
இளைஞன் உடனே, “அது விபத்தாகிவிடும். விமானம் கீழே விழும்!” என்றான். அதற்கு ராக்ஃபெல்லர் அமைதியாக கூறினார்: “அப்படியே வாழ்க்கையும். நான் கடின உழைப்பின் மூலம் இந்த உயரத்தை அடைந்தேன். இப்போது உழைப்பை நிறுத்தினால், நான் அடைந்ததை இழந்து விடுவேன். உழைப்பு என்பது உயரம் அடைவதற்காக மட்டுமல்ல; அதை நிலைநிறுத்துவதற்கும் அவசியம்.”
இந்த நிகழ்வு நமக்கு ஒரு முக்கியமான உண்மை யை உணர்த்துகிறது. வாழ்க்கையில் ஓய்வு அவசியமானது, ஆனால் சோம்பல் ஆபத்தானது. ஒரு நிலையை அடைவது முக்கியம்; ஆனால் அந்த நிலையைத் தக்கவைத்துக் கொள்வது இன்னும் முக்கியம்.
பலர் வாழ்க்கையில் ஒரு உயரத்தை அடைந்தவுடன், “இதுபோதும்” என்று நின்றுவிடுகிறார்கள். ஆனால் அங்கேயே சரிவு ஆரம்பமாகிறது. வளர்ச்சியைத் தொடர, தொடர்ந்து முயற்சியும் உழைப்பும் அவசியம்.
உழைப்பு என்பது வெறும் பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல. அது நமது மனநிறைவை வளர்க்கிறது, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்கிறது. செயலில் இருக்கும் மனிதனே முன்னேறுகிறான்.
இறைவேதமும் இதையே வலியுறுத்துகிறது: நம் கைக்கு கிடைக்கும் காரியத்தை முழு பலத்துடன் செய்ய வேண்டும். ஜாக்கிரதையுடன் உழைக்கும் மனிதன் உயர் வான்; சோம்பேறி பின்னடைவே காண்பான்.
ஆகையால், நாம் வாழ்க்கையில் அடைந்த உயரத் தில் நின்றுவிடாமல், தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். ஒழுக்கமான உழைப்பும் தாழ்மையான மனநிலையும் இருந் தால், நாம் உயரத்தையும் நிலைத்தன்மையையும் ஒன்றாகப் பெற முடியும்.
உச்சத்தை அடைவது சாதனை எனில்;
அதைத் தக்கவைத்தல் தான்
உண்மையான வெற்றி..!
– போதகர். பெ. பெவிஸ்டன்